siruppiddy

24/6/16

பாராளுமன் த்தில் தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. 
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 
தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலம் ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் ஊடகத்துறை பாராளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் முதலாவது வாசிப்புக்காக கடந்த மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

23/6/16

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் 
பங்கேற்றனர்.
அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது.

தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் 
வைக்கப்பட்டன.
இந்த வாக்களிப்பிற்காக 46,499,537 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பது இதுவே முதன்முறையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் 
பங்கேற்றனர்.
அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது.

தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் 
வைக்கப்பட்டன.
இந்த வாக்களிப்பிற்காக 46,499,537 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பது இதுவே முதன்முறையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

16/6/16

எரியும் கப்பல்! தற்செயலான ஒன்றா? திட்டமிட்ட சதியா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான நிலைக்கு அப்பால், இராணுவ ரீதியாக ஏற்படும் பெரும் குழப்பங்கள் தென்னிலங்கையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
தமிழர் தேசத்தில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் நிகழ்வுகள் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத்தின் மிகப் பெரிய ஆயுத களஞ்சியங்களில் ஒன்றாக கருதப்படும் கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வெடிப்பு சம்பவங்களில் இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை தெளிவுபடுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.
இதுவரை காலமும் மிகவும் பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த ஆயுத களஞ்சியம் அவ்வளவு இலகுவில் வெடித்து சிதற எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்வில் இராணுவம் குழம்பியுள்ள நிலையில், இன்று மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பின் துறைமுகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு 
வருகின்றனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி தேசமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட காரணம் என்ன? இயல்பாக நடைபெற்ற ஒன்றா அல்லது யாரெனும் ஒருவரின் தேவைக்காக இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவ மட்டத்தில் மிகவும் பலமான நபராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காணப்பட்டார். ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பயனாக அவர் இன்று கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமகாலத்தில் அதிகாரத்தில் இல்லாத போதும், அரச துறைகள் மட்டுமன்றி இராணுவ படைக்குள் மஹிந்த மற்றும் கோத்தபாவின் தீவிர விசுவாசிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அண்மைக்காலமாக கோத்தபாய கைது செய்யப்படுவார், அரசியலில் நுழையப் போகும் கோத்தபாய நாட்டை ஆட்சி செய்வார் என்பது தொடர்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டு 
வருகின்றன.
நாட்டின் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்க தன்னால் முடியும் என்ற கருத்தினை கோத்தபாய அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகள் கோத்தபாயவின் தேவைக்காக நடைபெறுகிறதா என்பது தொடர்பில் பல்வேறு மட்டத்திலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வடபகுதியிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கான நடைமுறைகளை சமகால தேசிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு சர்வதேசத்தின் கடுமையான அழுத்தம் காரணமாக 
அமைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நோக்கில் ராஜபக்ஷ ரெஜிமென்டுகளால் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஐயம் 
எழுந்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் சிங்களவர்களை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்பி, ராஜபக்ஷ ரெஜிமென்ட் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான சதி நடவடிக்கையே இவ்வாறான அனர்த்தங்கள் என அரசியல் ஆய்வாளர்கள் 
சுட்டிக்காட்டியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




13/6/16

மீண்டும்பிர­பா­க­ரனை உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மீண்டும் யுத்தம் நடக்கும்“பிர­பா­க­ரன் உயிரோடு உள்ளார்!:-மஹிந்த ராஜபக்ஷ!
யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான் யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ 
தெரி­வித்தார்.
என்னை பழி­வாங்கும் ஒரே நோக்­கத்தில் பிர­பா­க­ரனை மீண்டும் உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்­ச­ரி­ய­ம­டைய வேண்­டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்­களில் அந்த செய்­தியும் ஊட­கங்­களில் வெளி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார். விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்தம் தொடர்பில் அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தியும் இப்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் தொடர்பில் மஹிந்த ராஜ­பகஷ கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு
 தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், என்னை பழி­வாங்­கவும் எனது குடும்­பத்தை தண்­டிக்­கவும் இந்த அர­சாங்கம் தீவி­ர­மாக முயற்­சித்து வரு­கின்­றது. நாம் செய்­யாத குற்­றங்­க­ளுக்­காக இன்று தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றோம். எனது புதல்வர் யோஷித செய்­யாத குற்­றத்­திற்­காக சிறையில் உள்ளார். ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் மற்­றைய புதல்வர் நாமல் ராஜபக்ஷவை கைது­செய்ய அர­சாங்கம் திட்டம் தீட்­டு­வ­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளிவருகின்றன. அவ்­வாறு இருக்­கையில் இப்­போது பாரா­ளு­மன்­றத்தில் புதிய சர்ச்­சையை 
கிளப்­பி­யுள்­ளனர்.
யுத்த கால­கட்­டத்தை நாம் எவ்­வாறு யுத்­தத்தை முன்­னெ­டுத்தோம், அதற்­கான செல­வுகள் என்ற அனைத்தும் சரத் பொன்­சே­கா­வுக்கு நன்­றா­கவே தெரியும். அவர் அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி என்ற வகையில் எமக்கு பூரண ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டார். அதை நான் மறைக்­காமல் கூறி­யா­க­வேண்டும். ஆனால் அதையும் தாண்டி அவர் தனிப்­பட்ட ரீதியில் செய்த தவ­றுகள் தொடர்­பிலும் எம்­மிடம் பதி­வுகள் உள்­ளன. அந்த கார­ணி­களை எல்லாம் நாம் ஊட­கங்­க­ளிடம் முன்­வைத்தால் இன்று அவ­ருக்கு இருக்கும் கொஞ்ச மரி­யா­தையும் பறி­போய்­விடும்.
எவ்­வாறு இருப்­பினும் அவர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­து­களை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதேபோல் யுத்தம் எப்­போது முடி­வுக்கு வந்­தது, பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டரா இல்­லையா என்ற தக­வலும் எனக்குத் தெரியும். சரத் பொன்­சேகா மட்­டுமே எமக்கு தக­வல்­களை முன்­வைக்­க­வில்லை. இராணுவத்தின் பல வழி­களில் இருந்து எமக்கு த­க­வல்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு கிடைத்­துக்­கொண்டு இருந்­தன. சரத் பொன்­சேகா உத்­தி­யோ­க­பூர்வ ரீதியில் ஒரு அதிகாரி மட்­டு­மே­யாவர். அதை தவிர அவர் பல இர­க­சி­யங்­களை அறிந்­தி­ருக்­க­வில்லை.
இப்­போதும் கூட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனிப்­பட்ட பழி­வாங்கல் மற்றும் யுத்த குற்­றச்­சாட்­டு­களில் என்­னையும் கோத்­த­பாய ராஜபக்ஷவையும் தண்­டித்து பழி­வாங்­கப் பார்க்­கின்­றனர். அதற்கு உடந்­தை­யாக சரத் பொன்­சேகா செயற்­ப­டு­கின்றார். தேசி­யப்­பட்­டியல் மூலம் ரணில் வாழ்க்கை கொடுத்­துள்ளார். அந்த நன்­றிக்­கடன் இப்­போது வெளிப்­ப­டு­கின்­றது. பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட பின்­னரே நான் யுத்­தம் முடிவடைந்ததை அறி­வித்தேன். அவ­ரது உடலை எமது இராணுவம் உறு­திப்­ப­டுத்­தி­யது. தலையில் துப்­பாக்கி ரவைகள் பட்ட நிலையில் தலை சிதை­வ­டைத்து கிடப்­ப­தாக புகைப்­ப­டங்­க­ளுடன் எனக்கு அந்த நேரத்திலேயே இரா­ணுவம்
 தெரி­வித்­தது.
ஆனால் இவை நடந்த நேரம் சரத் பொன்­சேகா எம்­முடன் இருக்­க­வில்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர் கூறும் கதை­களை எவரும் நம்­பப்­போ­வதும் இல்லை. யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் என சித்­த­ரித்து எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யக்கும் முயற்­சி­களின் விளை­வு­களே இவை அனைத்துமாகும்.
அதேபோல் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நாம் பணம் கொடுத்­த­தா­கவும் சுனாமி உதவி நிதி என்ற பெயரில் நாம் புலி­களை பலப்­ப­டுத்­தி­ய­தா­கவும் இன்று ஒரு சிலர் குற்றம் சுமத்­தி­வ­ரு­கின்­றனர். ஆனால் இது முழு­மை­யாக பொய்­யாகும். நாம் புலி­களை பலப்­ப­டுத்த நினைத்­தி­ருந்தால் பிர­பா­க­ரனை கொன்றி­ருக்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­காது. நாட்­டையும் மக்­க­ளையும் விடு­விக்­கவும் பல­மான நாடாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­ப­வுமே நாம் யுத்­தத்தை தைரி­ய­மாக எதிர்கொண்டோம். எனக்கு முன்­னி­ருந்த தலை­வர்­களால் முடி­யாத காரி­யத்தை நாம் செய்­து­காட்­டி­யதே இன்று எவ­ராலும் பொறுத்­துக்­கொள்ள முடி­யாத காரியமாக
 மாறி­யுள்­ளது.
இப்போது இருக்கும் நிலைமையில் என்னை பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தாலும் ஆச்சரியமடையவேண்டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்களில் அந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரும். எமது ஆட்சியை வீழ்த்தி இப்போது உருவாகியுள்ள புதிய அரசாங்கம் முழுமையாக பழிவாங்கல் அரசியலை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்க பொய்யான ஆதாரங்களை திரட்டி தொடர்ச்சியாக எம்மை தாக்கி
 வருகின்றனர்.
யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய 
பின்­னரே நான்
 யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். என்னை பழி­வாங்கும் ஒரே நோக்­கத்தில் பிர­பா­க­ரனை மீண்டும் உயிருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்­ச­ரி­ய­ம­டைய வேண்­டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்­களில் அந்த செய்­தியும் ஊட­கங்­களில் வெளி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்தம் தொடர்பில் அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தியும் இப்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா பாராளுமன்றத்தில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் தொடர்பில் மஹிந்த ராஜ­பக ஷ கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு
 தெரி­வித்தார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



5/6/16

மீண்டும்மிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை.
எனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் உள்ளிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>