siruppiddy
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9/9/14

இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் - அமெரிக்காவும் பிரித்தானியாவும் !!

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பமான 27 வது கூட்டத் தொடரில் பேசிய ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹார்பர், இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆற்றிய பங்கை பாராட்டுவதாக தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல், மரியாதை,ஊக்குவிப்பு, வன்முறை, பாதுகாப்பு தொடர்பில் உலகின் கவனத்தை திரும்பியமை, பாலியல் மற்றும் பாலின அடையாளம் போன்ற விடயங்களில் முன்னாள் ஆணையாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையை அமெரிக்க எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் இந்த விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஹார்பர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என ஜெனிவாவுக்கான பிரித்தானிய பிரதிநிதி கோரினார்.
அச்சுறுத்தல், பழிவாங்கல்கள் இல்லாமல் விசாரணைக்கான ஒத்துழைப்பு மற்றும் அணுகலை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

10/12/13

முன்னாள் கிராம சேவையாளர் மீதான துப்பாக்கி சூட்டிற்கு

 தமிழ் தேசிய மக்கள் முன்னனி கண்டனம்: வவுனியா வைரவபுளியங்குளம் முன்னால் கிராமசேவையாளர் திருமதி சற்குனசேயோன் பாலசுந்தரி மீதான இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
   
கடந்த 4ம் திகதி புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு கிராம சேவையாளரின் வேப்பங்குளம் வீடிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஜெகன் என்ற ஒரு பெயரைக் கூறி அவர் நிகின்றாரா என கேட்டனர். அதற்கு அவ்வாறான பெயரையுடைய ஒருவர் இங்கு இல்லை என முன்னால் கிராம சேவையாளர் பதில் அளித்திருகின்றார்.

எனினும், அவ்விருவவரும் வீட்டினுள் நுழைய முயற்சிக்கவே முன்னாள் கிராம சேவையாளர் வீட்டு கதவினை சாத்தி இருகின்றார். இதனை அடுத்து கதவின் மீது குறித்த நபர்கள் துப்பாக்கியினால் சுட்டிருகின்றனர். இத்துப்பாக்கி சூட்டில் 60 வயதான முனால் கிராமசேவையாளர் காயம் அடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படிருகின்றார்.

தற்போது படையினரும் படையினருக்கு உதவுகின்ற ஆயுத குழுக்களும் மட்டுமே ஆயுதங்களை வைத்திருகின்றனர். அவர்களே இத்துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு கூற வேண்டும். முழத்திற்கு முழம் இராணுவ முகாம்கள் இருகின்ற நிலையிலிலும் உளவு பிரவினர் அன்றாடம் மக்களின் கால்களுக்குள் தடக்குப்படுகின்ற நிலையிலும் வேறு நபர்கள் இத்துப்பாக்கி சூட்டை மேற்கொள்ள வாய்ப்புக்கள் எதுவும் இல்லை.

ஒய்வு பெற்ற அரச அலுவலர் மீது இடம் பெற்ற இத்துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

 

10/11/13

உயிர்களைக்கொடுத்துக் காத்த இலட்சிய நெருப்பை


ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்க வரலாற்றுப் பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம் உருவாக்கவேண்டும் என திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் தெரிவித்துள்ளார்.
   
ஆஸ்திரேலியாவில் நவம்பர் 2ந் திகதி தமிழருவி மணியன் மற்றும் பர்வீன் சுல்தானா ஆகியோரர் கலந்துகொண்டு வெளியிட்டுவைத்த அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு தி.க தலைவர் அவர்கள் வழங்கிய அணிந்துரை வருமாறு:

70 ஆண்டுகள் கடந்த பின்பும் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் திரைப்படங்களில் இரண்டாம் உலகப் போர் குறித்த படங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உண்டு என்கின்றன தகவல்கள். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசிப் படையால் இனப்படுகொலைக்கும் பெருந்துயரத்துக்கும் ஆளானவர்கள் யூதர்கள். இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் முக்கிய இடங்களில் அமர்ந்திருக்க கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். திரைப்படம், படைப்பிலக்கியத் துறையிலும், யூதர்கள் பெருமளவில் இருக்கிறார்கள்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தாங்கள் பட்ட துயரத்தினை எடுத்துச்சொல்லும் விதத்திலும், தம் வருங்கால தலைமுறையினருக்கு எச்சரிக்கையும் தருவதோடு, உலகளவில் ஹிட்லர் � நாஜிக்களின் மீதான பார்வை மாறிவிடாமல் இருக்கப் பாடுபடுகிறார்கள். கடந்த நூற்றாண்டிலே தான் முதல் உலகப்போரும் நடந்திருந்தாலும், ஒப்பீட்டளவில் நோக்கும்போது இரண்டாம் உலகப்போர் பற்றிய பதிவுகளும் குறிப்பாக ஹிட்லரின் யூத எதிர்ப்பும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பதிவு செளிணியப்பட்டு நினைவூட்டப்படுவதைக் கூர்ந்து நோக்கின் நமக்கு இவ்வுண்மை புலப்படும். யூதர்களின் இந்தப் பணி பிழையானதல்ல: அவர்கள் மீண்டும் மீண்டும் இதை நினைவூட்டுவதற்கு காரணம் மீண்டும் அது போல் நடந்து விடக்கூடாது என்பதற்காவும், தம் மீதான உலகின் பார்வையைத் தக்கவைத்துக் கொள்ளவுமே!

ஆனால் அத்தகைய நாடு பிடிக்கும் பார்வையெல்லாம் மாறி நாகரீக வாழ்வை அடைந்து வருவதாகச் சொல்லிக்கொண்டு இருக்கும் சூழலிலும் அந்த நூற்றாண்டைக் காட்டிலும் ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு இலக்கான இனமாக நம் தமிழினம் இருக்கிறது. எத்தனையோ கண்காணிப்பு முறைகளும், தொலைத் தொடர்பு வசதிகளும் நிறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் உலக நாடுகளை எல்லாம் சாட்சியாக வைத்துக்கொண்டு ஓர் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கதவுகளையெல்லாம் நெடுகத் தட்டியும் கூட அவற்றின் மனிதநேயக் கதவுகள் மட்டுமல்ல: கண்கள் கூடத் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றன.

இலங்கை � தம் நாட்டு மக்களையே விமானத்தில் குண்டு வீசிக் கொன்றதையும், உலக நாடுகளின் அமைப்பான அய்க்கிய நாடுகளின் அலுவலகத்தையே வெளியேற்றிவிட்டு கொத்து (க்ளஸ்டர்) குண்டுகளைப் பயன்படுத்தி மக்களைக் கொன்றதையும், ஹிட்லரின் "கான்சண்ட்ரேசன் கேம்"புக்கு நிகராக ஆடு மாடுகளைப் போல் திறந்தவெளி சிறைச்சாலையில் அவர்களை பசி, பட்டினியுடன் அடைத்ததையும் இந்த உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

முல்லை, மருதம், நெய்தல் என இயற்கையோடு அமைந்த ஈழத்தமிழரின் வாழ்வியலில் �கிபீர்களும், மிக்குகளும், கிளைமோர்களும்� கலந்து சிதறடித்திருக்கின்றன. இவற்றையெல்லாம் தொடர்ந்து நாம் பார்த்தும், கேட்டும் அறிந்தும் நெஞ்சம் கலங்கியிருந்தாலும், இந்நாவலில் படிக்கும் போது நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது.

இந்த நாவலை எழுதியுள்ள ஆசிரியர் அரவிந்தகுமாரன் ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். போராட்டத்தை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பது என்பது, நாம் கற்றுக்கொண்ட பாடங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பதையும் சேர்த்தே! அத்தகையதொரு பாடத்தைத்தான் இந்த நாவலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சொந்த நிலம், விவசாயம், உறவுகள், வீடு என அத்தனையும் இழந்து, தங்கள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழவேண்டிய அவல நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையை எண்ணி எண்ணி நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்.

போர்க்களத்தில் � விடுதலை பெற்ற நாட்டுக்கான கனவுகளோடும் எதிர்ப்பார்ப்போடும் ஈழத் தமிழர்கள் செய்த அளப்பறிய தியாகங்களும், வீட்டுக்கொருவரை விடுதலைப் போருக்குத் தந்திட்ட வீரமும் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. "செல்லடியும், கிபீரடியும் பெற்றுச் சாவதற்கு, விடுதலைப் போராளியாக இருந்து சாவது நான் செய்யும் கடமை" என்று உணர்வு இளைஞர்களிடம் மேலோங்கி இருந்ததை நாவலாசிரியர் தெளிவாகக் காட்டுகிறார்.

"போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம், ஆனால் போராடினால் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது� என்ற தம்பி பிரபாகரனின் வாசகம் தமிழர் தம் சிந்தனையில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் களமாடி வென்ற வரலாறு உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒன்றாகும். வீரத்தால் விளையாடி வித்துடலாக ஆன பின்னும், எதிரியின் கைகளில் சிக்கினால் சின்னாபின்னப்படுத்தப்படும் என்று தெரிந்தும், துணிந்து களத்தில் நின்ற வீரத்தைக் கண்டு வியக்காதோர் யார்-? பால் வேறுபாடுகளற்ற சமஉரிமை என்பது மட்டுமல்லாமல், ஒழுக்கத்தை உயிராகப் பேணிய இயக்கம் என்பதுதானே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமை. கொத்துக் குண்டுகளாலும், விமானக் குண்டு வீச்சுகளாலும்,

 கிளைமோர் தாக்குதல்களாலும், துணை இராணுவக் குழுக்களின் கைகாட்டித் தனத்தாலும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உணவுப் பற்றாக்குறையாலும் சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களைக் கொன்று கொண்டிருந்த நிலையிலும், அதற்கு எதிராகக் களத்தில் நின்ற போராளிகளோ சிங்கள மக்களை தம் இலக்காக வைக்கக்கூடாது; அப்படியொரு சிந்தனையே தோன்றக் கூடாது என்ற உயரிய கட்டுப்பாடோடு களத்தில் நின்றனர். அப்படிப்பட்ட அமைப்பைத்தான் சிலர் தீவிரவாதிகள் என்கின்றனர். உலகின் எந்த ஒரு போராட்டத்திற்கும் இத்தகைய வரலாறு இருந்திருக்க வாளிணிப்பில்லை.

ஈழத்தமிழர் வரலாறு என்பது நெடுகவும் ஓர் உரிமைப் போராட்ட வரலாறாகவே இருந்து வருகிறது. அந்தப் போராட்டத்தின் முடிவுகளெல்லாம் துரோகத்தின் விளைவால் எப்படி திசைமாறிப் போயிருக்கின்றன என்பதை நாம் காண முடியும். நம் காலத்தில் நிகழ்ந்த உரிமைப்போர் கூட துரோகத்தால் எத்தகைய பின்னடைவிற்கு உள்ளானது என்பதையும் நாம் கண்கூடாக கண்டோம் என்பது வருத்தத்திற்குரியது. �இன்று எமக்குள்ள

கவலையெல்லாம் தமிழர்களில் விபீஷணர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பது தான்� என்று தந்தை பெரியார் கவலைப்பட்டார். அந்தக் கவலை எத்தனை உண்மையானது என்பதை நாம் கண்டு வருகிறோம்.
இராவணனைப் பற்றிக் குறிப்பிடும் போது கூட புரட்சிக்கவிஞர் "வஞ்சக விபீடணின் அண்ணனென்றே தம்மை வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும் நெஞ்சகன்� என்று சொல்லுகிறார்! அத்தகையதோர் நிலையில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தலைவர் தம்பி பிரபாகரனும் இருந்தாரென்று ஒரு காட்சியினூடாக சொல்கிறார் ஆசிரியர். இப்படி எண்ணற்ற செய்திகளை நுணுக்கமாகவும், உண்மையாகவும் நாவலோடு பின்னிப் பிணைத்து உருவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர் அரவிந்த குமாரன்.

இதில் வரும் பரமசிவனும், பார்வதியும், சிவமும், முருகரும், சுந்தரமும், முத்தம்மாவும், கணேசும், ரூபாவும், மலையவனும், வதனியும், பகத்சிங்கும், மங்களாவும் கற்பனைக் கதைமாந்தர்கள் அல்லர். அவர்களின் பெயர்கள் மாறியிருக்கலாம்; ஆனால் அவர்கள் வீரர்களாவும் வீரங்கனைகளாவும், அப்படிப்பட்டோரை உருவாக்கியவர்களாகவும் நம்மோடு வாழ்ந்தவர்களே!
முன்னுரையில் ஆசிரியர் அரவிந்த குமாரனே குறிப்பிட்டிருப்பதால் கதையின் களத்தை நாம் குறிப்பிடுவது பிழையாகாது. இந்த நாவலின் முதல் பாகம் முள்ளிக்குளத்தில் துவங்கி கிளிநொச்சியில் முடிகிறது. நாம்

பெருமையோடும் பெருமகிழ்வோடும் படிக்க � இந்தப் பயணம் வெற்றிப் பயணம் இல்லைதான். தமிழீழத்தின் தலைநகரம் என்று நாமெல்லாம் உச்சிமோந்து கொண்டாடிய கிளிநொச்சியைக் கடந்தும் தமிழர்களின் போராட்டம் பின் நகர்த்தப்பட்டது என்பதையும், அது முள்ளிவாய்க்காலில் முடியும் போது எத்தகைய கோரம் அரங்கேறியது என்பதையும் அறிந்தே தான் இதனைப் படிக்கிறோம். பாடங்கள் நமக்கு இனிப்பாக மட்டும் இருப்பதில்லை; ஆனாலும் மீண்டும் அவற்றைப் படிப்பதன் மூலம் நாம் கற்பது ஏராளம். நம் குறிக்கோளில் உறுதிகொள்ள முடியும்.

ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்க இத்தகைய பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம்

உருவாக்கவேண்டும். காலத்தினாற் செய்த பணியாக அரவிந்தகுமாரன் அவர்களின் இந்நாவல் இருக்கிறது. இந்நூலின் உருவாக்கத்தில் உழைத்த தமிழ்லீடர்.காம் இணையதளத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நம் பாராட்டுக்கள் என்பதைவிட நன்றிகள் உரித்தாகும்.
"நீந்திக்கடந்த நெருப்பாறு- இறந்த காலமல்ல; இனி நீந்தவேண்டிய நெடுந் தொலைவு. இந்நெருப்பாற்றில் உண்டு" என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்.
ஆசிரியரின் அருந்திறன் ஆற்றல் மிகு எழுத்துகள் புண்பட்ட நெஞ்சுகளுக்குச் சற்று மருந்து தடவுவது போல உள்ளது.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலைப்பெற +61 416 985 577 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளுங்கள்.

8/11/13

பரமேஸ்வரனின் நியாயமான போராட்டத்துக்கு மக்கள் திரளவேண்டும்:



பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்ற பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை, இந்தப் போராட்டக் கோரிக்கை தொடர்பாக உடனடியாக பிரித்தானியா தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இது முற்றிலும் நியாயமான போராட்டம் என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் இரங்க மறுத்த காரணத்தால் 1987 ஆம் ஆண்டு நாங்கள் ஒப்பற்ற ஒரு இளைஞனை உண்ணாவிரதப் போராட்டம் மூலமாக இழந்தோம். அன்று இந்தியா செய்த தவறை இன்று பிரித்தானியா செய்யாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் பிரித்தானியாவிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்தப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அலை அலையாக திரண்டு சென்று தமது ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் ஹமரூன் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பரமேஸ்வரன் தனது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றமையை நாம் உணர்ந்துகொள்கின்றோம். இந்த உறுதிக்கு அவரை நாம் பாராட்டுகின்றோம்.
எவனொருவன் தனது இலட்சியக் கனவில் உறுதியாக நிற்கின்றானோ

அவனே உண்மையான தியாகி. அவனே உண்மையான வீரன். அந்த வகையில் இங்கே தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக அங்கே பிரித்தானியாவில் ஒரு உறவு உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை தொடர்பாக நாம் மெய் சிலிர்க்கின்றோம். ஈழத் தமிழ் மக்கள் என்றும் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். அவருக்கு வெளிப்படையாகவே நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கிறோம்.

இதேவேளை, பரமேஸ்வரனின் கோரிக்கை நியாயமானது. போர்க்குற்றம் செய்த மகிந்த ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடைபெறுவது கேலிக்கூத்தானது. மகிந்தவும் அவரது அமைச்சர்களும் போர்க்குற்றவாளிகள். அவர்கள் சர்வதேசத்தால்

தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மகிந்தவைப் பிடித்து தண்டிப்பதற்குப் பதிலாக அவரது தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் பிரித்தானியப் பிரதமர் அதில் கலந்துகொள்வது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பலவீனப்படுத்தி அவர்களுடைய ஆசைகளை நிராசைகளாக்குகின்ற செயற்பாடாகும்.

எனவே, பரமேஸ்வரன் போன்ற தேசியப் பற்றாளர்கள், பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் போன்றோரின் கோரிக்கையை ஏற்று பிரித்தானியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமல் விடுவதையே நாங்கள் விரும்புகின்றோம்.

கடந்த 1987 ஆம் ஆண்டும் தாயகத்தில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த போது 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து எங்கள் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், துரதிஸ்டவசமாக இந்திய அரசாங்கமானது அவரது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால் எமது ஒப்பற்ற ஒரு வீரனை நாம் இழந்தோம். அதே நிலை எமது பரமேஸ்வரனுக்கு ஏற்படக்கூடாதென்றே நாம் விரும்புகின்றோம். அன்று இந்தியா செய்த தவறை இன்று பிரித்தானியா செய்யாது என்று நாம் நம்புகின்றோம்.

எனவே, பரமேஸ்வரன் விடயத்தில் பிரித்தானியா அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று நாம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றோம். உலகுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்ற பிரித்தானியப் பிரதமர் இந்த

 விடயத்தில் உடனடியாகத் தலையிடுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.
மேலும், பரமேஸ்வரன் எங்கள் உறவு. அவர் எங்களுக்காக போராடுகின்றார். அவரைத் தனித்து விடவேண்டாம் என்று ஈழத் தமிழ் மக்கள் சார்பில் நாங்கள் பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

 அவரது போராட்ட அமைவிடத்திற்கு பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அலை அலையாக அணி திரள்வதன் மூலம் அவரது கோரிக்கை வலுப்பெறும். எனவே இந்த விடயத்தில் பிரித்தானிய வாழ். ஈழத் தமிழ் மக்கள் உடனடியாக சிந்தித்து செயலாற்றுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

4/11/13

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்தஞ்சையில் திறப்பு:

                              
தஞ்சையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில், உலக தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
”வரலாற்றுச் சிறப்பு மிக்க முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சி வருகிற 8 ஆம் தேதி தொடங்கி, 3 நாட்கள், தஞ்சை, விளார் சாலையில் அமைந்துள்ள முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்காக விளார் சாலையில் உள்ள நினைவு முற்றத்தின் அருகிலேயே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த பந்தலிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கலந்து கொள்பவர்கள் தங்குவதற்குத் திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரும் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா தொடங்குகிறது. ஈழ கவிஞர் காசி ஆனந்தன் கொடியேற்றி வைக்கிறார். முனைவர் ம.நடராஜன் தலைமையில் நான் (பழ.நெடுமாறன்) திறந்து வைக்கிறேன். வைகோ, தா.பாண்டியன், பொன்.ராதாகிருஷ்ணன், இரா.இளவரசு, த.வெள்ளையன், சுப.உதயகுமார், தஞ்சை அ.ராமமூர்த்தி, பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

மலேசிய துணை அமைச்சர் வேதமூர்த்தி வி.ஐ.டி.வேந்தர், ஜி.விசுவநாதன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்ழக துணை வேந்தர் பொன்னவைக்கோ, விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் சுண்முகசுந்தரம் ஆகியோர் நூல்களை வெளியீட்டு உரையாற்றுகிறார்கள்.
2ஆம் நாள் நிகழ்ச்சி

இரண்டாம் நாள் நிகழ்ச்சியான 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் மாணவர் அரங்கத்திற்கு சி.தினேஷ் தலைமை வகிக்கிறார். செம்மியன் தொடங்கி வைக்கிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் மகளிர் அரங்கத்திற்கு முனைவர் கல்பனா தலைமை தாங்குகிறார். ம.பொ.சி. மாதவி பாஸ்கரன் தொடங்கி வைக்கிறார். மாலை 3 மணிக்கு நடைபெறும் பாவலர் அரங்கிற்கு இன்குலாப் தலைமை தாங்குகிறார். த.பழமலய் தொடங்கி வைக்கிறார்.
மாலை 5 மணிக்கு நடைபெறும் அறிஞர் அரங்கிற்கு முனைவர்

இரா.இளங்குமரனார் தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழண்ணல் தொடங்கி வைக்கிறார். மாலை 7 மணிக்கு நடைபெறும் பொது அரங்கிற்கு இரா.நல்லகண்ணு தலைமை தாங்குகிறார் சா.சந்திரேசன் தொடங்கி வைக்கிறார். இதில் சீமான், டாக்டர் கிருஷ்ணசாமி, கொளத்தூர் மணி, வேல்முருகன், குடந்தை சோ.அரசன் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.
3ஆம் நாள் நிகழ்ச்சி

மூன்றாம் நாள் நிகழ்ச்சியான 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் உலகத் தமிழர் அரங்கத்திற்கு நீதி நாயகம் கே.சந்துரு தலைமை வகிக்கிறார். மலேசியா இரா.திருமாவளவன் தொடங்கி வைக்கிறார். பகல் 11.30 மணிக்கு நடைபெறும் அறிஞர் அரங்கத்திற்கு முனைவர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். திருவாவடுதுறை ஆதீன இளவரசு தொடங்கி வைக்கிறார்
. மாலை 3 மணிக்கு நடைபெறும் பிற மாநிலத் தமிழர் அரங்கிற்கு சி.ராமமூர்த்தி தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழப்பன் தொடங்கி வைக்கிறார்.

மாலை 5 மணிக்கு நடைபெறும் திரைத்துறை அரங்கிற்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்குகிறார். கலைப்புலி தாணு தொடங்கி வைக்கிறார். நடிகர்கள் சத்தியராஜ், சிவக்குமார், ராஜேஷ், இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வெ.சேகர், தங்கர் பச்சான், ஆர்.கே.செல்வமணி, சேரன் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.

மாலை 7 மணிக்கு நடைபெறும் பொது அரங்கிற்கு கி.த.பச்சையப்பன் தலைமை தாங்குகிறார். சேலம் மு.பாலசுப்பிரமணியம் தொடங்கி வைக்கிறார். இறுதியாக நான் (பழ.நெடுமாறன்) நிறைவுரையாற்றுகிறேன்.
இந்த மூன்று நாட்கள் நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

27/10/13

கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைது செய்யப்படுவர்!



போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரி பிரதேசசபையி;ல் அண்மையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, போரில் இறந்த பொதுமக்கள் மற்றும் மாவீரர்களின் கல்லறைகள் புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வடமாகாண சபைக்கு அனுப்புவதற்கும் அங்கு முடிவெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் அவ்வாறு கோருபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கோத்தபாய எச்சரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.

எனவே யாரும் இறந்துப்போன விடுதலைப் புலிகளுக்கு கல்லறைகளை அமைக்குமாறு கோரமுடியாது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
கல்லறைகளை அமைப்பதற்காக மயானங்கள் என்ற அடிப்படையில் பிரத்தியேக இடங்கள் உள்ளன.

இதனைத்தவிர வேறு புதிய இடங்களில் கல்லறைகளை அமைக்க முடியாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கின் ஆளுநர் சந்திரசிறியை

 பதவியில் இருந்து நீக்கும் கோரிக்கை இன்னும் எழுத்து மூலம் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று கோத்தபாய கூறினார்.
ஆளுநர் ஒருவரை நியமிப்பதும் நீக்குவதும் 13வது அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று கோத்தபாய சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் ஆளுநர் பதவியில் சந்திரசிறியை நீக்குமாறு வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆளுநர் சந்தரசிறியை ஆங்கில ஊடகம் ஒன்று வினவியது.
அதற்கு பதிலளித்த சந்திரசிறி, இதை பற்றி தனக்கு தெரியாது. எனவே எனது தொடர்பான விடயங்களை நீங்கள் மறந்து விடுவது உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார்

10/10/13

கழுதைகள் வழிகாட்ட முற்பட்டால். சேரமான்


எதிரியிடம் கூனிக்குறுகி மண்டியிட்டு வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் என்ற கொள்கையோடு வாழ்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் வழிவந்த பெருமை மானமுள்ள ஒவ்வொரு தமிழருக்கு உண்டு.

பண்டைத் தமிழரின் தன்மான உணர்வைப் பறைசாற்றும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இதில் ஒன்று கோச்சேரமான் கணைக்காலிரும்பொறை எனும் சேர மன்னனால் எழுதப்பட்டது. செங்கணான் எனும் சோழ மன்னனுடன் நடைபெற்ற யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு புற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது தனக்கு வழங்கப்பட்ட நீரை அருந்த மறுத்து உயிர்நீக்கும் முன்னர் அப்பாடலை கணைக்காலிரும்பொறை எழுதியிருந்தார். அது வருமாறு:
‘குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளீர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே’
குழந்தை இறந்து பிறந்தாலும், அல்லது உயிரற்ற வெறும் தசைப்பிண்டம் பிறந்தாலும், அதனை வாளால் கீறி அடக்கம் செய்யும் வீரமரபில் வந்தவன் என்ற வகையில் நாயினும் கீழாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் வயிற்றுத் தீயை அணைப்பதற்காக எதிரியிடம் தண்ணீரைப் பிச்சையாக வாங்கி அருந்துவதை விட செத்து மடிவது மேலானது என்று இப்பாடல் மூலம் தெரிவித்து விட்டு

தனது உயிரை கணைக்காலிரும்பொறை அவர்கள் மாய்த்துக் கொண்டார்.
சங்க காலத்தில் நிகழ்ந்த இவ் அற்புதம் தமிழீழ தாயக மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் மீண்டும் நிகழ்ந்தேறியது. எதிரியிடம் மண்டியிட்டு மானமிழந்து அடிமைகளாக வாழ்வதைவிட இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவுவது மேலானது எனக் கருதி தமிழீழ மண்ணிலும், தமிழீழக் கடலிலும் தமது இன்னுயிர்களை ஆயிரமாயிரம் புலிவீரர்கள் ஈகம் செய்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் எதிரியிடம் சிறைப்பட்ட பொழுதும்கூட தமக்குப் பக்கபலமாக நின்ற மக்களையும், தம்மோடு கூடநின்ற போராளிகளையும் காட்டிக் கொடுக்காது தமது உயிர்களை எத்தனையோ போராளிகள் ஈகம்செய்தார்கள்.

இந்த மான மாமறவர்களின் குருதியின் மீதும், அவர்களின் ஈகத்தின் மீதும் அரசியல் செய்து வாக்குப்பிச்சை கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மகிந்தரின் முன்னிலையில் மண்டியிட்டு கூனிக்குறுகி நிற்பது ஒவ்வொரு மானமுள்ள தமிழரையும் சீற்றம்கொள்ள வைத்துள்ளது.
அதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை மாவீரனாக வர்ணித்து தேர்தல் மேடைகளில் முழங்கி வாக்குப் பிச்சை எடுத்த அதே விக்னேஸ்வரன் இப்பொழுது மகிந்தரிடம் மண்டியிட்டு வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்திருப்பது எந்தவொரு மானமுள்ள தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.

பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் சிங்களத்தோடு ஒட்டி உறவாடித் தனது இரண்டு புதல்வர்களையும் சிங்கள மாமியார்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தவர் என்ற வகையில் இது விக்னேஸ்வரனுக்கு புதிதன்று. எதிரியிடம் மண்டியிடுவதும், எதிரிக்கு அடித்தொண்டு புரிவதும் விக்னேஸ்வரனைப் பொறுத்த வரையில் பழகிப் போன விடயங்கள்தான்.
முதலில் பிரேமதாசாவிற்கும், பின்னர் சந்திரிகாவிற்கும், அதன் பின்னர் சரத் பொன்சேகாவிற்கும் பரிவட்டம் கட்டிப் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஆரத்தழுவி அவரை மகிழ்விப்பதற்காக சிங்கக் கொடியைப் பேருவகையோடு கையில் ஆட்டியசைத்த சம்பந்தருக்கோ அன்றி அவரது வாரிசான சுமந்திரனுக்கோ இது புதிய விடயம் அல்லவே.

ஆனால் சங்கத் தமிழர்களின் வழிவந்து, தமிழீழத்துக் கரிகாலன் பிரபாகரனின் வழிநிற்கும் ஒவ்வொரு மானத் தமிழர்களுக்கும் இது ஏற்புடையதொன்றன்று. அதிலும் தமிழீழ மண்ணை மீட்பதற்காக தமது பிள்ளைகளையும், தாய் - தந்தையரையும், சகோதரர்களையும், உற்ற நண்பர்கள் - உறவினர்களையும் களப்பலிகொடுத்த எந்தவொரு தமிழர்களால் இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று.



சிறீலங்கா அரசியலமைப்பின்படி ஒரு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்பவர் தனது பதவிப் பிரமாணத்தை அரசுத் தலைவரின் முன்னிலையில் அல்லது மாகாண ஆளுநரின் முன்னிலையில் மேற்கொள்ளலாம். அவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள விரும்பாதவர் ஒரு சமாதான நீதவானின் முன்னிலையில் தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மூன்று தெரிவுகள் விக்னேஸ்வரனுக்கு இருந்த பொழுதும்கூட மகிந்தரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு அவர் எடுத்த முடிவும், தனது முடிவில் அவரும், சம்பந்தரும், சுமந்திரனும் விடாடிப்பிடியாக இருந்தமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றிய மூன்று செய்திகளை தமிழர்களுக்கு உணர்த்தி நிற்கின்றன.

டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், கே.பி போன்ற தேசத்துரோகிகளின் வழியில் ஒட்டுண்ணி அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கப் போகின்றது என்பது முதலாவது செய்தி.


மகிந்தருக்கு எதிராக மேற்குலக தேசங்களில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களும், பாரத உபகண்டத்தில் தாய்த் தமிழக உறவுகளும், உலகின் ஏனைய பாகங்களில் தமிழகம் - தமிழீழம் ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்ட புகலிடத் தமிழர்களும் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதில் சிறீலங்கா தூதரங்களுக்கு உறுதுணையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்பது இரண்டாவது செய்தி.

மாவீரர்களினதும், மானச்சாவெய்திய மக்களினதும் நிறைவேறாத நெடுநாள் கனவாக விளங்கும் தமிழீழத் தனியரசுக்கான எண்ணக்கருவை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபூண்டு நிற்கின்றது என்பது மூன்றாவது செய்தி.

ஈழத்தீவில் தமிழர்களுக்கு உரிமையில்லை என்று கூறிய சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலமும், ரணில் விக்கிரமசிங்கவை திருப்திப்படுத்துவதற்காக சிங்கக் கொடியை பேருவகையோடு ஆட்டியசைத்ததன் மூலமும் ஏற்கனவே தனது ஒட்டுண்ணி அரசியல் மூலோபாயத்தை சம்பந்தர் வெளிப்படுத்தி விட்டார்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்த பொழுதே மகிந்தருக்கு உறுதுணையாக செயற்படும் தனது எண்ணத்தை சம்பந்தர் வெளிப்படுத்தி விட்டார்.

தவிர தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தாய்த் தமிழகத்தையும், தமிழீழத் தனியரசுக் கனவைச் சுமந்து மேற்குலக தேசங்களில் குரல்கொடுத்து வரும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களையும் வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு கூறியதன் மூலம் தமிழீழத் தனியரசுக்கான எண்ணக்கருவைக் குழிதோண்டிப் புதைக்கும் தனது முடிவை ஏற்கனவே விக்னேஸ்வரும் வெளிப்படுத்தி விட்டார்.

இந்த வகையில் மகிந்தரின் முன்னிலையில் கூனிக்குறுகி மண்டியிட்டு வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் மூலம் தமிழர்களுக்கு விக்னேஸ்வரனும், சம்பந்தரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படுத்தியுள்ள மூன்று செய்திகளும் புதியவை அல்லவே
.
பண்டைய பபிலோன் சாம்ராச்சியத்தின் தளபதிகள் தமது வீரர்களிடம் அடிக்கடி முதுமொழி ஒன்றைக் கூறுவார்களாம். ‘ஒரு கழுதைக் கூட்டத்திற்கு ஒரு புலி தலைவனாகி தலைமைதாங்கினால் அக் கழுதைக் கூட்டம் புலிப்படை போன்று போர்புரியும். ஆனால் ஒரு புலிக்கூட்டத்திற்கு ஒரு கழுதை தலைவனாகினால் அப்புலிப்படை கழுதைக்கூட்டம் போன்று அங்கிங்கென சிதறியோடிவிடும்’ என்பதுதான் அந்த முதுமொழி.

இது இப்பொழுது ஒவ்வொரு தமிழருக்கும் ‘அதுவும் ஒவ்வொரு தமிழீழவருக்கும்’ பொருந்தும். ஏனென்றால் பிரபாகரன் எனும் புலியின் வழிகாட்டலில் புலிகளாக வாழும் எம்மை இப்பொழுது கழுதைக்கூட்டம் ஒன்று வழிநடத்த முற்படுகின்றது. இதனைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் நாம் நடந்து கொள்ளத் தவறினால் புலிகளாக விளங்கும் எமது நிலை கழுதைக்கூட்டத்தின் நிலையாகவே மாறிவிடும்.

 

7/10/13

முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்!



செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
  அரசாங்கத்தின் முதலாவது அரசவை தனது
ஆட்சிமைக்காலமாகிய மூன்று வருடங்களை நிறைவு செய்துகொள்கின்றமையால் அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளுக்கமைய 2013 ஒக்ரோபர் 1ம் நாளன்று முதலாவது அரசவை கலைக்கப்படுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கமைய தேர்தல் மூலம் புதிதாக அமைக்கப்படும் அரசவை ஐந்து வருடங்களைத் தனது ஆட்சிமைக் காலமாகக் கொண்டிருக்கும் என்பதனையும் புதிய அரசவையினை உருவாக்குவதற்கான தேர்தல்களைச் சுயாதீனமான வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களும் நடைமுறைகளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் மக்களுக்கு அறியத் தரப்படுகிற என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலவாது அரசவை கலைக்கப்பட்டுப் புதிய அரசவை உருவாக்கப்படவுள்ளதொரு சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாகவும்; அதன் செயற்பரிமாணம் தொடர்பாகவும் சில கருத்துக்களை இந்நேரத்தில் மக்களுடன் பகிர்ந்து கொள்ளல் பயன் தரக்கூடியது எனக் கருதுகிறேன்.

2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பினை நடத்தி முடித்துத் தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதுடன் தமிழர் தேசத்தின் விடுதலைக் கனவை முழுமையாகத் தான் துவம்சம் செய்துவிட்டதாகவே சிங்களம் கருதியது.

தமிழீழத் தாயகத்தின் அனைத்துப் பரப்புகளிலும் சிங்கள இராணுவத்தின் அசிங்கமான கால்களைப் பரவச்செய்து சிறிலங்காவின் ஒடுக்குமுறைச் சட்டங்கள் ஊடாகவும், இராணுவ வன்முறைகள் ஊடாகவும் தமிழ் மக்களின் கழுத்தை இறுகத் திருகியவாறு தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் தகர்த்துத் தமிழர் தேசத்தை

அடிமைகொண்டு விடலாம் என்றும் சிங்களம் எண்ணியது.
தமிழர் தேசத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், இலங்கைத்தீவு ‘ஒருநாடு ஒருமக்கள்’ கொண்டது என்றும் அம்மக்கள் அனைவரும் ‘சிறிலங்கர்களே’ என்றும் கூறி ‘வெற்றிப் பிரகடனம்’ செய்தது.

இத்தகையதொரு சூழலில்தான் சிறிலங்கா சிங்கள தேசத்தின் நாடு என்பதனையும் தமிழீழமே தமிழர் தேசத்தின் நாடு என்பதனையும் தெளிவாக அடையாளப்படுத்தும் வகையிலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்தைப் புதிய பரிமாணத்தில் அரசியல் இராஜதந்திர வழிகளில் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தமிழர் தேசத்தின் விடுதலை இலட்சியத்தினை இனஅழிப்பு நடவடிக்கைள் மூலமோ எத்தகைய பெரும் ஒடுக்குமுறைகளின் மூலமோ தகர்த்தெறிய முடியாது என்பதனை முரசறைந்து சொல்லும் வகையில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் முதலாண்டு நினைவு நாட்களின் போது 2010ம் ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை அங்குரார்ப்பணம் செய்துகொண்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் பல்வேறு எதிர்ப்புக்களின் மத்தியிலேயே நிகழ்ந்தது என்பதுவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தையைக் கருவிலேயே கருக்கிவிட முயற்சிகள் பல நடைபெற்றன என்பதுவும் இத் தருணத்தில் நினைவில் வரவே செய்கின்றன.

இருப்பினும் அவற்றையெல்லாம் தாண்டி இக் குழந்தை மூன்று வயதை நிறைவு செய்திருக்கிறது என்பதுவும் தழிழீழ மக்களின் சுதந்திர தாகத்தின் குறியீடாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது என்பதுவும் தமிழர் தேச வரலாற்றில் முக்கியமான பதிவாக அமைகின்றன.
புலம் பெயர் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தழிழீழத் தாயகத்திலும் நமது மக்களின் விடுதலைக் கனவை உயிர்ப்போடு வைத்திருப்பதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணையாக அமைந்திருக்கிறது.

தமிழ் நாடு மற்றும் உலகத் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் தமிழீழ அரசின் உருவாக்கத்தைக் கட்டியம் கூறிநிற்கும் அமைப்பாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்று விளங்குகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் உலகுக்கு முன்னுதாரணமாக அமையும் ஒரு நடைமுறையான நாடுகடந்த அரசாங்கத்தினை நாம் நடாத்தியிருக்கிறோம். ஜனநாயக விழுமியங்களுக்கமைய மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, அவர்களால் வரையப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் ஒரு அரசாங்கம் இயங்குவதென்ற

செயன்முறையைப் பின்பற்றி நாம் செயற்பட்டு வந்துள்ளோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரமும் தமிழீழ மக்கள் தமது அரசை நிறுவும்போது பயன்படுத்தக்கூடிய சொற்பதங்களைத் தன்னோடு கொண்டிருந்தது. இது தமிழீழ மக்களின் விடுதலைக்கனவின் ஒரு

குறியீடாகவே உட்கொணரப்பட்டது. அரசவை எனவும், பிரதமர் எனவும் அமைச்சர்கள் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விளிப்பது மக்கள் மத்தியில் நிலவும் தனித் தமிழீழ அரசின் உருவாக்கம் பற்றிய பெருவிருப்பினைச் சுட்டிக் காட்டும் வகையிலானதாகவே அமைகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலவாது அரசவைக்காலம் உண்மையில் ஒரு பரீட்சைக்களமாகவே அமைந்தது என்பதனையும் இங்கு குறித்துக் கொள்ளல் பொருத்தமானது.
முன்னர் ஒருபோதும் இயங்கியிருக்காத வகையில் முற்றிலும் புதியதொரு பரிமாணத்திலேயே நாம் இயங்கி வந்துள்ளோம். பல்வேறு விடயங்களையும் நாடுகளின் எல்லைகளைக் கடந்த அளவிலே அரசியல் ரீதியாக,

 வெளிப்படையாக, விவாதித்து ஜனநாயக அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் நடைமுறைக்கு எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டோம்.
இக் காலத்தில் நாம் எதிர்பார்த்த எல்லாவற்றையும் பல்வேறு சவால்கள், காரணங்களால் எம்மால் நிறைவு செய்யமுடியவில்லை. எனினும் தமிழீழ

 இலட்சியத்தை உயிர்ப்பாகப் பேணும் ஓர் அமைப்பாக எம்மை நிலைநிறுத்திக் கொண்டோம். எமது தொடர்சியான செயற்பாடுகளை உலகின் பல்வேறுசக்திகளும் பலமிக்க அரசுகளும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள் என்பதனை நாம் தெளிவாக உணரமுடிகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளை மேலும் விரிவாக்கிச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது.

தாயகத்தில் நமது மக்கள் விடுதலை வேண்டி எழுச்சியாக உள்ளார்கள். அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்களின் பங்குபற்றல், வாக்களிப்பு என்பன அதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. ஆறாவது அரசியல் அமைப்புச் திருத்தச் சட்டத்தினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அரசியல் வெளிக்குள் நின்றுகொண்டு, தமது விடுதலை உணர்வை தம்மாலியன்ற அளவுக்கு எம்முறவுகள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதேநேரம் முற்றிலும் திறந்த அரசியல் வெளியில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பானது சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழமே என்பதை அதன் உருவாக்க நாட்களிலிருந்து உரத்துக் கூறிவருகின்றது.
சிறிலங்கா அரசு தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்கப் போவதில்லை. சிங்கள அரச இயந்திரம் தமிழீழ மக்களை மேலும் அடிமைப்படுத்தவே வழிதேடும்.

இதனால் தமிழீழத் தனியரசைத் தவிர எமது விடுதலைக்கு வேறு வழியேதும் இல்லையென்ற உண்மையை வரலாறு மீண்டும் வலியுறுத்துவதற்கும், சர்வதேச அரங்கில் அதற்கான அங்கீகாரம் பெறுவதற்கும் அதிககாலம் எடுக்கப் போவதில்லை. அப்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இன்னும் கூடுதலான அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கும்.

தற்போது மூன்று வருடக் குழந்தையாயுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக வழிநடாத்தி வளர்த்துச் செல்வதற்குரிய பாதுகாவலர்களைத் தெரிந்தெடுப்பது இக் குழந்தையின் பெற்றோர்களாகிய மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தையின் உண்மையான பாதுகாவலர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டும், தகுதி கொண்டோரையெல்லாம் வரப்போகும் அரசவைக்கான தேர்தலில் முன்னிறுத்தியும், நடைபெறவுள்ள தேர்தல்களில் பெருந்தொகையாகக் கலந்துகொண்டு மக்களாட்சி மரபுகளை மேலொருபடி உயர்த்தும் வகையில் வாக்களித்தும், தமிழீழ மக்களின் விடுதலைக் கனவை நனவாக்கும் பெரும் பணிக்காகச் செயற்படுமாறு தமிழ் உறவுகள் அனைவரையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவையின் உறுப்பினர்களாக முன்வந்து பல்வேறு முனைகளில் அருந்தொண்டாற்றிய அனைத்து உடன்பிறப்புகளுக்கும்,  துணைநின்று பல துறைகளில் உதவி வந்த எல்லோருக்கும் இத் தருணத்தில் எனது பணிவும் அன்பும் கலந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு பிரமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைக்கான தேர்தல்! வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 2 முதல் 8 ஆம் திகதி வரை
தமிழ் மக்கள் செறிவாக வாழும் 15 நாடுகளிலிருந்து 112 அங்கத்தவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஒக்டோபர் 01, 2013 அன்று கலைக்கப்பட்டு ஒக்டோபர் 26ம் நாள் புதிய அரசவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் சம்பந்தமான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன.
1. நா.க.த. அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013
2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது  ஒக்டோபர் 02, 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08, 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள்  ஒக்டோபர் 10, 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12, 2013
6. நா.க.த. அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26, 2013

அரசவை கலைக்கப்படுவதற்கும் தேர்தல் மனுத் தாக்கல் செய்வதற்குமான கால இடைவெளி ஒரு வாரம். வேட்பாளராக மனுத் தாக்கல் செய்யவிருக்கும் அன்பர்களைக் கருத்தில் கொண்டு, இரு மாதங்களுக்கு முன்பிருந்தே இத் திகதிகள் ஊடகங்கள் வாயிலாகவும் இணையத் தளங்கள் வாயிலாகவும் அறியத் தரப்பட்டுக் கொண்டிருக்கிறன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தலில் வாக்குரிமை
வாக்காளர், பொதுவாக, அவரவர் வதிவிடத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட ஒரு தொகுதியில் தங்கள் ஒற்றை வாக்குகளைப் பதிவு செய்யும் தகைமை உடையவராவர். இருப்பினும், பல அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளில் வேறுபாடுகள் காணப்படலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தல்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எதிர்வரும் தேர்தலில், தேர்தல் தொகுதிகள் தனி அங்கத்தவர் தொகுதியாகவோ அல்லது பல அங்கத்தவர் தொகுதியாகவோ அமையலாம். பொதுவாக, அதிக பட்ச வாக்குகளைப்

பெற்றவரே வெற்றியாளராவார். இருப்பினும், பல அங்கத்தவர் தொகுதிகளில் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் கிரமங்கள் வேறுபடலாம். நாட்டு நிலைமைக்கேற்ப, உரிய கிரமத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிக பட்ச வாக்குகளின் அடிப்படையிலான வாக்களிப்பு
• தனி அங்கத்துவத் தொகுதி

பெற்றுக் கொண்ட வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில், என்ன நூற்றுவிழுக்காடாக இருந்த போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்கும் முறை.

• பல அங்கத்துவத் தொகுதி
அங்கத்துவ எண்ணிக்கைக்குச் சமனான வாக்குகளைப் பதிவாக்கும் உரிமை தனி வாக்காளருக்கு வழங்கப் படுதல், அல்லது ஒருவருக்கு ஒரே வாக்கு என்ற முறையில் வாக்குகள் பதியப்பட்டு, தனித்தனி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தி அத்தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

வாக்காளர், வேட்பாளர் தகைமைகள் கீழே தரப்படுகின்றன:
வாக்குப் பதிவு முறை- கனடாவில் தேர்தல் நடைபெறும் அனைத்துத் தொகுதிகளிலுமே ஒரு வாக்காளருக்கு ஒரு வேட்பாளர் என்னும் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்குக்கே உரித்துடையவராவார்.
வாக்காளர் தகுதி

1. தேர்தல் நாளன்று வாக்காளருக்கு 17 வயது பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
2. வாக்குரிமை கோரி வரும் வாக்காளர், தலைமைதாங்கும் அலுவலர்  கணிப்பில் தமிழீழப் பண்பாட்டுடன் இனங்காணப்படல் வேண்டும்.
ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் என்பவற்றாலோ, வேறு ஏதும் எஞ்சிய பிரிவின் அடிப்படையிலோ இணைந்தவராதல் வேண்டும்.

பின்னைய பிரிவு ஓர் எஞ்சிய பிரிவாகக் கருதப்பட்டு தனித் தனியே ஆராயப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தகுதி தீர்மானிக்கப்படும்.
வேட்பாளர்களின் தகுதி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நோக்குடன் நடாத்தப்படும் தேர்தலில் போட்டியிட முன்வரும் ஒருவர் கீழ்க்காணும் தகமைகளைப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
1.   குறிப்பிட்ட தேர்தலில் தான் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன்,

2. வேட்பு மனு தாக்கல் செய்பவர், அந்த நாட்டின் வதிவுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.
2.1 அவர், தேர்தலுக்கு நிற்கும் மாவட்டத் தொகுதியில் வதிப்பவராக இருத்தலே அதிசிறந்த நிலையாகும்.

2.2 இருப்பினும், அவர் வதியும் குறிப்பிட்ட மாவட்டத் தேர்தல் தொகுதியில் மட்டுமல்லாமல் அதே தேர்தல் பிராந்தியத்தில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவதற்குத் தகுதியுடையவர் ஆகிறார்.

2.3 குறித்த அப் பிராந்தியத்தில் வசிப்பவர் எவரும் வேட்பாளராக முன்வராத நிலையில் அந்நாட்டின் எப் பிராந்தியத்திலாவது வசிப்பவரிடமிருந்தும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் சிறப்புரிமை தேர்தல் ஆணையாளருக்கு உண்டு.

3. வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், நா.க.த.அ தேர்தல் ஆணையத்திலோ, நாட்டுத் தேர்தல் ஆணையத்திலோ பதவி வகிப்பவராகவோ அல்லது நா.க.த. அரசாங்கத்தின் தேர்தல் நிர்வாகத்துடன் எவ்வழியிலேனும் தொடர்புடையவராகவோ இருத்தலாகாது.

வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், இலாபத்துக்காகவோ, இலாப நோக்குடனோ குற்றவியல் தவறு செய்தார் என எந்த நீதிமன்றத்தாலும், தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும். அல்லது போட்டிக்காலத்தில் குற்றப் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
4.  வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், தமிழ்ஈழ மக்களின் நலன்களுக்கு மாறாகவுள்ள வேற்று நாடுகளில் சேவை ஆற்றுபவராக இருக்கக் கூடாது. அத்தகைய நாட்டிலிருந்து பொருளாதார நன்மை ஏதும் அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

5. வைப்புப் பணம்: பதிவுக்கட்டணமாகத் அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் தொகையை அவர்கள் குறிப்பிடும் முறைப்படி செலுத்தவேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசுடன் இணைந்து இனத்தின் விடிவிற்காகச் செயலாற்ற விரும்பும் அன்பர்கள் உங்கள் நாட்டுத் தேர்தல் ஆணையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தேர்தல் நேர்மையாகவும், உண்மையாகவும், நன்நோக்குடனும், வெளிப்படையாகவும் நடக்கும் என்பதை உறுதி செய்கிறேன்.
திருமதி. செ. ஸ்ரீதாஸ்  தலைவர், தேர்தல் ஆணையம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

5/10/13

இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு சில பெளத்த..


நாட்டின் இனவாத மழை ஓய்ந்துள்ள இவ்வேளையில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு சில பெளத்த அமைப்பு முயற்சிப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். பொதுபலசேனா போன்ற பெளத்த

இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் மார்க்க விடயத்தில் அதிகமாக தலையிட்டு மீண்டுமொரு முறை யுத்த சூழலை ஏற்படுத்த முயல்வதை எங்களால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
   
எம்.வி. ரஸ்மின் எழுதிய போர்க்கால "சிங்கள இலக்கியங்கள் ஒரு பன்மைத்துவநோக்கு" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து இனவாத மழை பெய்து ஓய்ந்திருக்கும் இவ்வேளையில் பொதுபலசேனா, ராவணா பலய போன்ற பெளத்த இனவாத சக்திகள் நாட்டில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு முயற்சிக்கின்றன.

இவ்வாறு மீண்டுமொரு முறை இந்நாட்டில் யுத்த சூழலை உருவாக்க பெளத்த அமைப்பு முயற்சிக்கின்றமையை எங்களால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையை சிறந்த ஜனநாயக நாடாக கட்டியெழுப்புவதாயின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமவுரிமை மற்றும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருமைப்பாட்டுடன் கூடிய ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தற்போது நமது நாட்டில் சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற இவ்வேளை மேற்படி நாட்டின் சூழ்நிலை காணப்பட்டால் இலங்கையை கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.

தமிழர் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட பண்பைக் கொண்டவர்கள் என்பதை அவர்களுடைய இலக்கியங்கள் மூலமாக சிங்களவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்நாடு இன ரீதியாக பிளவுபடுவதற்கு வாய்ப்புள்ளது.

இவையனைத்தையும் புரிந்துணர்வுடன் தீர்த்து ஒருமைப்பாட்டுடன் கூடிய ஜனநாயக நாடாக இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும். அதற்கான எடுத்து காட்டே ரஸ்மின் எழுதிய ��போர்க்கால சிங்கள இலக்கியங்கள்" என்ற நூலாகும்.

ரஸிமினின் நூலை சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. எனவே இலங்கையை இனவாத சக்திகளிடமிருந்து மீட்டு சமத்துவம், சமாதானம் நிறைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்
 

29/9/13

தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல்: - கனடாவில் இன்று ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு (PRESS CONFERENCE) - செப்டெம்பர் 29 2013 இன்று கனடாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 1 ஆம் நாள் நாடு கடந்த

தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைக்கப்பட்டு அக்டோபர் 26 ஆம் நாள் பொதுத் தேர்தல் தமிழர் செறிவாக வாழும் அனைத்துப் புலம் பெயர் நாடுகளிலும் நடைபெறவிருக்கிறது.
   
மக்கள் மத்தியில. தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் எடுத்துச் ல்லப்பட ண்டும் என்னும் நோக்குடன் தமிழர்கள் அதிக அளவில் ழும் கனடா நாட்டில் ப்டெம்பர் மாதம் 29 ஆம் நாள் ஊடகங்களுடனான கலந்துரையாடல் ஒன்று நாடு டந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் ஒழுங்கு
 செய்யப் பட்டிருக்கிறது.

கலந்துரையாடல் தொடர்பான விபரங்ள்:
காலம்: செப்டெம்பர் 29 2013
நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
இடம்: மாக்கம் சிவிக் சென்டர்

கனடா அறை (Canada Room)
101 Town Centre Blvd.
Markham, L3R 9W3
இக் கலந்துரையாடலில் அனைத்து ஊடகத்தினரும் பங்கு கொண்டு ஒத்தாசை வழங்குமா கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமதி. செ. ஸ்ரீதாஸ்
தலைமைத் தேர்தல் ஆணையாளர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
416-756-4607
 

16/9/13

பெரும் திரளான மக்கள் !தலைவர் பிரபாகரன் பதாதைகளோடு

  
 
இன்றைய தினம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைக் கழகத்துக்கு முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் இதில் சென்று கலந்துகொண்டுள்ளார்கள். ஐ.நாவில் தற்போது மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தி , ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டவே இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையம். பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று இப்போராட்டத்தில் கலந்துகொண்டு சர்வதேச விசாரனை தேவை மற்றும் போர்குற்ற விசாரணை தேவை என்பதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அண்மையில் ஜெனீவா முன்றலில் தன்னுடலை தீக்கிரையாக்கிய ஈகைபேரொளி செந்தில்குமரனது, நிழற்படத்திற்கு மலர்மாலை சூட்டி அகவணக்கம் செலுத்திய பின்னரே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது என மேலும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


 

15/9/13

பழ.நெடுமாறன், காசியானந்தன் ஜெனீவா ஒன்று கூடல்


 
படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற ஜெனீவா முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் - பழ.நெடுமாறன், காசியானந்தன் அழைப்பு
( காணொளி)

 

12/9/13

எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது விசாரணை

 
நடத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு! விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு

மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள்

 விடுதலைப்புலி உறுப்பினர்கள் அராசங்கத்தின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை

இராணுவத்தினரிடம் கையளித்ததாகவும், இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று, தமது பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதாகவும், அவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
   
நான்கு வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இராணுவமோ அல்லது அரசாங்கமோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும். எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விசாரணை செய்வதுடன், அவர்களை

 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி, எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பில் ஆட் கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் தொடர்பாக இராணுவ தரப்பில் கால தாமதத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தங்களிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்களுடைய ஆம்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை

 விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் மேல் நீதிமன்றத்தில் கோரியதையடுத்து, இது தொடர்பான நீதவான் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஆரம்பித்து கூடிய விரைவில் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது, இதேவேளை, மற்றுமொரு தொகுதியாகிய மேலும் 7 பேர் தொடர்பிலான

 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான இராணுவ தரப்பு கருத்துக்களை வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வவுனியா மேல் நீதிமன்றம் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்த்தரப்பினராகிய இராணுவ தரப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

 

30/8/13

திரைப்படமாகிறது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு " :

 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தை வ.கெளதமன் இயக்குகிறார். சின்னத்திரையில் ஒளிபரப்பான ஆட்டோ சங்கரின் மரண வாக்கு மூலம், வீரப்பனின் வாழ்க்கை தொடர் சந்தனக்காடு, போன்றவற்றை இயக்கிய கெளதமன், மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தற்போது இவர், பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இப்படம் குறித்து வ.கெளதமன் கூறியதாவது:

மேதகு பிரபாகரனின் வாழ்க்கையை  திரைப்படமாக பதிவு செய்ய வேண்டும் என்பது என்னுடைய பெருங்கனவு. கடந்த பத்தாண்டுகளாக போராட்ட வரலாறு தொடர்பான செய்திகளை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.

கடுமையான போரின் மத்தியிலும் 'சந்தனக்காடு' தொடரை மேதகு பிரபாகரன் அவர்கள் முழுமையாக பார்த்திருக்கின்றார் என்ற செய்தியை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பும் நெகிழ்ச்சியும் இன விடுதலைக்கான படைப்பை செய்ய வேண்டுமென்ற எனது இலட்சியத்தை மேலும் தீவிரமாக்கியது.

2008 ஆம் ஆண்டு கால கட்டத்திலேயே ஈழப்போராட்ட வரலாற்றை திரைப்படமாக்கும் பணியை என்னை வைத்து தொடங்க வேண்டும் என மேதகு பிரபாகரன் எண்ணியிருந்தார் என்ற செய்தி அறிந்த போது அளவில்லாத மகிழ்ச்சியடைந்தேன்.

அதற்குள்லாக நான்காட் கட்ட ஈழப் போர் கடுமை அடைந்துவிட்டதால் பணிகள் தேங்கியது.
இதுபதிற்கு மேற்பட்ட நாடுகளின் துணையோடு ஈழம்

சிதைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எம்மினத்தின் விடுதலை வேட்கை சிதையவில்லை. இதுவரை மூன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். போருக்கு பிறகும் தமிழர்களுக்கு விடிவில்லை.

உயிரை உறையச் செய்யும் இந்த உண்மை மீது பெரிதாக கவனம் கொள்ளாத உலக சமூகத்தின் மனசாட்சியை இப்படைப்பு உலுக்கும். இந்த படத்தில் தமிழ்த்திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும், நடிகையரும் பங்கேற்கிறார்கள்.

வரலாற்று நாயகன் பிரபாகாரனாக ஒரு பச்சைத் தமிழன் தான் நடிக்கிறார். படப்பிடிப்பு தொடக்க விழா குறித்தும், படத்தில் பங்கு பெறும் நடிகர், நடிகையர் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்.

பிரேவ் ஹார்ட், உமர் முக்தார் உள்ளிட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் இப்படம் உருவாக்கப்படும். மிக பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட இருக்கும் இந்த தமிழ்த் திரைப்படம், இந்திய மொழிகளில் மாட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்படும்.

முள்ளிவாய்க்காலில் நந்திக் கடல் பகுதியில் உலக நாடுகள் தந்த பெரும் ஆயுதங்களோடு நாலா பக்கமும் சிங்களப் படைகள் சூழ்ந்து நின்ற அந்தக் கடைசி நிமிடங்களில் அல்ல, அந்த கடைசி நொடியில் மேதகு பிரபாகரன் என்ன முடிவெடுத்தார் என்பது இன்றுவரை எவரும் அறிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கின்றது.

அந்த இறுதி நொடியின் நிகழ்வை உண்மையாகவும் உக்கிரமாகவும் இந்தப் படைப்பு பறைசாற்றும்.

ஒவ்வொரு தமிழனும் இந்த இனத்தில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்ளும் வகையில், எம் இனத்தை அழித்தொழிக்க கைகோர்த்து நின்ற எதிரிகளும் துரோகிகளும் தலைமுறை கடந்தும் தலை குனிந்து நிற்கும் விதத்தில் உருவாகும் இத்திரைப்படம், ஒரு திரைப் படைப்பு மட்டுமல்லாமல் தமிழின விடுதலையின் திறவுகோலாகவும் இருக்கும்

9/4/13

10 வருடமாக தலையில் துப்பாக்கிச் சன்னத்தோடு இருந்த



லண்டனில் கடந்த 2001ம் ஆண்டு முதல் வசித்துவந்த ராமச்சந்திரன் சிவகுமார் என்னும் போராளி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் திடீரென மரணமடைந்தார். 41 வயதுடைய சிவகுமார் என்னும் இப் போராளி 13 வருடங்களாக புலிகள் அமைப்பில் இருந்து போராடியுள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் , பின்னர் பிரித்தானியா வந்து தனது மனைவி மற்றும் மகளுடன் ஹம்ஸ்டட் நகரில் வசித்துவந்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் நாள் அவர் குழிக்கச் சென்றவேளை, மயக்கமடைந்து குழியலறையில் வீழ்ந்தார் என்று பொலிசார் நேற்றைய தினம் நடைபெற்ற மரண விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். மயக்கமடைந்த சிவகுமார் பின்னர், றோயல் பிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் 2 நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டார் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
தனது கணவருக்கு தலையில் காயம் இருந்ததை நான் அறிவேன். அவரது அம்மா மற்றும் நண்பர்கள் எனக்கு கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர் இதுதொடர்பாக என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை, ஏன் என்றால் நான் பயந்துவிடுவேன் என்பதற்காகத்தான் என்று நீதிமன்றில் கண்ணீர்மல்க கூறினார் சிவகுமாரின் மனைவி. தனது கணவர் அதிகாலை 3.00 மணிக்கே வேலைக்குச் செல்வார் என்றும், அதனால் அவர் இரவு 12.00 மணிக்கு குழிக்கச் சென்றார், அவ்வேளையே அவர் மயங்கி விழுந்தார் என்று அவர் கூறியுள்ளார். தலையில் துப்பாக்கிச் சன்னம் போன்றதொரு பொருள் காணப்பட்டதாகவும், இந்த கூரிய பொருளே அவர் இறப்புக்கு காரணம் எனவும் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் நீதிமன்றில் சாட்சியமளித்தார். இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தில் , சிவகுமார் காயமடைந்ததனாலேயே அவர் இறப்பு நிகழ்ந்தது என்பதனை நீதிபதி உறுதிப்படுத்தி தீர்ப்புவழங்கியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
அதுமட்டுமல்லாது நீதிபதி தனது உரையில், "விடுதலைப் புலிகள் என்னும் போராட்ட அமைப்பில் இருந்த" சிவகுமார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றும் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகங்கள் "விடுதலைப் புலிகளின் போராட்ட வீரர்" என்ற சொற்பதங்களையே பாவித்துள்ளமை தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனது இறப்பிலும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திகழ்ந்திருக்கிறார் சிவகுமார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்