siruppiddy

20/10/16

இராணுவத்தின் அடாவடி! பரிதாபத்தில் யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இராணுவத்தினர் சித்திரவதைகள் மேற்கொள்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாக குறித்த நபர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமது மனைவி தமிழக அகதி முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனுஸ்கோடி பொலிஸார் அருள்செல்வனை கைது செய்து க்யூ பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடல் வழியாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச் சென்றடைந்த இலங்கையரிடம் எவ்வித பயண ஆவணங்களும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக