siruppiddy

27/10/14

தமிழ் மக்களுக்கான நல்ல தோர் சிறந்த கொள்கையை அமைக்க???

ஈழத் தமிழர்களுக்கான ஒரு வலுவான அரசியல் வெளியுறவுக் கொள்கையை
    தமிழ்நாடு முதல்வர் அமைக்க வேண்டும்- அனந்தி சசிதரன்
[காணொளி இணைப்பு]


26/10/14

சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் கமலேஷ் சர்மாவுக்கும் இடையில் சந்திப்பு

 யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று காலை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இன்று மதியம் 12.30 மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணம் வந்த கமலேஷ் சர்மா வடக்கு ஆளுநரைச் சந்தித்தபின் சிவில் பிரதிநிதிகளை மதியம் சந்தித்து கலந்துரையாடினார். எனினும் வடக்கு மாகாணத்தில் இருந்தும் பாதிரியார்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்த நிலையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த சிவில் பிரதிநிதிகள் என சொல்லக்கூடிய அளவில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் குறித்த சந்திப்புக்கு அதிகளவானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பு இரகசிய சந்திப்பாக இருப்பதனால் ஊடகவியலாளர்களுக்கு செய்தியை எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் செயலரும்

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவில்லை. மாறாக வெளியில் வரும் போது புகைப்படம் மாத்திரம் எடுக்க முடியும் என்றும் ஊடகங்களுக்கு கருத்து கேட்க முடியாது எனவும் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

25/10/14

வட மாகாண சபையில் நிறைவேற்றத் தடையேதும் இல்லை: தமிழ் அமைப்பு

 இனப் படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானம் ஒன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எந்தத் தடைகளும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தவும் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோரவும் வட மாகாண சபைக்குத் தடை ஒன்றும் இல்லை என அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் மீது நடத்தப்பட்டதும், நடத்தப்படுவதும் இன அழிப்பே என வட மாகாண சபையில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையை பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருந்தது.
இந்த நிலையிலேயே கல்விமான்கள், சட்டத்தரணிகள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டோரைக் கொண்ட தமிழ் சிவில் சமூக அமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ் சிவில் சமூகம் விடுத்துள்ள அந்த அறிக்கையில்..
( இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ – சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்.
இனப்படுகொலை தொடர்பில் வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதன் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்துக்கள் வருமாறு:-
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட, தொடர்ந்தும் நடத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது.
தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது.
1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948 ஆம் ஆண்டு சமவாயம் இனப்படுகொலையைத் தடுப்பதையும், இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது.
இச்சமவாயமானது இனப்படுகொலை என்பதை ஒரு தேசிய இன அல்லது ஒரு மத குழுமத்தை முற்றாக அல்லது பகுதியாக அழித்தல் என வரைவிலக்கணப்படுத்துகிறது (இனப்படுகொலை சமவாயத்தின் 2 ஆம் உறுப்புரை).
மேலும் இனப்படுகொலையானது மரபு சார் சர்வதேச சட்டத்தினால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீறப்படமுடியாத ஒரு விதியாக அடையாளங் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் ஒரு தேசிய அல்லது இனம் சார் குழும வகைக்குரியவர்கள் என்பது மறுத்துரைக்கப்பட முடியாதது.
2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ரோம் சட்டமானது இனப்படுகொலை (உறுப்புரை 6), போர்க்குற்றங்கள் (உறுப்புரை 8), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (உறுப்புரை 7) ஆகிய மூன்றையும் குற்றங்களாக வரையறுத்துள்ளது.
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடத்தப்படும் கொடுமைகளை விசாரிக்கும் எந்தவொரு விசாரணையிலும் இனப்படுகொலை உட்பட மேற்குறித்த மூன்று வகையான குற்றங்களும் விசாரிக்கப்படுதல் அவசியமானதாகும்.
போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கு மேலதிகமாக, இனப்படுகொலை பற்றியும் விசாரிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக் குழுவைக் கோரும் உரிமை தமிழர்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் உண்டு.
இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை நாம் கோருவதானது எமக்கெதிராக நடைபெற்ற சர்வதேச சட்டமீறல்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்தி அதனை விசாரிக்கும் முனைப்பினை உறுதிப்படுத்தும். மேலும் இனப்படுகொலையை விசாரிக்கக் கோருவதானது, ஏனைய குற்றங்களான போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா. விசாரணைக் குழுவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்தாது.
மேலும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் இனப்படுகொலை பற்றிக் குறிப்பிடப்படாமையோ அல்லது ‘இனப்படுகொலை’ என்ற பதத்தை உள்ளடக்காத ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2014 மார்ச் மாத தீர்மானத்தின் உள்ளடக்க வாசகங்களோ, ஐ.நா. விசாரணைக் குழுவானது இனப்படுகொலையை விசாரிப்பதற்குத் தடையாக இருக்க மாட்டாது.
3) தம்மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடாத்தப்படும் கொடூர குற்றங்கள், இனப்படுகொலை என்ற பரிமாணத்திற்குரியது என்பது குறித்த சட்ட ரீதியான கருத்துருவாக்கம் ஒன்றை செய்வதற்கு தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் உரித்துடையவர்கள்.
அவ்வாறான சட்ட ரீதியான ஒரு கருத்துருவாக்கத்தை செய்வதற்கு எமக்கு போதுமான, நியாயமான அடிப்படைகள் உண்டு.
நடந்தது இனப்படுகொலை என்கிற சட்ட நிலைப்பாட்டை எடுத்தல் என்பது அடிப்படைகளற்ற மேம்போக்கான ஒரு முடிவு அன்று.
அவ்வாறே தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுத்து அதிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச தலையீட்டை கோருவதற்கு உரிமையுடையவர்கள்.
இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் சர்வதேச சட்டத்தினால் மனித உரிமைகளாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் இனப்படுகொலை தொடர்பான சமவாயத்தின் மூலமாக இனபடுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேசத்தின் கடப்பாடுகள் உருவாகின்றன.
அண்மைக்காலமாக சர்வதேச சட்டததில் முகிழ்த்துவரும் பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டிலும் (Responsibility to Protect) இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேச சமூகத்தின் கடப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர குற்றங்களை இனப்படுகொலையின் பாற்பட்டவை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தாமே அடையாளம் காணுதல் அது தொடர்பான விசாரணையின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காது.
எனவே, தம்மீது நிகழ்த்தப்பட்ட குற்றம், இனப்படுகொலையின் பாற்பட்டது என தமிழர்கள் அடையாளம் காணுமிடத்து, அது எவ்வகையிலும் ஐ.நா. விசாரணைகளைப் பாதிக்காது.
4) மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு உதாரணங்கள் உண்டு. அவற்றுள் சில:
அ) வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் பாற்பட்டவை என ஈராக்கிய நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
ஆ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பாகிஸ்தான் நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
இ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸ் அவர்கள் 2014 செப்ரெம்பர் ஐ.நா. பொதுச்சபையில் ஆற்றிய உரையில் பதிவு செய்து இருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இரு தரப்புக்களாலும்மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை விசாரிப்பதற்காக ஓர் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்த வேளையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் இக்கருத்தை வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈ) சென்ற நூற்றாண்டின் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலகின் பல்வேறு நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதன.
5. தமிழர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டு தமிழர்களும் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தம்முடைய நிலைப்பாடுகளை தெளி வாக முன்வைக்க வேண்டும்.
தமது பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமென்பதற்காக அப்பிரச்சினைகள் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் உரையாடல்களை தாமே முன்னெடுப்பதற்கும் அவற்றில் பங்கு கொள்வதற்குமான தார்மீக உரிமை தமிழர்களுக்கு உள்ளது.
எனவே,
அ) தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தும்.
ஆ) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும்.
இ) இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம் என்றும் தமிழ் சிவில் சமூக அமைப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21/10/14

முக்கிய புலிகளின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் கைது!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சிக்காது யாழ்ப்பாணம், மல்லாவி பிரதேசங்களில் வசித்து வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 குறித்த நபர்
விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் முக்கிய பதவிகளை வகித்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த 18ம் திகதி கட்டாருக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது விமான நிலையத்தில் குறித்த நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதேவேளை அண்மையில் வவுனியாவில் வைத்து மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/10/14

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த தடை, ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறீலங்கா முழுவதும்   கையொப்பம் பெறும் நடவடிக்கையை இலங்கை அரசின் உத்தரவின் பெயரில் தனியார் போக்குவரத்து அமைச்சு
முன்னெடுக்கவுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை வெள்ளவத்தையில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர்  சிறீலங்கா  ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14/10/14

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுகின்றார்!மஹிந்த ..

நிறைவேற்று அதிகாரத்தை கைவிடுவதற்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார் எனவும் சுரேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்குக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தயார் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தானும் இந்த நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தல் மிக்க அதிகாரமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையானது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றாகும். அவ்வாறிருக்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் மேலெழுந்திருக்கின்றன.
குறிப்பாக இடதுசாரி அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள், பௌத்த மதத் தலைவர்கள் பலர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ஈழக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியைக் குறைப்பதற்குக் கருதுகின்றார்.
உண்மையிலேயே ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது. இது வெறுமனே சிங்கள மக்களை திசைதிருப்புவதற்காக மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப்போடும் ஜனாதிபதியின் முயற்சியாகும். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் அர்த்தமற்றவையெனவும் அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

13/10/14

மகிந்தவுக்கு எதிராக செயற்பட பிக்குகள் தீர்மானம்! சோபித்த தேரர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படுவதற்கு பிக்குகள் தீர்மானித்துள்ளனர்.
சிறிலங்காவில் பெரும்பான்மை ஆதரவை பெற்றி சோபித்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மகிந்தராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இதற்கு மகிந்தரஜபக்ஷ நடவடிக்கை எடுக்க தவறினால், அடுத்த தேர்தலில் அவருக்கு எதிராக செயற்படப் போவதாக சோபித்த தேரர் அறிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

12/10/14

மனதில் அழியாது உங்கள் நினைவுகள் மாவீரரே

போராடி எமைகாத்த வீரர்கள்
 பெளுதெல்லாம் எம் நெஞ்சிலே
 வாழ்கின்ற மாவீரர்கள்
 கார்காலம் கடும்கோடை
 கடும் இருட்டு காடு மோடு
 எனபோராடி மடிந்த வீர்கள்..நீங்கள்
 எங்கள் நினைவுகளை
 போனால் போகட்டும் என்று
 எம் நெஞ்சுக்குளி மறந்திடுமா..?
தீராத பகை ஓட்டி
 நாம் படுத்துறங்க மண்ணை
 சிங்களத்து சிப்பாய்கள்
 சிலிர்து எழுந்தவேளை
 சிறுத்தைகள் சீற்றத்துடன்
 சிம்ம சொற்பனமாய் இருந்த காலத்தை
 சிங்களத்து கொடும் ஆட்சி மறங்திடுமா.?
நாம் பார்போற்ற பயின்தமிர்
 படந்திந்த உலகில்வாழும்போது
 பனித்திரையாய் உள்கள் நினைவுகள்
….. மறைந்திடுமா..?
நீங்கள்…………
லச்சியப்பாதையின் பிள்ளைகளே
 வான் உச்சியில் வெள்ளியாய் நிற்பவரோ
 உம் லச்சியம் நிறைவேற நாம் நடப்போம்
 தமிழ் ஈழ சத்தியம் தவறாது தான் இருப்போம்
 ஈழலச்சியப் பாதைக்காய் நாம் உழைப்போம் என்பதே உறுதி
ஈழக்கவி சி. எஸ்.தேவா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

5/10/14

நடமாடும் விபசாரம்: பெண்கள் மூவர் கைது

 இலங்கையில் அதிகமாகும் வாகனத்தில் நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் மூவரையும் அதனை நடத்திச்சென்றதாக கூறப்படும் நபரையும் பிலியந்தலை கரதியான பாலத்துக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண்கள் மூவரும் 19வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.  

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

2/10/14

பல்லைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்கள் போராட்டம்!

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழத்தில் நடைபெற்ற முடிந்த மாணவர் ஒன்றியத் தேர்தலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி கலைப்பீட மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
1. மாணவர் ஒன்றியத் தேர்தலை மீண்டும் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. மாணவர் ஒன்றியப் பிரதிநிதி பக்கச்சார்பாக நடக்கிறார்.
3. குறித்த பிரச்சினைக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. காலையில் தேர்தல் அறிவிப்பு மாலையில் தேர்தலா?
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, துணைவேந்தருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>