siruppiddy

23/12/14

நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் கடிதங்கள்!

 நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் 
”இனி எந்த குழந்தையும் மரிக்க கூடாது”-கொழும்பு: இலங்கையில் போரின்போது காணமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு 15,000 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைப் பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை சேகரித்து அனுப்பியுள்ளது.

நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற செயல்கள் தொடர்பான புலனாய்வு குழுவினர் தங்கள் கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள்என்று நம்புவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20/12/14

குண்டு வெடிப்புச் சம்பவம்! தகவல்களை மறைக்க படையினர் முயற்சி

காங்கேசன்துறை வடமாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சமயம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைக்க படையினர் முயற்சித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் தஙகிருந்தார். இந்நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கட்டடப் பகுதிக்குள் பாதுகாப்பு கடமையிலிருந்த படையினரின் பகுதிக்குள் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அல்லது தற்செயலாக நடைபெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன. குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 7 படையினர் கைது செய்யப்பட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குறித்த தகவலினை வெளிப்படுத்த படையினர் நீண்ட மௌனம் சாதிப்பதாகவும் தெரியவருகின்றது

18/12/14

ஒப்புக்கொள்கிறது அரசாங்கம் தமிழ்மக்களை அரசியல் ரீதியாக வெல்ல முடியவில்லை! –

 
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை என வன வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தோம் அவர்களை வெற்றி கொண்டோம். ஆனாலும் எம்மால் தமிழ் மக்களின் அரசியலை வெற்றிகொள்ள முடியவில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அது சம்பந்தமாக எமக்கு எந்தவித பயமும் இல்லை. பிரச்சனையும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச ரீதியில் புலிகளின் நிதி கொடுக்கல் வாங்கலை நாங்கள் நிறுத்தினோம். கே.பி யை எமது பக்கம் எடுத்தோம். சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பான நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் செயற்பட்டு வந்தாலும் அதனை கெடுக்கும் வகையில் புலம்பெயர் விடுதலைப்புலிகள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15/12/14

கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் மூடப்படும்!-

ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது.
மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது.
இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு முன்னைய ராஜபக்ச ரெஜிமண்டுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
தோல்வியின் நிலை அறிந்து தற்போது என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் தனது அரசியல் சலூனுக்கு ஒப்பானது என்று தரம் குறைத்து வருகின்றரர்.
இதனால்தான் ஒவ்வொரு அமைச்சர்களும் இன்று அரசை விட்டு வெளியேறுகின்றனர்.
இன்று ஒன்று மட்டும் சொல்ல விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரசாங்கத்துக்கு வெளியிலும் நடக்கும் சூழ்ச்சிகள் அறியாத ஜனாதிபதியாக இருக்கின்றமை பற்றி  மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11/12/14

மஹிந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது!

அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது
மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரோ, சிகல உறுமய தலைவர் சோபித தேரர், குணசேகர, வசந்த, கலாநிதி ரஜிவ விஜேசிங்க, ஹூனைஸ் பாருக், இராஜதுரை, திகாம்பரம், சந்திரசேகரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் இணைந்துள்ளார்.
மேலும் மேல்மாகாணசபை, ஊவா மாகாணசபை, வடமேல் மாகாணசபை, சப்ரகமுவ மாகாணசபைகளில் உள்ள 9 ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறியதால் அதனை மீள அரசுக்கு ஆட்சி நடத்த முடியாமல் போயுள்ளது.
இச் சபைகள் வரவுசெலவுத்திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் கூடுவதாக பிற்போடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையும் கடந்த வாரம் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறாது பிற்போடப்பட்டுள்ளது.
18 வது அரசியல் திருத்தத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் 8 உறுப்பினர்களும் சேர்ந்து 3ல் இரண்டு பெரும்பான்மையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜனாதிபதி 3வது முறை தேர்தலில் குதிப்பதற்கும் ஆதரவு வழங்கி முஸ்லீம் காங்கிரஸ் முட்டுக்கொடுத்தது. ஆனால் இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்குச் சென்றதால் 165 பாராளுமன்ற உறுப்பினர்களில் 151 மிஞ்சியுள்ளனர்.
இதில் எதிர்க்கட்சியிலிருந்து அரச பக்கம் வந்த திஸ்ச அத்தநாயக்க, கெட்டகொட உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இனி அரசுக்கு எந்தவொரு அரசியலமைப்பையும் பாராளுமன்றத்தில் வெற்றி கொள்ள முடியாத ஏற்பட்டுள்ளது.
நாளை அல்லது மறுநாள் யார் யாரெல்லாம் எதிரணிக்கு வரவுள்ளார்கள் என்ற விபரங்கள் வெளிவராத போதும், அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஆகக் குறைந்தது 113 பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

8/12/14

ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  
தங்கொட்டுவையிலுள்ள ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்றபட்டுள்ள போதிலும் குறித்த ஆதரவாளர் தன்னுடைய மனைவியின் வீட்டில் இருந்தமையினால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

5/12/14

எனக்கே சொந்தம் யுத்த வெற்றியின் 75 வீத பங்கு :

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தை நடத்தியதும்
 அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம் விட்டுவைத்த 25 சதவீதத்தையே ராஜபக்ஷவின் அரசாங்கம் வெற்றிகண்டது. இருப்பினும், யுத்தம் முடியும் போது, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேனவே’ என சந்திரிகா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

3/12/14

ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

நீதிமன்றின் தீர்ப்பானது புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.

புலிகளுக்கு எதிராகவும், புலிச்செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>