9/12/19
இரு கண்களையும்.ஓர் கையும்போ ரில் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை
16/11/19
தேர்தல் கடமையில் ஈடுபட்ட 51 அதிகாரிகளுக்கு திடீர் ஒவ்வாமை
உணவு விசமடைந்ததன் காரணமாக தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர்
ஒருவர் குறிப்பிட்டார்.
கொழும்பு ரோயல்கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் அதிகாரிகளே இவ்வாறு வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த அதிகாரிகள் நாளையதினம் திட்டமிடப்பட்டவாறு சேவையில் ஈடுபட முடியும் எனதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்தார்
18/10/19
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கள மொழிக்கு கிடைத்த இடம்
யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப் பலகைகளில் முதலில் தமிழ் மொழியிலும் இரண்டாவதாக சிங்கள மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான ஓர் பின்னணியில் இன்றைய தினம் குறித்த சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் யோசனைக்கு அமைய, பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
3/5/19
சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்மன்னார் நடுக்காட்டில் மீட்ப்பு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் தொடருந்துக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மீட்கப்பட்ட பொ
தியில் சக்தி வாய்ந்த வெடி மருந்துள் மீட்கப்பட்டுள்ளன
என்று பொலிஸார் தெரிவித்தனர்.காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டன.பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர்
குச்சுகள் என்பன மீட்கப்பட்டன.
1/5/19
பொலிஸாரிடம் யாழில் சிக்கிய இரண்டு கோடி ரூபா அபின்…!!
யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகளவான அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருளே 30,04,2019,
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு
இடமாக இருவர் நடமாடியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருவதைக் கண்ட அவர்கள், பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
அந்தப் பொதியைச் சோதனையிட்டபோதே அபின்
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் பொதியினை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புக்
குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வளவு பெறுமதியான அபின் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறை
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
11/4/19
இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இனி இடமில்லை
இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள், நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் (மஹிந்த அணி) இடையில் இழுபறி தொடர்கின்றன என்று செய்திகள் வருகின்றன.
இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன? என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் அவர்,
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில்
பேச்சு நடைபெற்றது.
எனினும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதற்காக இழுபறி தொடர்கின்றது எனக் கூற முடியாது, சிலவேளை பேச்சுத்
தொடரக்கூடும்.
உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை நாம் எடுப்போம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை, எனவே இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு
முடிவு எடுக்கக்கூடாது.
இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள்.
நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம், மூவின மக்களும் நிம்மதியாக,நல்லிணக்கத்துடன் வாழும் ஆட்சியே தொடர வேண்டும் இதுவே எமது விருப்பம்.
நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன்.
எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன்.
எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் என கூறியுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)