siruppiddy

31/5/16

வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை:பிரித்தானியா!

இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை
 வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் த ஹிந்து செய்தித்தாளிடம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் வீ கே சிங்கை சந்தித்த போது, இலங்கையின் மனிதஉரிமை நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கருத்துரைத்த அவர். இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை 
என்று கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


28/5/16

நன்னெறிக் கோவைபொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகம்!

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே,
பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பதவி நிலை அதிகாரிகளுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைக்கு அது தொடர்பான வரைபு அச்சில் உள்ளது. எதிர்வரும் ஜுன் மாதமளவில் குறித்த நன்னெறிக்கோவை பொலிஸ் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்படும்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளவும், சிறப்பான முறையில் கடமைகளை மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நன்னெறிக்கோவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தத்தமது கடமைகளில் பொலிசாரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை வெளிக்காட்டும் வகையிலும் ஊக்குவிக்கப்படும் என்றும் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



25/5/16

அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல்! முதலமைச்சரும் வட மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் புறக்கணிப்பு!!

யாழ். நகர அபிவிருத்தி குறித்து வடக்கு ஆளுநரின் தலைமையில் நேற்று நடந்த கலந்துரையாடலை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பெரும்பான்மை வட மாகாண உறுப்பினர்களும்
 புறக்கணித்தனர். அத்துடன் இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், 
மாவை சேனாதிராஜா, சரவணபவன் புளொட்டின் சித்தார்த்தன் ஆகியோரே கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ கட்சிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை எனத் தெரியவருகின்றது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

13/5/16

அதிர்ச்சி காணொளி யாழில் தற்போது நடப்பது என்ன?

  புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து அடங்கியிருந்த யாழ்ப்பாணத்து ரவுடிகளின் காடைத்தனம் புலிகளின் மறைவின் பின்னர் இன்று என்றும் இல்லாதவாறு தலைதூக்கி இருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் கொள்ளை, வாள் வெட்டு, பாலியல் நடவடிக்கைகள். போதைப்பொருள் வியாபாரம் மக்கள் இன்றைய நிலையில் பயத்துடனே இரவுப்பொழுதை கழிக்கின்றனர்.
எங்கு எப்போது யார் வீட்டில் கொள்ளை நடக்கும், யாரின் வீடு புகுந்து வாள்வெட்டு நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. தென் இந்திய கழிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அதை நிஜத்தில் செயற்படுத்துகின்றனர் இந்த யாழ் தமிழ் காடையர்கள்.
இந்த பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. இளஞ்செழியனின் கட்டளையின் பிரகாரம் வடபிரந்திய பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் குழு அமைக்கப்பட்டு அவர்களின் செயற்பாட்டையே

 நீங்கள் காணொளி பார்த்தீர்கள்.
முழுக்காரணம் இங்கு ( அவுஸ்ரோலியாவில்) இருக்கின்ற இதனுடன் சம்மந்தப்பட்டுள்ள சகோதரர்கள் , சகோதரிகள் , மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு அனுப்புகின்ற பணம் அங்கு ( யாழ்ப்பாணம் ) உள்ளவர்களை பிழையான பாதைக்கு கொண்டு செல்கின்றது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
முன்பு இருந்தவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா..? இங்கு இருந்து ஊதாரிகளான உங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்பும் ( நல்லவர்கள் அதுவும் தங்களது குடும்பத்துக்கும், நன்கொடையாக பணம் 
அனுப்புகின்றவர்களையும் தவிர்த்து ) எனதருமை தமிழ் சொந்தங்களே புரிந்து கொள்ளுங்கள்…!
ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் எம் தமிழினம் அல்லல்படுகிறது, இனியாவது உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.இச்செய்திதனை அறிந்து….
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

7/5/16

மீண்டும் இன்றும் நாடாளுமன்றம் சூடு பிடித்தது !

2016 நிதியாண்டிற்காக மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை சம்பந்தமாக இன்றும் பாராளுமன்றம் சூடு பிடித்திருந்தது.
இதன்காரணமாக பாராளுமன்றை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய நடவடிக்கை மேற்கொண்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.
அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணை மீதான இன்றைய விவாதத்தின் போது நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற 05 தவறுகளை அநுர குமார திஸாநாயக்க சுட்டிக் காட்டியிருந்தார்.
அதேவேளை நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரணமாக பாராளுமன்ற செயலாளர் அழுத்தங்களுக்கு உள்ளானதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதற்கிடையில் குறைநிரப்பு பிரேரணை ஊடாக சபையை தவறாக வழிநடத்தி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
 கூறினார்.
இவ்வாறு சூடுபிடித்த உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்களை கட்டுப்படுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்றைய சம்பவம் தொடர்பில் மீண்டும் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

ஆர்.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ அகிய நான்கு பேரையும் உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பது நியாயமானதல்ல என்று அநுர குமார திஸாநாயக்க கூறினார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>