siruppiddy

20/4/18

இராணுவ கட்டளைத் தளபதி ஏ.கே 47 பரிசாக கேட்ட சிறுவனுக்கு பரிசு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் 5 வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவத்தினரிடம் முன்வைத்த நிலையில், குறித்த சிறுவனுக்கு விளையாட்டுப் பொருளாக முச்சக்கர வண்டி பொம்மை ஒன்றை 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி
வழங்கியுள்ளார்.முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா நேற்றுப் பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு 681 
ஆவது படைப்பிரிவு
 இராணுவ தளபதியே இவ்வாறு பரிசளித்துள்ளார்.            
அண்மையில் குறித்த முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்க சென்ற குறித்த இராணுவத் தளபதி சிறுவர்களிடம் விளையாட்டு பொருட்கள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.இதற்கு 5வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி ஒன்று 
எனக்கு தேவை
என்று பதிலளித்துள்ளார். இராணுவத்தினர் எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவனின் பதில் அமைந்திருந்ததினால், அந்த சிறுவனை அழைத்த இராணுவத்தளபதி மாற்றுப்பொருள் ஏதேனும் ஒன்றை கேட்கும்படி அன்பாக பணித்துள்ளார்.இந்த நிலையில், குறித்த சிறுவன் ஹெலிலிகொப்டர் ஒன்று தேவை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி குறித்த சிறுவனை அழைத்து முச்சக்கர வண்டி விளையாட்டுப் பொருளினை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளார்.
அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான (விளையாட்டு) பொலிஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளதாக சந்திரன் முன்பள்ளி அசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






16/4/18

உருத்திரபுரம் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு=???

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை 
பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் 2007 ஆம் ஆண்டு வரையில் பிரபாகரன் இந்த பதுங்கு குழியில் தங்கியிருந்திருக்க வேண்டுமெனவும், புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த பதுங்கு குழியில் பாரியளவில் வானூர்திகளை தாக்கியழிக்கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>