siruppiddy

15/3/16

யாழ்.பகுதியில் குண்டு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம!

யாழ்.நகர்பகுதியை அண்டியுள்ள கொழும்புத்துறை பகுதியில் பற்றைகளுக்கு தீ முட்டியபோது கைக் குண்டு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று இரவு மாரியம்மன் கோவிலடி மணியம் தோட்டம் கொழும்புத்துறை பகுதியில் பற்றைக் காணியொன்றில் பற்றைகளை துப்பரவு செய்து குப்பைகளை தீ மூட்டியுள்ளார்.
இதன் போது குப்பைகளுக்குள் இருந்த கைக்குண்டு நெருப்பு சூட்டுக்கு வெடித்துள்ளது.
இதன் காரணமாக அருகில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் காயமடைந்ததையடுத்து சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இதே பகுதிகளுக்கு அண்மையில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக