siruppiddy

21/10/22

அப்பாவி மக்களை கொழும்புப் பகுதியில் சுட்டுக் கொன்ற பொலிஸார்

முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் காரணமல்லாமல் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இருவரும் 
எனினும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனவும் பொலிஸ் விசாரணைக் குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கிலேயே, அதிரடிப் படையினரால் இவ்வாறு தவறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பாதாள உலக ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுக்கள் 
சுட்டிக்காட்டியுள்ளன.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







14/3/21

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பிரிட்டனில் மீளாய்வு

 பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2000 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இந்த அமைப்பை 2001 இல் பிரிட்டன் தடை செய்தது. எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இந்த அமைப்பு தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
 தெரிவித்துள்ளது.
எனினும் பிரிட்டனில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 
தெரிவித்துள்ளது.
தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் என
 தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

10/2/21

களுத்துறையில் சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல பொருட்களடங்கிய பொதி

களுத்துறை சிறைச்சாலை மதிற்சுவருக்கு மேலாக சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல்வேறு பொருட்களடங்கிய பொதியொன்று சிறைச்சாலை அதிகாாிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து கையடக்க தொலைபேசியொன்று, சிம்காட் ஒன்று,கஞ்சா என்று சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்று, லைட்டர்கள் இரண்டு,ஊசிகள் 12 மற்றும் பசை போத்தலொன்று ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்
 தொிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

12/11/20

யாழில் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ்.முகுந்தன் என்பவர் மீது 11-11-20.அன்று குழுவொன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்கத் தொலைபேசியும் பறித்து சென்றது.
கொரோனா தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது அமைப்பு ஒன்று உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊடகவியலாளர் தனது முகநூலில் நேற்று முன்தினம் இரவு பதிவொன்றினை 
இட்டிருந்தார்.
பதிவினை நீக்க கோரி குறித்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தம் கொடுத்து, மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு 
ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு 
செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல், கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை 
கைது செய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



11/11/20

ஊடகவியலாளர் மீது யாழில் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து தான் தாக்கப்பட்டதாக 
சுந்தரலிங்கம் முகுந்தன் எனும் குறித்த உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்
10-11-20.அன்று  நள்ளிரவு தொலைபேசியில் எச்சரித்தது மட்டுமின்றி  வீட்டிற்கு வந்த தமிழ் கொடி பணிப்பாளர் விமல் உள்ளிட்ட மூவர் அந்த இணைப்பை  அழிக்கச்சொல்லி தாக்கியதோடு மட்டுமில்லாமல் எனது தொலைபேசியையும் பறித்து சென்றுவிட்டார்கள் என அவர் 
தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான அவர் முன்னதாக வடக்கு ஆளுநரது ஊடக செயலாளராகவும்  பணியாற்றி வந்திருந்தார்.
இதனிடையே குறித்த இணைய தொலைக்காட்சியில் அவரது பாரியாரும் பணியாற்றி வருகின்றார்.
ஏற்கனவே சட்டவிரோத காணி பிடிப்பு தொடர்பில் குறித்த இணைய தொலைக்காட்சி குழுமம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் குற்றச்சாட்டு;ககளை முன்வைத்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


21/7/20

நளினி வேலூர் சிறையில் தற்கொலை முயற்சியில் தடுத்து நிறுத்திய காவலர்கள்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த
 கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு 
முயன்றுள்ளார்.குற்றம் சுமத்தப்ப்பட்டுள்ள ஏழு பேரில் நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 
தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நளினிக்கும் சக கைதிகளுக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் நளினி மீது ஒழுங்கு
 நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் இதனால் நளினி துணியைக் கொண்டு தூக்கிலிட்டு 
தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது சிறைக் காவலர்கள் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.முன்னதாக நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரியிருந்தார். எனினும் சிறை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை
 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


8/7/20

இந்துமகாசபா வேதனை இராவணன் சிவபக்தன் தேரரின் கருத்து கண்டிக்கத்தக்கது

கோணேஸ்வரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை 
இராவணன் ஆண்ட தேசமாகும். சீதாவலியவில் கோயில் உள்ளது. அனுமன் இலங்கை வந்து சென்ற ஆதாரங்கள் உள்ளன. மேலும் இராவண எல்லவில் குகைகள் உள்ளன. ஆகையால் தேரர் குறிப்பிட்ட கருத்தானது 
இந்து மக்களின் மனதை மேலும் புண்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது “
என்று இலங்கை இந்துமாசபா தலைவர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா சபா சார்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “
இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>


7/7/20

வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல கொரோனா அச்சத்தல் அனுமதி மறுப்பு

வெலிக்கட சிறைச்சாலையில் மீள் அறிவித்தல் வரும் வரையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கட சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


9/4/20

தாய் நாட்டில் நீக்காத சோகத்தின் ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது

வாழ்க்கை மட்டுமல்ல,“ பட்டால்தான் வலி புரியும் “
இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது.
இலங்னக (சிறீலங்கா )என அழைக்கப்படும் தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை 
உலகறியா ஏராளம் ஏராளம்.
இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம்.
ஆம்...!
எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம்.
நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை குறுகிய நிலப்பரப்புக்குள் தனிமைப் படுத்தினார்கள். ஆனாலும் மீண்டெழுந்தோம்.
இறுதியாக உலக நாடுகள் கைகோர்த்து ஓர் உத்தியை கையாண்டீர்கள்..!
ஓய்வின்றி ஓர் தொடர் போர்..!!
இறந்தவரை புதைக்க இடமுமில்லை நேரமும் இல்லை. காயம்பட்டவரை சிகிச்சை கொடுக்க மருந்துமில்லை மருத்துவமனையில் இடமும் இல்லை, மருத்துவர்களும் பற்றாக்குறை.
உண்ண உணவுத் தட்டுப்பாடு, கிடைப்பதையேனும் தேடிவர வெளியே போய் வர முடியாது குண்டு மழை.
போராடும் போராளிகளிடம் ஆயுத தளபாட வெடிபொருட்கள் எனக்
 கையிருப்பு கையறு நிலை.
பதுங்கு குழிக்குள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் முடங்கிய மக்களின் மன அழுத்தம், போராட்டத்தின் மீதே நம்பிக்கையீனம்.
எல்லாமே திட்டமிட்டே செய்து முடித்தீர்கள். நினைத்தவாறே எல்லாமும் நிறைவேறிற்று. இயற்கையின் மீது பாரத்தைப் போட்டு
 நாம் நடை பிணமானோம்.
ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது..!
உலகின் வல்லரசுகள் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டவர்களின் இன்றைய நாட்கள் இதே பாடத்தை தான் அவர்களுக்கு 
கற்றுக் கொடுக்கிறது.
நாட்டுக்கு நாடு எல்லையை மூடுகிறார்கள். உணவுக்கு / மருந்துக்கு / மருத்துவருக்கு அல்லாடுகிறார்கள்.
நாம் பதுங்கு குழிக்குள் முடங்கியது போன்று இன்று இவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி தனிமையில் மன அழுத்தம் கொள்கிறார்கள்.
இன்று களப் பணியாற்றுவோருக்கு நாளாந்தம் கைதட்டி நன்றி தெரிவிக்கிறார்கள். அதை ஊடகங்கள் 
கொண்டாடுகின்றன.
அன்று ஒரு சிறு நிலப்பரப்பில், எந்த நிமிடமும் நம் உடலும் சிதறலாம் எனத் தெரிந்தும், நமது மக்களை காப்பாறும் மருத்துவப் பணியில் இருந்த / இறந்த எமது மருத்துவர்கள், களப் பணியாளர்களே எம் கண்முன்
 வந்து போகிறார்கள்.
அன்று நாம் உங்கள் முற்றமெங்கும் / வீதிகளெங்கும் ஒப்பாரி வைத்தோம், எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும்..,
நாம் ஈழத்தவர்கள்; மனித நேயத்துடன் எங்கள் கண்களும் உங்களுக்காக கண்ணிரைக் கசிந்து கொண்டுதான் 
இருக்கின்றன.
நன்றி,,யஸ்  கே, சாமி

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






9/12/19

இரு கண்களையும்.ஓர் கையும்போ ரில் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை

போ ரில் இரு கண்களையும். ஓர் கையும் இழந்து இறுதி யு த்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் B.A பட்டம் பெறும் முன்னாள் போ ராளிகளான அகமொழி மற்றும். சந்திரமதி ஆகிய இருவரையும் வாழ்த்துவோம்.சா திக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் இருவரும் எம் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.





16/11/19

தேர்தல் கடமையில் ஈடுபட்ட 51 அதிகாரிகளுக்கு திடீர் ஒவ்வாமை

உணவு விசமடைந்ததன் காரணமாக தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் 
ஒருவர் குறிப்பிட்டார்.
கொழும்பு ரோயல்கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் அதிகாரிகளே இவ்வாறு வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த அதிகாரிகள் நாளையதினம் திட்டமிடப்பட்டவாறு சேவையில் ஈடுபட முடியும் எனதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்தார்

18/10/19

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கள மொழிக்கு கிடைத்த இடம்

யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப் பலகைகளில் முதலில் தமிழ் மொழியிலும் இரண்டாவதாக சிங்கள மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான ஓர் பின்னணியில் இன்றைய தினம் குறித்த சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் யோசனைக்கு அமைய, பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


3/5/19

சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்மன்னார் நடுக்காட்டில் மீட்ப்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் தொடருந்துக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மீட்கப்பட்ட பொ
தியில் சக்தி வாய்ந்த வெடி மருந்துள் மீட்கப்பட்டுள்ளன 
என்று பொலிஸார் தெரிவித்தனர்.காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டன.பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர்
 குச்சுகள் என்பன மீட்கப்பட்டன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


1/5/19

பொலிஸாரிடம் யாழில் சிக்கிய இரண்டு கோடி ரூபா அபின்…!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகளவான அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருளே 30,04,2019,
 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு
 இடமாக இருவர் நடமாடியுள்ளனர்.
 இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருவதைக் கண்ட அவர்கள், பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
அந்தப் பொதியைச் சோதனையிட்டபோதே அபின் 
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் பொதியினை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புக்
 குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வளவு பெறுமதியான அபின் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறை 
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


11/4/19

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இனி இடமில்லை

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள், நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் (மஹிந்த அணி) இடையில் இழுபறி தொடர்கின்றன என்று செய்திகள் வருகின்றன.
இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன? என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் அவர்,
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில்
 பேச்சு நடைபெற்றது.
எனினும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதற்காக இழுபறி தொடர்கின்றது எனக் கூற முடியாது, சிலவேளை பேச்சுத் 
தொடரக்கூடும்.
உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை நாம் எடுப்போம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை, எனவே இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு 
முடிவு எடுக்கக்கூடாது.
இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள்.
நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம், மூவின மக்களும் நிம்மதியாக,நல்லிணக்கத்துடன் வாழும் ஆட்சியே தொடர வேண்டும் இதுவே எமது விருப்பம்.
நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன்.
எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன்.
எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் என கூறியுள்ளார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


11/10/18

மஹாவலித்தென்னயில் மண்ணுக்குள் மறைந்திருந்த பயங்கரக் குண்டு

வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டார் உந்து செலுத்திக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழாய் நீர் விநியோகத்திற்காக
 நிலத்தடியில் குழாய்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் குண்டொன்று வெளிக்கிளம்பியதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனையடுத்து குழாய் பொருத்துநர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பிரகாரம் ஸ்தலத்திற்கு விரைந்த வெலிக்கந்தை பொலிஸார் நீர் விநியோகக் குழாய் பொருத்துவதற்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் குண்டு இருப்பதையறிந்து குண்டு செயலிழக்கச் செய்யும் படை நிபுணர்களை வரவழைத்து அவர்கள் மூலமாக குண்டை
 மீட்டுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கிராமங்களைப் பாதுகாப்பதற்காக இப்பகுதியில் படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.அதேவேளை அவ்வப்போது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடையில் மோதல்களும் இடம்பெற்று வந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பயன்படுத்தப்படுவதற்காக மறைத்து வைக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக 
குறிப்பிட்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


29/9/18

யாழ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் இன்று(சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கு
 மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் அனைவரையும்
 விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.  இந்தநிலையிலேயே, இன்று கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



28/9/18

உயிரிழந்ததமிழ் பெண் விரிவுரையாளருக்கு நீதி கேட்டு தமிழர் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

மர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி கோரி தமிழர் தாயகமான திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
.குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபவனியாக வீதிக்கு வந்து மக்களை தெளிவூட்டும் விதத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக
 நடத்தப்பட்டுள்ளது.
போதநாயகியின் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான ஒரு விழிப்புணர்வு போராட்டமாக இது அமையும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

27/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரர் புதைக்கப்பட்ட இடத்தில் கதறி அழும் கணவன்

மர்மமான முறையில் மரணடைந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் கணவர் கவிஞர் செந்தூரன் மனைவியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அழுது குளறியுள்ளார்.
செந்தூரன் மனைவியின் இறுதி சடங்கிற்கு கூட செல்லவில்லை என்பது போதநாயகியின் கொலைக்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது போதநாயகியின் கணவர் செந்தூரன் என்ற நபர், தான் ஸ்திரீ லோலனாக இருந்தாலும், மனைவி தனக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்ற சிந்தனை வன்முறைக்குள்ளாக்கியிருக்கிறார்.
கடந்த சில வருடங்களில் அவரது வாழ்வில் பல பெண்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்ற பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி வருகின்றன.பிரான்சை சேர்ந்த தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்மணியை திருமணம் செய்து, செந்தூரனின் திருவிளையாடல்கள்
 தெரிந்ததும் மூன்றாவது நாளிலேயே விவாகரத்து செய்து விட்டார்.
அதை அவர் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.இதன்பின்னர், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு யுவதிக்கு ஆட்டையை போட்டு, அவரது தாயாரிடமிருந்து பெருமளவு பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இந்தியாவில் ஒரு தொ
டர்பு இதன்பின் கிளிநொச்சி யுவதியொருவருடன் திருகோணமலையில் உல்லாசம் என பல பேஸ்புக் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதைப்பற்றி செந்தூரன் தரப்பிலிருந்து எந்த பதிலுமில்லை. மாறாக சில பெண்கள்- முகப்புத்தகத்தில் நேரில், கொஞ்சம் பட்டும் படாமலும் செந்தூரன் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்த 
ஆரம்பித்துள்ளனர்.இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது. அது கமல் பாடும் பாடலை நினைவுபடுத்துகிறது. செந்தூரன் தரப்பு இதைப்பற்றி பகிரங்கமாக சொன்னால் மாத்திரமே உண்மை தெரியவரும்.
உயிரிழந்த போதநாயகி நல்ல சம்பளத்தை 
பெறும் விரிவுரையாளராக கடமையாற்றினார். அவரது ஏடிஎம் கார்ட் கூட செந்தூரனிடமே இருந்துள்ளது. போதநாயகியின் இறுதி மாத சம்பளம் ஒரு இலட்சம் ரூபா! உயிரிழப்பதற்கு சில நாள் முன்னதாக வங்கி 
கணக்கிற்கு சென்றது.
இறுதி சடங்கிற்கு பணமில்லையென போதநாயகியின் குடும்பத்தினர் கூற, ஏடிஎம் கார்ட் பின் நம்பர் தெரியாதென அலட்சியமாக செந்தூரன் பதிலளித்துள்ளார். அதை போதநாயகியின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனை முடிந்ததும், கணவனாக அவரே சடலத்தை பொறுப்பேற்க முடியும் சடலத்தை பொறுப்பேற்று தனது வீட்டுக்கு கொண்டு சென்று, சடலத்தின் மீது கவிதைப்புத்தகங்கள் என்ற பெயரில், தான் வெளியிட்ட புத்தகங்களையும், விருதுகளையும் பரப்பி படம் எடுத்து படம் காண்பித்தார்.
பின்னர் சடலம் வவுனியாவில் போதநாயகி வீட்டிற்கு கொண்டு செல்ல தயாரான போது செந்தூரன், தாயார் ஆகியோர் வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டனர். வவுனியாவில் மனைவி வீட்டிற்கு செல்லவுமில்லை, இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவுமில்லை.
கட்டிய மனைவி தனியாக சவக்குழிக்கு செல்கிறாள் என்றபோதே, இந்த கணவனின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள
 முடியும் என்ற கருத்தும் பரவலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.தம்பதியர்களிற்கிடையில் உறவு சுமுகமாக இல்லை, செந்தூரனின் நடவடிக்கைகளால் மனைவி அதிருப்தியடைந்திருந்தார் என்பதற்கு ஆதாரமாக அவரது முகநூல் பதிவுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
போதநாயகி வங்கியில் 20 இலட்சம் ரூபா கடன்பெற்று செந்தூரனிற்கு கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். அது தவிர, அண்மையில் ஐந்து இலட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போத நாயகியின் தந்தை தும்புமிட்டாசு விற்றே மகளை கல்வி கற்க வைத்திருந்தார். மிக ஏழ்மை குடும்பமான 
அவர்களிடம் இறுதிச்சடங்கிற்கே பணமிருக்கவில்லை. இறுதியில் வவுனியாவை சேர்ந்த தன்னார்வலர்கள் பணம் திரட்டியே அவரது இறுதிச்சடங்கை நடத்தி முடித்திருந்தனர்.
இதேவேளை நேற்று செந்தூரனின் நண்பன் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செந்தூரன், மனைவியின்
 உடல்புதைக்கப்பட்ட இடம் என கருதப்படும் 
இடத்தில், அழுது கொண்டிருப்பதை போல காண்பிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
உண்மையான கணவன் எனில், இறுதிச்சடங்கிற்கு சென்றிருக்க வேண்டும். இது அனுதாபம் தேடும் முயற்சியென நெட்டிசன்கள் 
கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் செந்தூரனின் நண்பர்கள் 
‘அண்ணன் அப்செட்டில் இருக்கிறார். ஏற்கனவே உடைந்து போயிருப்பவரை இந்த விமர்சனங்கள் மேலும் காயமடைய வைக்கிறது. சிறிய அவகாசம் அவருக்கு தேவை. விரைவில் பகிரங்கமாக அனைத்தையும் சொல்வார்’ என்கிறார்கள்.
‘அண்ணன் ஏற்கனவே திருமணமானவரா? அது போதநாயகிக்கு தெரியுமா? அவர்களின் குடும்பத்தில் ஏதாவது சிக்கலிருந்ததா?’ என்று கேட்டால் ‘அதை அண்ணனிடமே கேளுங்கள்’ என்கிறார்கள்.
எது எப்படியோ இந்த விவகாரத்தில் செந்தூரன் தரப்பும் ஏதாவது அபிப்பிராயத்தையும், நியாயத்தையும் வைத்திருக்ககூடும். அவர்கள் இதுவரை பகிரங்கமாக அதை பதிவுசெய்யவில்லை. பொலிசார் நியாயமான விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டறிந்தால் மட்டுமே முழு உண்மையும் 
பகிரங்கமாகும்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>


26/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் இத்தனை கொடூரமா

கிழக்குப் பல்கலைகழகத்தின் திருகோணமலை பெண் விரிவுரையாளரும் செந்தூரனின் மனைவியுமான போதநாயகியின் மரணம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இவரது மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் தொடர்கிறது.என்னவென்றால்
 செந்தூரனின் மனைவி போதநாயகி கொலை செய்யப்பட்ட நாள் வவுனியாவில் இருந்து திருமலைக்கு விடுமுறையில் சென்று இருக்கிறார் அவர் முச்சக்கர வண்டியில் சென்றிருக்கிறார்.அந்த முச்சக்கர வண்டி சாரதி யார்? என்று இன்னும் தெரியவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை 
எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.ஆனால், அந்த நபர் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை.
மேலும் இதுபோல பல தகவல்கள் உறுதி செய்யபடவில்லை.மேலும் இந்த மரணத்திற்கு அவரது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தான் காரணமென்றும் அதை மறைக்கவே பல கதைகளை அவர் கிளப்பிவிடுகிறார் என்றும் தகவலகள் பரவி வருகிறது.
இவ்வாறு கதைகளை பரப்பினால் தாம் தப்பித்துவிடலாம் என அவர் செய்வதாக பலர் கருத்து தெரிவித்து
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>