siruppiddy

27/2/14

பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நிபுணர்கள் குழு

இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை கண்டறிய பொருளாதார நிபுணர்களை கொண்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ விதாரண ஆகிய அமைச்சர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

பொருளாதார தடைகளை விதிக்க கூடிய அளவில் பாரதூரமான நிலை தற்போது ஏற்படவில்லை என்றாலும் நிலைமை மோசமாகி இறுதியில் அப்படியான நிலைமை உருவாகினால் அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றின் ஊடாக விடயங்களை ஆராய்வது முக்கியமானது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

25/2/14

இந்தியாவுடன் பேச வேண்டியுள்ளது – சுரேஸ் பிறேமச்சந்திரன்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் புதுடெல்லி செல்லும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திருட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தும்.
வரும் 3ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பரப்புரைக்கு மேலதிகமாக இது இடம்பெறும்.
தீர்மானம் தொடர்பாக, கூட்டமைப்பின் நாடாளுமன்றமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம்.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆரதரவு தரும் நாடுகளுடன் நாம் பேச வேண்டும்.
தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம், சிறிலங்காவிலும், ஜெனிவாவிலும் உள்ள ஆதரவு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பேசுவோம்.
ஜெனிவா செல்லும் குழு குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.  இந்தியாவுக்கும் ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.
நாம் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை உள்ளது. பெரும்பாலும் அங்கு செல்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜெனிவா தீர்மானம் மற்றும் இரணைமடு நீர் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த, நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூடமைப்பின் உயர்மட்டக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளது.

இரா.சம்பந்தன் தலையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

9/2/14

திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்

சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.
திருமலையில் ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், 5 மணிக்கு திருமலையில் உள்ள ஆந்திர மாநில கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையமான லேப்பாக்சிக்கு சென்று இந்திய கலாச்சார உடையான புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவர் கடைக்குள் இருக்கும் வரை வேறு வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிராந்தி இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். இவருடன் 33 பேர் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

6/2/14

குண்டுமீட்கப்பட்டது திருமலையில்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு  கடற்கரைக்குபின் புறமாக முப்பது கிலோநிறை கொண்ட குண்டு  ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.   இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு  முப்பது கிலோநிறை கொண்டது.  நான்கு அடி நீளம் கொண்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இலங்கையில் இவ்வாறன குண்டு இதுவரை காலமும் பாவிக்கப்படவில்லை என்று கடற்படையினரும், இராணுவத்தினரும் தெரிவிக்கின்றனர்.   அந்த குண்டை சலப்பையாறு கடற்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.