siruppiddy

27/11/14

தமிழரை தலை நிமிரவைத்த காவிய நாயகர்கள் மாவீரர்கள்

அவர்கள் கல்லறைக்கு மலர்கொண்டு செல்லும் நேரம் வருகிறது இதையாரும் மறக்கமாட்டார்கள் அவர்களை நாங்கள் மறந்தால்தானே நினைப்பதற்கு, எமது நெஞ்சமதில் ‌தெய்வமாய் குடி கொண்ட நினைவை மறப்போமா..?
எமது வாழ்வுக்காய். எமது இன உயர்வுக்காய். தங்கள் உளிர்களை துச்சமென மதித்து களமாடி. கரும்புலியாகி. தற்கொடைவீரனாகி. தரணியில் எவரும் செய்ய முடியாத தியத்தை செய்த எமது வீரரை எத்தனை தடைகள் பத்தாலும் எதிரியின் அச்சுறுத்தலுக்காய் எமது தெய்வங்களை
வணங்காதிருப்போமா ….?

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

25/11/14

சுவரொட்டிகளுடன் யாழில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் வீட்டுக்கு அருகில் வைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மாவீரர் தின சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வீரசிங்கம் சுலக்ஷன் தற்போது யாழ். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23/11/14

அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஆலோசனை!

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பது தொடர்பாக, அரசாங்க உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆளும்கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதை அடுத்தே இது குறித்து ஆராயப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் கட்சி பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சுகாதார அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததும், 1988 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாஸ நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதையும் கருத்திற்கொண்டே இந்த முடிவு பற்றி யோசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பு கூறியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதியன்று நாடாளுமன்ற விசேட அமர்வை அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. அதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கியுள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி தலைமையிலான காபந்து அமைச்சரவை அரசாங்கம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/11/14

வலி.வடக்கை சுவீகரிக்க இராணுவம் சதி!

எடுபிடிகள் சகிதம் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையினில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமினில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் குடியமர்ந்த காணிகளை பகிர்ந்தளிக்க இலங்கை இராணுவம் முன்னெடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வலி.வடக்கினை நிரந்தரமாக ஆக்கிரமிக்க ஏதுவாக இடம்பெயர்நத நிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் தற்போது குடியமர்ந்துள்ள காணிகளை பகிர்ந்தளித்து அவர்களது வாய்களை மூடிவிட இலங்கை அரசு முற்பட்டுள்ளது.அவ்வகையில் இன்றைய தினம் அவ்வாறாக மக்கள் தங்கியிருக்கும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம் காணியினை அளவீடு செய்யவென தனியார் நில அளவையாளர்கள் சகிதம் 515 படைப்பிரிவை சேர்ந்த படையினருடன் சுதந்திரக்கட்சியின் உள்ளுர் முகவரொருவரும் களத்தில் குதித்துள்ளனர். இதற்கு முகாமிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோருக்கு தகவல் வழங்கியிருந்தனர். அதையடுத்து அங்கு வந்திருந்த அவர்களும் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. எனினும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரோ தமக்கும் அளவீட்டு பணிகளிற்கும் தொடர்புகள் இல்லையெனவும் பலாலியினிலிருந்து வருகை தந்த படையினரே அளவீடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான காணியையே இடம்பெயர்ந்த மக்களிற்கு பங்கிட்டு வழங்க முயற்சிகள் நடந்துள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

6/11/14

சிங்களமயமாகின்றது! கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி "லங்கா பட்டண" என பெயர் மாற்றம்!

இதிகாசங்களின்படி இராவணனால் உருவாக்கப்பட்ட கோணேசர் கோவிலுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்ட இவ்வெந்நீர் ஊற்று தற்போது பௌத்தம் சார்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அத்துடன் அண்மையில் இருந்த சிவன் கோவிலும் வில்கம் விகாரையாக மாற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்கள் வழிபட்டுவந்த ஒரு கட்டிடத்தின் மூலையில் இருந்த சிவன்-பார்வதியின் வழிபாடும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான புதிய வரலாறும் பிக்குவினால் சிங்களத்தில் ஒலிபெருக்கியில் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சிங்களமக்கள் எவருமே வாழாத தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசமான இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 2006ம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள பாரிய பவுத்த விகாரை இதுவாகும். காலப்போக்கில் இது சிங்களப் பிரதேசமாக "லங்கா பட்டண" என பெயர் மாற்றமடையலாம்.
தமிழர்களின் கலை, கலாச்சார அம்சங்களை எமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையல்லவா?

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 


 

5/11/14

கொரிய தூதுவர் யாழ். வந்தார்

கொரிய நாட்டின் உயர் ஸ்தானிகர் வோன் சம் சங் அவர்கள் நேற்று யாழ். மாவட்டத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தார். இந்தப் பயணத்தில் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை கேட்டறிந்து கொண்டதுடன் கொரிய நாட்டின் மூலமாக மொழிக்கற்கை நெறியினை வளப்படுத்துவதற்கும் அதனூடாக இலங்கையின் வடமாகாணத்தின் சிறந்ததொரு மாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கும் கொரியநாடு மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகள் குறித்தும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டறிந்து கொண்டார். மேலும் இந்தப் பயணத்தில் யாழ். போதான வைத்தியசாலை,யாழ்.பொது நூலகம் போன்ற இடங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>