யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ்.முகுந்தன் என்பவர் மீது 11-11-20.அன்று குழுவொன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்கத் தொலைபேசியும் பறித்து சென்றது.
கொரோனா தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது அமைப்பு ஒன்று உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊடகவியலாளர் தனது முகநூலில் நேற்று முன்தினம் இரவு பதிவொன்றினை
இட்டிருந்தார்.
பதிவினை நீக்க கோரி குறித்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தம் கொடுத்து, மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு
ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு
செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல், கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை
கைது செய்துள்ளனர்.