siruppiddy

28/10/15

பிள்ளையானுக்கு நடேசன் கொலையில் நேரடி தொடர்பு ; பிரதீப் மாஸ்ரர் சாட்சியம்

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு எல்லை வீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில்  சுட்டுக்கொல்லப்பட்டார். நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது....

20/10/15

அரசாங்கம் படையினரைக் காப்பாற்ற கருணைச்சபை???

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினரைக் காப்பாற்ற கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின்  முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும் இவ்வாறான ஒரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது....

19/10/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் வெறும் நோட்டு.

கட்டுக்காட்டாய் இவனருகில் இத்தனை நோட்டுக்கள். இவன் பசி என்ன? வயிற்றுப் பசியா? அன்புப் பசியா! ஆதரவுப் பசியா! காலம் கைவிட்டதா! காட்டுமிராண்டிகளுக்கு கருக்கட்டியதா! யாரோ கட்டிய உயிர்க் கூடு இவன் தரையின்றி படரும் பயிரிவன்.;;! ஏதுமறியா இவன் கரங்களில் இருக்கும் பணம் இவன் உய்வதர்க்கு உரமிடுமா!? உறவைத் தேடும் அன்புப் பறவை பாசத்தோடு பற்றிக் கொள்வதற்கு கொளுகொம்பாக காலம் இவனுக்கு வழிகாட்டுமா. கருணைக் கண்கள் இவனைக் தாங்குமா! நாளாந்த...

7/10/15

ஆக்கம் இணுவை சக்திதாசனின் கைம் பெண் !

என்ன பாவம் செய்தேனோ ? எனக்கு தெரியாது  நானறிய ஒரு பாவமும் செய்யவில்லை  என்பது மட்டும் தெரியும் கீரியும் பாம்பும் சண்டை பிடித்தால் கூட முன்னுக்கு சென்று விலக்கு பிடிக்க பின்னுக்கு நின்றதில்லை என்றும் ஏழையாய் இருந்ததினாலோ என்னமோ ஏழைகளைக் கண்டால் மனம் அழும் இடம் பெயர்ந்திருந்த போது நானிருந்த முகாமில் ஓடியோடி எல்லாமாய் இருந்த ஒருவர் மீது புலம் பெயர்ந்தது மனம் விழிகள் நோக்க விடியாப் பொழுதொன்றில் – மஞ்சள் கயிறும்...

2/10/15

விடுதலை புலிகளின் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்டவியக்கும் காணொளி

விஸ்வமடுவில் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஒளிநாடா:உலகையே வியக்க வைத்த காணொளி .உலகையே வியக்க வைத்த போராட்ட அமைப்பு எந்த வித நாடுகளின்  உதவியின்றி தங்களின் உழைப்பு மூலம் வளர்ந்த மறவர்கள் அவர்களின் வளர்ச்சியை பார்த்து உலகமே வியர்ப்பில் பயத்துடன் திரும்பி பார்த்தது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...