siruppiddy

19/12/15

ஐீ.ரி.வி நேரலை: மாவீரர்நாள் 27.11.2015 அறிவிப்பாளரான முல்லைமோகன்

யேர்மன் டோட்மூண்ட் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வை ஐீ.ரி.வி நேரலை செய்திருந்தது, அதன்போது அதைதொகுத்து வழங்கியவர் யேர்மனியில் சிறந்து விளங்கும் அறிப்பாளரான மணிக்குரல்தந்த முல்லைமோகன் அவர்கள் அந்த நேரலையின் ஒருங்கிணைப்பு ஐீ.ரி.வியின் யேர்மன் கலையகப்பொறுப்பாளர் சிவலிங்கம் 
அவர்கள்,
இதற்கான சற்லைற் இணைப்பு படப்பிடிப்புகளை டோட்முண்ட M.S விடியோ
செ ய்திருந்தது ஒளிப்பதிவாளர்களாக சக்தி அவரின் இருமகன்கள் ஓபகவுசன் ரூபன், கபில் என இணைந்து சிறப்பானது தொழில் நுட்பம் M.S விடியோ
படக்கலவை எஸ்.தேவராசா என மாவீரர் பணிக்காய் அனைத்துக்கலைஞர்களும் கைகோர்த்து நின்றது
 சிறப்பைத்தந்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


10/12/15

இ,கவிமகளின் மழைக்குள் இருந்து ஓர் குரல் -2

"நான் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஏற்பட்ட அதி பயங்கர மன அதிர்ச்சியை இந்த நாலு நாட்களும் அனுபவித்தேன் கவி  இதை குறிப்பிட்டவர், தமிழீழத்தின் மீது அதீத பற்றுக் கொண்ட ஓவியர் புகழேந்தி. அவருடனான 
தொடர்புக்காக
 பல தடவைகள் செய்த முயற்சிக்கு பின்னான தருணம் ஒன்றில் அவரது தொடர்பு கிடைத்த மகிழ்வில் "சேர் எப்பிடி இருக்கிறீர்கள்...? கேட்ட கேள்வியின் பதிலாக கிடைத்தது இந்த பதில்.
அவர் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். உண்மையில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நானும் சில நாட்களாக எங்கள் நட்புக்களின் கிடைக்காத தொடர்புகளிலும் , அறிய முடியாது தவித்த அவர்களுடைய துயர்நிறைந்த வாழ்க்கையிலும் நாம் முள்ளிவாய்ககால் மண்ணில் முடக்கப்பட்டிருந்த போது என் உறவுகள் எம் நிலையை அறிய துடித்த வினாடிகளை உணர முடிந்தது.
மினசாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் இல்லை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிமிடங்கள் முழுவதும் பலத்த துன்பத்தை சுமந்து கொண்டிருந்தனர் எங்கள் உறவுகள். "கவி நான் இந்த நாட்களில் என்னைப்பற்றியோ எனது குடும்பத்தை பற்றியோ
 நினைத்து 
கவலை கொள்ளவில்லை. காரணம் நாங்கள் இதுவரை பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம். நான்கு சுவரைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் இருக்கும் உணவை பிரித்து உண்டால் கூட குறைந்தது ஒரு வார காலத்திற்கு என் குடும்பம் உணவுப் பிரச்சனையில் இல்லாது வாழ முடியும். ஆனால் வீட்டை இழந்து ஒரு பருக்கை சோறு கூட கிடைக்காத 
நிலையில் 
போட்டிருந்த ஒரு ஈர உடையோடு விடிய விடிய தண்ணீரில் உதவிகளுக்காக காத்திருந்த குழந்தைகள் நிலையைதான் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
உண்மையில் இந்த வார்த்தைகளை அவர் கூறிய போது அவரது விழிகள் நிட்சயமாக கண்ணீரால் நனைந்திருக்க வேண்டும் ஏனெனில்
 அவரது உணர்வுகளை
 நான் பேச்சின் மூலமே உணர்ந்து கொண்டேன். நான் உரையாடிய அந்த நிமிடங்கள் ஒவ்வொன்றிலும் சென்னையின் துயரத்தை குறிப்பதிலே அவர் கருத்தெடுத்தார். கவி சென்னைக்குள் இருந்து கொண்டே என்ன நடக்குறது எமக்கு என்பதை அறிய முடியாத அந்த கணங்கள் ஒவ்வொன்றும் கொடியது. இந்த துயர சம்பவத்துக்கு என்னால் யார் மீதும் குற்றம் 
சுமத்த முடியாது
 உள்ளது. மழை வெள்ளம் கரை புரண்ட போது ஏரிகளை திறந்து விட்டது தவறாக பலர் நினைக்கலாம் ஆனால் அது திறக்கப்பட வில்லை என்றால் ஏரிகள் அனைத்தும் உடைப்பெடுத்திருக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்குமாயின் சென்னை முழுவதும் பாரிய அழிவுக்குள்ளாகி இருக்கும். சிலவேளை முற்றுமுழுதாக 
அழிந்திருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திறந்து விட்ட செயற்பாடானது நிட்சயமாக ஏற்றுக்கொள்ள
 வேண்டியதாகிறது.
அவர் தொடர்ந்து பேசினார். அப்போது நான் குறுக்கிட்டு சேர் மன்னிக்கனும், எங்கள் உணர்வுகளை ஓவியங்களாக்கி உலகத்துக்கே எங்கள் உணர்வுகளை கூறிய அத்தனை ஓவியங்களும் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது..? ஆம் கவி என் வீடு அமைந்துள்ள இடம் மேட்டுப்பகுதி அதனால் என்னால் அவை பாதுகாக்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னும் ஓரிரண்டு 
சென்டி மீட்டர் தண்ணி எம் பகுதிக்குள் புகுந்திருக்குமாயின் அத்தனை ஓவியங்களும் இயற்கையால் அழிக்கப்பட்டிருக்கும். இப்போது வேறு முயற்சி பற்றி சிந்திக்கிறேன் அவற்றை பாதுகாக்க வேண்டும். ஆமா சேர் நீங்கள் கூறுவதே நானும் எதிர் பார்த்தேன். நியமாக அவற்றை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்த இடத்திலே நான் ஒரு விடையத்தை குறிக்க விரும்புகிறேன். இன்றைய சூழலில் பல்லாயிரம் உறவுகளின் சொத்திழப்பு மற்றும் வாழ்வாதாரவிழப்புக்களுக்கும் பலநூறு மக்களின் உயிரிழப்புக்களுக்கும் மத்தியில் இந்த ஓவியங்கள் தொடர்பான பாதுகாப்பு என்பது அவசியமா என்று உங்களுக்கு வினா எழலாம் ஆனால் இதைக் கட்டாயமாக நான் வினவ வேண்டிய நிலை உண்டு. ஈழ போராட்ட வரலாற்றில் 
எமது வலிகளை 
நாம் நமக்கே புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை ஆனால் பல ஊடக முறமைகள் இதைத்தான் செய்கின்றன. ஆனால் ஓவியங்கள் என்ற இந்த ஊடகத்தின் மூலம் நாம் பெற்ற அடவுகள் ஒப்பீட்டளவில் அதிகமானவை வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஊடகமாகவே நான் ஓவியங்களைப் பார்க்கிறேன். அதனால் அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எம் வலிகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கடப்பு எமக்கு இருக்கிறது.
" சேர் அடுத்து வரும் நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? கவனமாக இருங்கள். நான் இப்போது பணி காரணமாக விடைபெறுகிறேன். தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம். நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.
இ,கவிமகன்.
08.12.2015
நீண்ட உரையாடல்களில் இருந்து முக்கியமானவற்றை எடுத்து பதிவாக்கியுள்ளேன்...... 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


மழைக்குள் இருந்து ஒரு குரல்-01

நாங்கள் இப்ப நல்லா இருக்கிறம். இப்ப கொஞ்சம் தண்ணி வடிஞ்சிட்டுது. இன்றுதான் கரண்ட் வந்திச்சு. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் மண்ணை கடந்து வந்திருக்கிறம். பாவப்பட்ட எங்கள் மீது தான் மீண்டும் மீண்டும் துன்பத்தை இந்த கடவுள் விதைக்கிறன். ஏற்கனவே ஏற்பட்டிருந்த வலி இன்னும் ஆறவில்லை அதற்குள் மீண்டும் தொடரும் அவலங்களால் எங்கள் வாழ்க்கை துயரம் நிறைஞ்சு போய் கிடக்குது. நியத்தில் கடவுள் உண்டா? இந்த கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது?
சரி நாங்கள் ஏதோ பாவத்தை செய்து பிறந்தோம் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? பச்சிளம் பருவத்திலே தந்தையை பறி கொடுத்தார்கள் கண்முன்னே பல உயிர்கள் மடிந்ததை கண்டு ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீள முன் இவ்வாறு துன்பத்தை இந்த கடவுள் ஏன் அவர்களுக்கு கொடுத்தான்...?
தம்பி கிட்டத்தட்ட ஒரு வாரங்கள் யாருமே அற்ற தனிமையில் வெளித் தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் என் இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உதவிக்காக காத்திருந்தேன். ஆனால் உதவி எனக்கு கிட்டவில்லை. நான் நினைக்கிறேன் நெஞ்சளவிற்கு அதிகமான தண்ணீர் 
பாச்சலிற்கு நடுவில் 
நடுக்கடலில் கைவிடப்பட்டவர்களாக நாங்கள் கிடந்தோம். இருந்த உணவுப்பொருட்களை பகிர்ந்து குழந்தைகளின் பசியாற்றிக் கொண்டு மழைநீரை கொதிக்க வைத்து பருகிக்கொண்டும் எங்களின் இறுதி மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டிருந்தோம்.
பிள்ளைகள் பயத்தில் உறைந்து போய் கிடந்தனர். வெளியில் என்ன நடக்குறது என்றது புரியவில்லை. இருட்டும் குளிரும் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த வெள்ளமும் அவர்களை நிலைகுலைய வைத்திருந்தது. எப்போதும் என்னை இறுக பற்றிக் கொண்டே இருந்தார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் வெடிகுண்டு மழைக்குள் எவ்வாறு தவித்தோமோ அதே போலவே நாங்கள் தவித்துப் போய் கிடந்தோம். இருட்டும், துயரமும், உயிர்பிழைத்தலுல் எமக்கு புதியவை அல்ல பல தடவைகள் எங்கள் மரணத்தை 
கண்முன்னே
 பார்த்தாலும், அருகில் உதவிக்கு உறவுகள் இருந்தது எமக்கு கொஞ்சம் பலத்தை தந்தது ஆனால் இங்கு தனிமையே எழுந்து எம்மை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் நாங்கள் மீண்டும் ஒருமுறை மீண்டு வந்துள்ளோம்.
இது நீண்ட முயற்சியின் பின் இன்று கிடைத்த ஒரு தொலைபேசித் தொடர்பில், இறுதி சண்டையில் தேசத்துக்கான விடுதலைப்போரில் தனது துணையை வித்தாக்கி தமிழகத்தில் உயிர்வாழ்தலுக்காக தஞ்சமடைந்த ஒரு சகோதரியின் குரல்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/12/15

இரகசிய முகாம்களில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்படவில்லை!

யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பா ட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெலிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை
குறிப்பிட்டார்.
யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு உள்ளநாட்டிலேயே நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ள தாக முன்னாள் ஜனாதிபதி 
சுட்டிக்காட்டினார்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளின் அபிவிருத்திக்கு தேவையான நிதி, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர்
 குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து பண்டிகைகளை நடத்துவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
 இந்த நிலையில்
 இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப் பிட்டார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் யாரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவி யலாளர்களினால் அரசியல் கைதிகளின் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதியிடம் சில கேள்விகள் வினவப்பட்டன.
இதன்படி தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கட்டங்களாக விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த நிலையில் குற்றங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களை
 உடனடியாக விடுதலை 
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றங்கள் இழைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சிறு குற்றங்களை இழைத்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
 குறிப்பிட்டார்.
எனினும் தமிbழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் காணப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும என அவர் கேட்டுக்கொண்டார்.நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக 
தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அதனை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் எனவும் 
கூறியுள்ளார். இந்த நிலையில் இராணுவ ரீதியில் யுத்தத்தினை வெற்றிக்கொண்டுள்ள போதிலும் இயல்பான சமாதானத்தை இன்றும் வெற்றிகொள்ள முடியவில்லை என அவர் 
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்ற ரீதியிலேயே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

30/11/15

உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், உயிருடன்???

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்……
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.
போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச்
 சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.
அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை 
கொண்டிருந்தார்கள். 
ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, 
தமிழர்களின் 
நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!
பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,
”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை 
பத்திரமாகக் 
கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் 
கடிதம் எழுதியதை 
வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.
பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.
புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.
எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. க
ருணா, சிங்கள 
அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த 
ஒருவரின் சடலத்தை 
ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, ‘ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.
புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் 
கண்டிருக்கிறது. 
இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் 
கேட்டு இந்திய அரசு, 
சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை 
ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் 
காடுகளுக்குள் ராணுவம்
 திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.
மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.
பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28/11/15

மிகவும் அமைதியாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு;பொலிஸ்சர்தெரிவிப்பு ?

வடக்கு- கிழக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டதாகவும், சட்டத்தை மீறியமைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் அதில் தலையிடவில்லை என்றும் அவர் 
விளக்கமளித்துள்ளார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை முன்னிலைப்படுத்தி எவ்வித
 ஆர்ப்பாட்டங்களோ, 
ஊர்வலங்களோ, நிகழ்ச்சிகளோ பிரசித்தமான முறையில் முன்னெடுக்கப்படாமையினால் பதற்றமான சூழ்நிலை காணப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


26/11/15

இறைவன் ஆனான் பிரபாகரன் இறந்து போனான்.ஆறுமுகன்!

ஆசியாக் கண்டத்தின்
உச்சத்தில் உதித்த
ஈழத்துச் சூரியன்!
அச்சத்தில் மூழ்கிய
அப்பாவித் தமிழரின்
விலங்கினை உடைத்து
உலகின் உச்சத்தில் வைத்த
உன்னதத் தலைவன் இவன்

பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்
தமிழனை சிங்களக் கொள்ளையன்
அடிமைப் படுத்தி ஆண்ட போது…
இலங்கைத் தலையின் மூளையில்
வல்வைத் தாயின்…
வீரத் திரு வயிற்றில்
உலகத் தமிழர்களின்…
ஒட்டு மொத்த மூளையாக
உயிராகி… உருவாகினான்..

கார்கால மழையில் – ஓர்
கார்த்திகை நாளில்
இருட்டியது ஊர்…
இருபத்தி ஆறு நன்னாளில்
எடுத்தது வீரத்தாய்க்கு வலி!
பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!
அன்று – உருவானது
தமிழர்களுக்கான புதிய வழி!

இலங்கைத் தலையில் பிறந்து
தமிழர்களின் மூளையானன்!
ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…
மூலையில் முடங்கிக் கிடந்த
ஈழத் தமிழர்களுக்கு
புதிய அத்தியாயமும் தொடங்கியது!
புதிய பாதையும் பிறந்தது!!

இரத்தச் சேறில் புதைந்த
தமிழர்களின் நிலையினையும்…
பரல் தாரில் அவிந்த
குழந்தைகளின் உயிரினையும்…
வலி நிறைந்த
வார்த்தைகளால் கேட்டு…
தன் இதய வலிகளால் சுமந்தான்!
தலைகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் சொத்துக்கள்
நொறுக்கப்பட்டும் – பெண்களின்
மானங்கள் பறிக்கப்பட்டும்
புனித உயிர்ப்பைகள் நிரப்பப்பட்டும்
தாய்மை மார்புகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் உடலங்கள் அறுக்கப்பட்டு
மாமிசங்களாக்கப்பட்டும் – வீதியோரக்
கடைகளில் விற்கப்பட்டதையும்
முகவரிகளே இல்லாமல்
அழிக்கப்பட்டதையும்…
பார்த்தும், படித்தும், கேட்டும்
பதறித் துடித்துப் போய்
பதினான்கு வயதினிலே…
பிறந்தது நெஞ்சத்தில் வலி!
சிங்களனைக் கூண்டோடு அழிக்க
பதினேழு வயதினிலே…
உறுமிப் பாய்ந்தது புதிய புலி!
நீங்கியது தமிழர்களைப் பிடித்த பிணி!
துவங்கியது…
சிங்களவனுக்கு ஏழரைச் சனி!!

தாழ்ந்து போன தமிழன் எழுந்தான்!
எழுந்து வந்த தமிழன்…
உலகினில் உயர்ந்தான்!
புலியாகிப் பொங்கி எழுந்து பாய்ந்தான்!
பலியாகிப் போய் மடிந்தான் சிங்களன்!
தமிழர்களின் வாழ்வில்…
பிறந்தது புதிய விடிவு!
சிங்களனுக்குத் தொடங்கியது…
துன்பமான முடிவு!!

பதுங்கியிருந்த தமிழன் பாய்ந்தான்
பிரபாகரன் பெயர் சொல்லி எழுந்தான்..!
களங்கள் பல கண்டான்…
காவியங்கள் பல படைத்தான்..!
எதிரிப்படைகளை எல்லா முனைகளிலும்
தாக்கி அழித்தான்..!
கடல் மீது ஏறியும்…
காவியங்கள் பல படைத்தான்..!
சிறகுகள் முளைத்து…
விண் மீது ஏறியும்
வானையும் சாடினான்..!
உலக ஆயுத பெரும் பலத்தின்
முன்னால்…
மனபலத்தால் உடைத்தெறியும்
கரும்புலிகள்தனை படைத்தான்..!
எதிரி விழி பிதுங்கி
வாய் மூடி அடைத்தான்!

பொங்கி வந்த படையெல்லாம்
நொந்த படையாகின…
நொந்து போன படையெல்லாம்
இவனை ஒரு சக்தி என்றனர்..!
தம்மைக் காப்பாற்றாத
சாமி எல்லாம் எதற்கு என்றனர்..?

இலங்கைத் தலைநகரத்தின்
தலையில் ஏறி
உலுக்கிய போதுதான்…
உலகமே உணர்ந்தது,
இவன் மனிதப் பிறவியல்ல…
கடவுள்களின் அவதாரம் என்று!!!

ஆறடி அணுகுண்டு இவனை
அனுசரித்துப் போனால்தான்…
பலனுண்டு என
பயந்தது இரக்கமற்ற இலங்கை!!
பணிந்தது வல்லாதிக்க வல்லரசுகள்!!!

தமிழனின் வீரம்
உலகறிந்த காலம்…
தமிழர்களுக்கென உருவாகியது
உலகினில் புதிய கோலம்..!
உலகறியாத் தமிழனையும்
உயரத்தில் பார்த்தது உலகம்..!
தமிழனின் தனி வீரமும்
புதிய தனித்துவமான அடையாளமும்
உலக வரலாற்றில் பதிந்து போனது!
இதுதான், பிரபாகரனின் காலம்!!!

இவனைப் போன்ற தலைவன்
உலகினில் எங்கும் இல்லை!
இவனைப் போன்ற வீரத் தலைவன்
இனி பிறக்கப் போவதும் இல்லை!!
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்
அஞ்சா வீரத்துடன் பிறந்த
உலகின் ஒப்பற்ற தலைவன் இவன்!
தன் சொந்த மக்களுக்காகவே…
தனது இரத்தத்தையே
பலியிட்ட மானத்தலைவன் இவன்!!

மூலவளங்கள் இல்லாத
கண்ணீர்த் தேசத்திலே…
வீரத்தை விதைத்து
சுதந்திரக் காற்றினை
சுவாசிக்க வைத்து
மக்களின் கண்ணீரைத் துடைத்த
ஈர நெஞ்சுக்காரன்!!
இவனின் ஈர வரத்தினாலும்…
வீரத் தவத்தினாலும்…
இறைவனை மறந்து போய்
இவனையே இறைவன் எனக் கருதி
தமது நெஞ்சத்தில் இருத்தி
இதய தெய்வமாக வழிபட்டனர்…
ஈழ மக்களுடன்… உலகத் தமிழரும்!

உயிரற்ற…..
வார்த்தைகளை அள்ளி விடும்
அரசியல்வாதிகளுக்கு அப்பால்…
வருடத்திற்கு ஒரு தடவை பேசி
தமிழர்களின் கடவுளாகிப் போனான்
இவனின் உயிர் வார்த்தைகளையும்
தத்துவங்களாக…
உலகமே உள்வாங்கியது!!!
பேசாமலே இருந்து பேச வைத்தான்..!
இவன் பேசிய வார்த்தைகள்…
மந்திரங்களாகின… தமிழர்களுக்கு!
இவன் பேசாத நிமிடங்கள்…
தந்திரங்களாகின… எதிரிகளுக்கு!!

காலங் காலமாக…
கடவுள்கள் செய்யாத கடமைகளை
தன்னகத்தே கொண்டு
தரணியெங்கும் வாழும் தமிழர்களின்
தனிப்பெரும் கடவுளானான்!

அரிதாரம் பூசிய போலியான
கதாநாயகர்களுக்கு மத்தியில்…
அரிதாரம் பூசாத உண்மையான
கடவுளின் அவதாரம் இவன்!!
கொடுங்கோல் அரக்கர்களை
புதிய அவதாரம் எடுத்து…
அழித்தொழித்தான்..!
தமிழர்களின் இதய அறைகளிலும்…
வீட்டுப் பூசை அறைகளிலும்…
புதிய கடவுளாக அவதரித்து நின்றான்!

ஆறுமுகனைப் பார்த்தவர் யாருமில்லை!
பிரபாகரனைப் பார்க்காதவர் யாருமில்லை!!
உருவம் இல்லாத கடவுள்
மனிதரின் இதயங்களில் நிறைந்த மாதிரி
உருவமுள்ள எம் தலைவனும்
தமிழர்களின் இதயங்களில்…
இன்று வரையும் உயிரோடு வாழ்கின்றான்!!

இல்லாத கடவுளை
இருக்கிறார் என்கிறார்கள்…
இருக்கின்ற தலைவரை
இல்லை என்கிறார்கள்!!!
இல்லாத கடவுள் இருக்கின்ற போது…
இருக்கின்ற தலைவர்
எப்படி இல்லாமல் போனார்.
இல்லை என்று சிலரும்…
இருக்கிறார் என்று பலரும்…
சாட்சியங்கள் தேடுகின்ற
மனிதர்களின் எண்ணங்களிலும்…
தேடல் கொள்கின்ற இதயங்களிலும்…
உயிரோடு வாழ்ந்து வருகின்ற
உண்மைக் கடவுள் இவன்!!

உருவம் இல்லாத கடவுளுக்கு
சிலைகளை உருவாக்கும் இவ்வுலகில்…
உருவமுள்ள எம் தலைவனுக்கு
அழகு வார்த்தைகளால் கூட
வர்ணனைகள் செய்ய முடியாது!
அலங்கார வார்த்தைகளால் கூட
அலங்காரம் செய்ய முடியாது!!
இவ்வுலகினில் உள்ள…
எந்த வார்த்தைகளாலும்
அலங்கரிக்க முடியாத…
உலகத் தமிழர்களின்
தனிப் பெரும் கடவுளாகிப் போனான்..!
இவன் கடவுளாகிப் போனதால்…
எதுவும் செய்யாத கடவுள்
இறந்து போனான்…!
தமிழனைக் காத்து இவன்
இறைவனாகிப் போனான்!!!

எம் இறைவனை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை இங்கே..!
அதனால், தமிழர்களாகிய
நாம் வணங்கிக் கொள்கின்றோம்…
எம் இதயங்களின் உள்ளே!!!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23/11/15

சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!-

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்தின் முன் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி செயலாளர் அபேகோனும் கலந்து
 கொண்டனர்.
நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் நம்பிக்கையான முறையிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க முறையிலும், செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இதன்போது சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றங்களினால் நாட்டுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதோடு, இலங்கையின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த நல்லிணக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு அவதானத்துடன் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகளின் போது பல்வேறு தரப்பினரதும் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அவை குறித்து மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி சமந்தா பவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்தல், வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியிடம் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரி்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/11/15

ரகசிய சித்ரவதை கூடம்! ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்!!!

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடந்த காலத்திலும், யுத்தத்திற்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக முறைப்பாடுகள் எழுந்தன.
இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே-ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இக்குழுவினர், அண்மையில் இலங்கை
 வந்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். கொழும்பு மட்டுமின்றி, காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்றனர். காணாமல் போன தமிழர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களை சந்தித்துப் பேசினர். அவர்களின் 10 நாள் சுற்றுப்பயணம் நேற்றுடன் 
முடிவடைந்தது.
இதையடுத்து, தாங்கள் நேரில் கண்டவற்றை குழுவில் இடம்பெற்றுள்ள ஏரியல் துலிட்ஸ்கி நேற்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
இந்த பயணத்தின்போது, கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்டவிரோதமாக ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை 
கண்டுபிடித்தோம்.
யுத்தம் முடிவடைந்த ஓராண்டுக்கு பிறகும், அதாவது 2010-ம் ஆண்டுவரை அந்த கூடம் இயங்கி உள்ளது. அங்குள்ள பாதாள அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள், அங்குள்ள சுவர்களில் காணப்படுகின்றன.
இதை கண்டுபிடித்ததை முக்கிய கண்டுபிடிப்பாக கருதுகிறோம். இன்னும் இதுபோல் நிறைய இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகவே, இந்த கூடம் பற்றி இலங்கை அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.என அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14/11/15

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருந்து அனுப்பிய நெஞ்சை உருக்கும் செய்தி

இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறை ஒன்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு அனுப்பிய நெஞ்சை உருக்கும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்>>>

13/11/15

நீதிமன்றம் அழைப்பாணை மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேருக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இலங்கை போக்குவரத்து
 சபையின் 
பஸ்களை பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபை தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி குறித்த நபர்களுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுககப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட பஸ்களுக்கு 42 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபை இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

11/11/15

காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா.பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள வருகை 
தந்துள்ளனர்.
மன்னார் கீரி ஞானோதய மண்டபத்திற்கு இன்று பி.ப 2 மணியளவில் வருகை தந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர் வரை ஞானோதய மண்டபத்திற்கு முன் ஒன்று கூடி காணாமல் போவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு 
காணாப்பட்டனர்.
இதன் போது வருகை தந்த 5 பேர் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் உறவினர்களை பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகள் 40 பேரிடம் குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/11/15

மைத்திரிக்கு கோட்டா அறிவுரை ஜெனிவா சூழ்ச்சியில் சிக்கவேண்டாம்?

சர்வதேச சமூகத்தால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மான சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுரை வழங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெனிவாத் தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதிவான்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து கோட்டா பேச்சு நடத்தியுள்ளார். மெக்ஸ்வல் பரணகம அறிக்கை தொடர்பில் கோட்டா இதன்போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை கண்டிக்கத்தக்கது என்றும் கோட்டாபய இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளால் முப்படையினர் அதிருப்தி அடைந்துள்ளனர் எனவும், இது பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் எனவும் ஜனாதிபதிக்கு கோட்டாபய விளக்கியுள்ளார்.
இந்த நிலைமையை மாற்றியமைக்க ஜனாதிபதி எடுத்துக்கொள்ளும் சிரத்தை பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாவுடன் சந்திப்பு நடத்தப்பட்ட தினத்தில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பெருந்தெருக்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர்.
எவ்வாறான பேச்சு நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அரச அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது தமக்கு அது குறித்து அறிவிக்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரியுள்ளார் எனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28/10/15

பிள்ளையானுக்கு நடேசன் கொலையில் நேரடி தொடர்பு ; பிரதீப் மாஸ்ரர் சாட்சியம்


ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு எல்லை வீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் 
சுட்டுக்கொல்லப்பட்டார்.
நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது. அக்காலப்பகுதியில் பிள்ளையானும் சகாக்களும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கியிருந்ததாக 
கூறப்படுகிறது.
நடேசன் இறந்த பின் சற்று நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் மரக்காலை சுற்றுமதிலுக்கு அருகில் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். கொலையாளிகள் பின்னர் அம்மக்களுடன் நின்று நடக்கும் சம்பவங்களை அவதானித்து கொண்டிருந்தனர் என பிரதீப் மாஸ்ரர் சாட்சியம் கூறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


20/10/15

அரசாங்கம் படையினரைக் காப்பாற்ற கருணைச்சபை???

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினரைக் காப்பாற்ற கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் 
முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும்
இவ்வாறான ஒரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினருக்கான சட்ட உதவிகளை செய்து கொடுக்கவும் அரசாங்கம் தனியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/10/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் வெறும் நோட்டு.

கட்டுக்காட்டாய்
இவனருகில்
இத்தனை நோட்டுக்கள்.
இவன் பசி என்ன?
வயிற்றுப் பசியா?
அன்புப் பசியா!
ஆதரவுப் பசியா!

காலம் கைவிட்டதா!
காட்டுமிராண்டிகளுக்கு
கருக்கட்டியதா!
யாரோ கட்டிய
உயிர்க் கூடு இவன்
தரையின்றி
படரும் பயிரிவன்.;;!
ஏதுமறியா இவன்
கரங்களில் இருக்கும்
பணம் இவன்
உய்வதர்க்கு உரமிடுமா!?

உறவைத் தேடும்
அன்புப் பறவை
பாசத்தோடு பற்றிக்
கொள்வதற்கு
கொளுகொம்பாக
காலம் இவனுக்கு
வழிகாட்டுமா.
கருணைக் கண்கள்
இவனைக் தாங்குமா!
நாளாந்த வலிகளோடு
நலன் கெடும்
எங்கள் சமூகம்
நிமிர்வது எப்போ..!?
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



7/10/15

ஆக்கம் இணுவை சக்திதாசனின் கைம் பெண் !

என்ன பாவம் செய்தேனோ ?
எனக்கு தெரியாது 
நானறிய ஒரு பாவமும் செய்யவில்லை 
என்பது மட்டும் தெரியும்

கீரியும் பாம்பும்
சண்டை பிடித்தால் கூட
முன்னுக்கு சென்று விலக்கு பிடிக்க
பின்னுக்கு நின்றதில்லை என்றும்

ஏழையாய் இருந்ததினாலோ என்னமோ
ஏழைகளைக் கண்டால் மனம் அழும்

இடம் பெயர்ந்திருந்த போது
நானிருந்த முகாமில்
ஓடியோடி எல்லாமாய் இருந்த ஒருவர் மீது
புலம் பெயர்ந்தது மனம்

விழிகள் நோக்க
விடியாப் பொழுதொன்றில் – மஞ்சள்
கயிறும் இல்லாமலே …
இதயங்கள் இடம் மாறிக் கொண்டன
மாலை மாத்தாமலேயே …
மனங்கள் ஒன்றாகிக் கொண்டன

கூட அவர் இருந்ததினால்
கொள்ளை என்று ஏதுவும் இருக்கவில்லை
மாதம் ஒரு முகாமென்று
மாறி மாறி இடம் பெயர்ந்தாலும்
பாவற்காய் கூட தேனாய் இனித்தது
இனிப்புக்கு விருந்தாய் வயித்திலும் சனிச்சுது

அவசரமாய் கண்டிக்கு சென்று வாறனென்று
சென்றவர் தான் ….

ஆண்டுகள் பல மாண்டு விட்டன
ஆட்சிகள் பல மாறி விட்டன
கண்டு வந்ததாக சொன்னவர்கள்
முண்டு விழுங்குகின்றனர் வார்த்தைகளை

கூட பக்கத்தில்
அவர் நினைப்போடு …. நான்

ஏதேதோ …
பெயர் சொல்லி
அழைக்கின்றனர் என்னை

அவர் வரவுக்காய்
பூ சூடியபடி வாசலில் கோலமிட்டு காத்திருக்கிறேன் !

ஆக்கம்  இணுவையூர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


2/10/15

விடுதலை புலிகளின் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்டவியக்கும் காணொளி


விஸ்வமடுவில் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஒளிநாடா:உலகையே வியக்க வைத்த காணொளி .உலகையே வியக்க வைத்த போராட்ட அமைப்பு எந்த வித நாடுகளின்
 உதவியின்றி தங்களின் உழைப்பு மூலம் வளர்ந்த மறவர்கள் அவர்களின் வளர்ச்சியை பார்த்து உலகமே வியர்ப்பில் பயத்துடன் திரும்பி பார்த்தது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

30/9/15

சிவப்பு நிலா கவிஞர்சுபா ரஞ்சனின்


ஒளிரும் நிலவே
வெண்ணிலவே
எத்தனை முகத்திற்கு
உவமையானாய்.

எத்தனை கவிஞர்க்கு
காதலியானாய்
புரிய முடியா மனிதர்க்கெலாம்
தூது சென்றாய்..

வளர்வதும் தேய்வதும்
வகுத்த விந்தையின் நியதியோ
நேசித்து கவி பாடும்
இயற்கையின் விந்தையோ

அபூர்வமாய் உன்
கன்னங்கள் சிவக்க
கலையை உணர்ந்து
கண்கள் விரிகிறதே..

நிலவே உனை நின்று ரசித்தால்
ஆன்மாவில் அடைபட்ட 
துன்பம் எல்லாம்
எங்கோ இந்தப் பெருவெளியில்
தொலைகிறதே…


                                                     ஆக்கம் கவிஞர்சுபாரஞ்சன்