siruppiddy

28/10/15

பிள்ளையானுக்கு நடேசன் கொலையில் நேரடி தொடர்பு ; பிரதீப் மாஸ்ரர் சாட்சியம்


ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு எல்லை வீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் 
சுட்டுக்கொல்லப்பட்டார்.
நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது. அக்காலப்பகுதியில் பிள்ளையானும் சகாக்களும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கியிருந்ததாக 
கூறப்படுகிறது.
நடேசன் இறந்த பின் சற்று நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் மரக்காலை சுற்றுமதிலுக்கு அருகில் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். கொலையாளிகள் பின்னர் அம்மக்களுடன் நின்று நடக்கும் சம்பவங்களை அவதானித்து கொண்டிருந்தனர் என பிரதீப் மாஸ்ரர் சாட்சியம் கூறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


20/10/15

அரசாங்கம் படையினரைக் காப்பாற்ற கருணைச்சபை???

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினரைக் காப்பாற்ற கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் 
முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும்
இவ்வாறான ஒரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினருக்கான சட்ட உதவிகளை செய்து கொடுக்கவும் அரசாங்கம் தனியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/10/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் வெறும் நோட்டு.

கட்டுக்காட்டாய்
இவனருகில்
இத்தனை நோட்டுக்கள்.
இவன் பசி என்ன?
வயிற்றுப் பசியா?
அன்புப் பசியா!
ஆதரவுப் பசியா!

காலம் கைவிட்டதா!
காட்டுமிராண்டிகளுக்கு
கருக்கட்டியதா!
யாரோ கட்டிய
உயிர்க் கூடு இவன்
தரையின்றி
படரும் பயிரிவன்.;;!
ஏதுமறியா இவன்
கரங்களில் இருக்கும்
பணம் இவன்
உய்வதர்க்கு உரமிடுமா!?

உறவைத் தேடும்
அன்புப் பறவை
பாசத்தோடு பற்றிக்
கொள்வதற்கு
கொளுகொம்பாக
காலம் இவனுக்கு
வழிகாட்டுமா.
கருணைக் கண்கள்
இவனைக் தாங்குமா!
நாளாந்த வலிகளோடு
நலன் கெடும்
எங்கள் சமூகம்
நிமிர்வது எப்போ..!?
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



7/10/15

ஆக்கம் இணுவை சக்திதாசனின் கைம் பெண் !

என்ன பாவம் செய்தேனோ ?
எனக்கு தெரியாது 
நானறிய ஒரு பாவமும் செய்யவில்லை 
என்பது மட்டும் தெரியும்

கீரியும் பாம்பும்
சண்டை பிடித்தால் கூட
முன்னுக்கு சென்று விலக்கு பிடிக்க
பின்னுக்கு நின்றதில்லை என்றும்

ஏழையாய் இருந்ததினாலோ என்னமோ
ஏழைகளைக் கண்டால் மனம் அழும்

இடம் பெயர்ந்திருந்த போது
நானிருந்த முகாமில்
ஓடியோடி எல்லாமாய் இருந்த ஒருவர் மீது
புலம் பெயர்ந்தது மனம்

விழிகள் நோக்க
விடியாப் பொழுதொன்றில் – மஞ்சள்
கயிறும் இல்லாமலே …
இதயங்கள் இடம் மாறிக் கொண்டன
மாலை மாத்தாமலேயே …
மனங்கள் ஒன்றாகிக் கொண்டன

கூட அவர் இருந்ததினால்
கொள்ளை என்று ஏதுவும் இருக்கவில்லை
மாதம் ஒரு முகாமென்று
மாறி மாறி இடம் பெயர்ந்தாலும்
பாவற்காய் கூட தேனாய் இனித்தது
இனிப்புக்கு விருந்தாய் வயித்திலும் சனிச்சுது

அவசரமாய் கண்டிக்கு சென்று வாறனென்று
சென்றவர் தான் ….

ஆண்டுகள் பல மாண்டு விட்டன
ஆட்சிகள் பல மாறி விட்டன
கண்டு வந்ததாக சொன்னவர்கள்
முண்டு விழுங்குகின்றனர் வார்த்தைகளை

கூட பக்கத்தில்
அவர் நினைப்போடு …. நான்

ஏதேதோ …
பெயர் சொல்லி
அழைக்கின்றனர் என்னை

அவர் வரவுக்காய்
பூ சூடியபடி வாசலில் கோலமிட்டு காத்திருக்கிறேன் !

ஆக்கம்  இணுவையூர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


2/10/15

விடுதலை புலிகளின் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்டவியக்கும் காணொளி


விஸ்வமடுவில் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஒளிநாடா:உலகையே வியக்க வைத்த காணொளி .உலகையே வியக்க வைத்த போராட்ட அமைப்பு எந்த வித நாடுகளின்
 உதவியின்றி தங்களின் உழைப்பு மூலம் வளர்ந்த மறவர்கள் அவர்களின் வளர்ச்சியை பார்த்து உலகமே வியர்ப்பில் பயத்துடன் திரும்பி பார்த்தது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>