siruppiddy

17/1/16

இன்னமும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குரிய விடை கிடைக்கவில்லை?

முப்பது ஆண்டு அகிம்சைப் போராட்டமும், முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டமுமாக மொத்தமாக 60ஆண்டுகள் துன்பங்களுடன் காத்திருந்தும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு உரிய விடை இன்னமும் கிடைக்கவில்லை. உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியல் யாப்பும் சரியான தீர்வை வழங்கும் என்பதற்கான சாதகமான நிலையும் தென்படவில்லை என விமர்சகர்கள்
 தெரிவிக்கின்றனர்.
60ஆண்டு காலம் மனம் தளராமல் இருக்கும் மக்களை இன்னும் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வைக்காமல் அவர்களின் அரசியல் உரிமைகளை கையளிக்கும் ஏற்பாடுகளுக்கு உலக அரசியல் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2009ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிந்துவிட்டது என மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மார்புதட்டியது போன்று நல்லாட்சி அரசாங்கமும் புகழ்பாடுகின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு நடைமுறை விடயங்கள் சான்றாகும். குறிப்பாக காணி அபகரிப்பு, பௌத்த சமயப்பரப்புரைகள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்தை குறைத்தல், இரணுவ கிராமங்களை உருவாக்குதல், தமிழர் பிரதேச எல்லைகளை சிங்கள பிரதேசங்களுடன் இணைத்து தமிழர்களை நிலத்தொடர்பில்லாமல் பிரித்தல், நில உரிமைகளை பறித்தல் என்று வடக்கு கிழக்கில் மறைமுக யுத்தம் தொடருகின்றது.
இலங்கையின் அரசியலமைப்பு தமிழர்களுக்கு சமநீதி வழங்கவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1883இல் முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோல்புறூக் அரசியல்யாப்பு
 முதல் இலங்கை
 1948இல் சுதந்திரமடைந்து 1972இல் இறைமை அடைந்து உருவாக்கப்பட்ட யாப்புகள் வரை தமிழர்களுக்கு சமநீதி இல்லை என்பதும் வரலாறு. 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு 19திருத்தங்களுடன் தற்போதும் நடைமுறையில்
 இருக்கின்றது. 
இந்த யாப்பில் 1987இல் செய்யப்பட்ட 13ஆவது திருத்தம் தான் அதிகாரப்பரவாலக்கல் முறையாகும்  இதுதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாகவும் கூறப்பட்டது. 
ஆனால் மக்களிடம் நம்பிக்கை இருக்கின்றது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான சர்வதேச ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இலங்கை ஒரு சிறிய நாடு அந்த நாடு தான் விரும்பிய நாடுகளுடன் உறவுகளை வைத்து தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்ற நல்ல நோக்கில் உலக நாடுகள் விட்டுக்கொடுப்பதை அல்லது பொறுத்துக்கொண்டிருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழர்களின் அரசியல் 
இருப்புக்கு உலை 
வைக்கின்ற வேலைத் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதை நிறுத்த, குறைந்த பட்சமேனும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இனப்பிரச்சினை விவகாரத்தில் முற்று முழுதாக அரசாங்கத்தை சர்வதேசம் நம்புகின்ற போக்கை 
காணமுடிகின்றது
பிராந்திய அரசியல் நலன் மற்றும் லாபங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தொடர்ந்து செயற்படுமானால் தமிழர்கள் பிரச்சினைக்கு உலகம் அழியும் வரை தீர்வுகிட்டாது. 
இந்தியா
 அயல்நாடு இந்திய தமிழர் பிரச்சினையை பார்த்துக்கொள்ளும் என்று கருதியும் உலக நாடுகள் செயற்படுமானால் அது இன்னும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் அல்லது தள்ளப்பட்டு விட்டது என்றும் கூறலாம். ஆகவே இந்த நிலைமைகளை அறிந்துகொண்டு நேர்மையான முறையில் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்து முன்வைக்க வேண்டும். 
அதற்கு ஏற்றவாறு மக்கள் சந்திப்புக்களை நடத்த வேண்டும். தொழிற் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசணை பெறுகின்றனர். அதையும் தாண்டி அரசாங்கமும் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்புகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. தமிழ் மக்கள் பேரவை கூட மக்களை சந்தித்து உரையாடவில்லை. 
மக்கள் 
மயப்படுத்தப்பட்ட அரசியல் வடக்கு கிழக்கில் இல்லை. ஆனாலும் தமிழ்த்தேசிய கொள்கையும் நம்பிக்கையும் மக்களிடம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள்தான் கொள்கைகளை விலைபேசி இலாபம் ஈட்டுகின்றனர் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/12/15

ஐீ.ரி.வி நேரலை: மாவீரர்நாள் 27.11.2015 அறிவிப்பாளரான முல்லைமோகன்

யேர்மன் டோட்மூண்ட் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வை ஐீ.ரி.வி நேரலை செய்திருந்தது, அதன்போது அதைதொகுத்து வழங்கியவர் யேர்மனியில் சிறந்து விளங்கும் அறிப்பாளரான மணிக்குரல்தந்த முல்லைமோகன் அவர்கள் அந்த நேரலையின் ஒருங்கிணைப்பு ஐீ.ரி.வியின் யேர்மன் கலையகப்பொறுப்பாளர் சிவலிங்கம் 
அவர்கள்,
இதற்கான சற்லைற் இணைப்பு படப்பிடிப்புகளை டோட்முண்ட M.S விடியோ
செ ய்திருந்தது ஒளிப்பதிவாளர்களாக சக்தி அவரின் இருமகன்கள் ஓபகவுசன் ரூபன், கபில் என இணைந்து சிறப்பானது தொழில் நுட்பம் M.S விடியோ
படக்கலவை எஸ்.தேவராசா என மாவீரர் பணிக்காய் அனைத்துக்கலைஞர்களும் கைகோர்த்து நின்றது
 சிறப்பைத்தந்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


10/12/15

இ,கவிமகளின் மழைக்குள் இருந்து ஓர் குரல் -2

"நான் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஏற்பட்ட அதி பயங்கர மன அதிர்ச்சியை இந்த நாலு நாட்களும் அனுபவித்தேன் கவி  இதை குறிப்பிட்டவர், தமிழீழத்தின் மீது அதீத பற்றுக் கொண்ட ஓவியர் புகழேந்தி. அவருடனான 
தொடர்புக்காக
 பல தடவைகள் செய்த முயற்சிக்கு பின்னான தருணம் ஒன்றில் அவரது தொடர்பு கிடைத்த மகிழ்வில் "சேர் எப்பிடி இருக்கிறீர்கள்...? கேட்ட கேள்வியின் பதிலாக கிடைத்தது இந்த பதில்.
அவர் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். உண்மையில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நானும் சில நாட்களாக எங்கள் நட்புக்களின் கிடைக்காத தொடர்புகளிலும் , அறிய முடியாது தவித்த அவர்களுடைய துயர்நிறைந்த வாழ்க்கையிலும் நாம் முள்ளிவாய்ககால் மண்ணில் முடக்கப்பட்டிருந்த போது என் உறவுகள் எம் நிலையை அறிய துடித்த வினாடிகளை உணர முடிந்தது.
மினசாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் இல்லை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிமிடங்கள் முழுவதும் பலத்த துன்பத்தை சுமந்து கொண்டிருந்தனர் எங்கள் உறவுகள். "கவி நான் இந்த நாட்களில் என்னைப்பற்றியோ எனது குடும்பத்தை பற்றியோ
 நினைத்து 
கவலை கொள்ளவில்லை. காரணம் நாங்கள் இதுவரை பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம். நான்கு சுவரைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் இருக்கும் உணவை பிரித்து உண்டால் கூட குறைந்தது ஒரு வார காலத்திற்கு என் குடும்பம் உணவுப் பிரச்சனையில் இல்லாது வாழ முடியும். ஆனால் வீட்டை இழந்து ஒரு பருக்கை சோறு கூட கிடைக்காத 
நிலையில் 
போட்டிருந்த ஒரு ஈர உடையோடு விடிய விடிய தண்ணீரில் உதவிகளுக்காக காத்திருந்த குழந்தைகள் நிலையைதான் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
உண்மையில் இந்த வார்த்தைகளை அவர் கூறிய போது அவரது விழிகள் நிட்சயமாக கண்ணீரால் நனைந்திருக்க வேண்டும் ஏனெனில்
 அவரது உணர்வுகளை
 நான் பேச்சின் மூலமே உணர்ந்து கொண்டேன். நான் உரையாடிய அந்த நிமிடங்கள் ஒவ்வொன்றிலும் சென்னையின் துயரத்தை குறிப்பதிலே அவர் கருத்தெடுத்தார். கவி சென்னைக்குள் இருந்து கொண்டே என்ன நடக்குறது எமக்கு என்பதை அறிய முடியாத அந்த கணங்கள் ஒவ்வொன்றும் கொடியது. இந்த துயர சம்பவத்துக்கு என்னால் யார் மீதும் குற்றம் 
சுமத்த முடியாது
 உள்ளது. மழை வெள்ளம் கரை புரண்ட போது ஏரிகளை திறந்து விட்டது தவறாக பலர் நினைக்கலாம் ஆனால் அது திறக்கப்பட வில்லை என்றால் ஏரிகள் அனைத்தும் உடைப்பெடுத்திருக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்குமாயின் சென்னை முழுவதும் பாரிய அழிவுக்குள்ளாகி இருக்கும். சிலவேளை முற்றுமுழுதாக 
அழிந்திருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திறந்து விட்ட செயற்பாடானது நிட்சயமாக ஏற்றுக்கொள்ள
 வேண்டியதாகிறது.
அவர் தொடர்ந்து பேசினார். அப்போது நான் குறுக்கிட்டு சேர் மன்னிக்கனும், எங்கள் உணர்வுகளை ஓவியங்களாக்கி உலகத்துக்கே எங்கள் உணர்வுகளை கூறிய அத்தனை ஓவியங்களும் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது..? ஆம் கவி என் வீடு அமைந்துள்ள இடம் மேட்டுப்பகுதி அதனால் என்னால் அவை பாதுகாக்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னும் ஓரிரண்டு 
சென்டி மீட்டர் தண்ணி எம் பகுதிக்குள் புகுந்திருக்குமாயின் அத்தனை ஓவியங்களும் இயற்கையால் அழிக்கப்பட்டிருக்கும். இப்போது வேறு முயற்சி பற்றி சிந்திக்கிறேன் அவற்றை பாதுகாக்க வேண்டும். ஆமா சேர் நீங்கள் கூறுவதே நானும் எதிர் பார்த்தேன். நியமாக அவற்றை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்த இடத்திலே நான் ஒரு விடையத்தை குறிக்க விரும்புகிறேன். இன்றைய சூழலில் பல்லாயிரம் உறவுகளின் சொத்திழப்பு மற்றும் வாழ்வாதாரவிழப்புக்களுக்கும் பலநூறு மக்களின் உயிரிழப்புக்களுக்கும் மத்தியில் இந்த ஓவியங்கள் தொடர்பான பாதுகாப்பு என்பது அவசியமா என்று உங்களுக்கு வினா எழலாம் ஆனால் இதைக் கட்டாயமாக நான் வினவ வேண்டிய நிலை உண்டு. ஈழ போராட்ட வரலாற்றில் 
எமது வலிகளை 
நாம் நமக்கே புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை ஆனால் பல ஊடக முறமைகள் இதைத்தான் செய்கின்றன. ஆனால் ஓவியங்கள் என்ற இந்த ஊடகத்தின் மூலம் நாம் பெற்ற அடவுகள் ஒப்பீட்டளவில் அதிகமானவை வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஊடகமாகவே நான் ஓவியங்களைப் பார்க்கிறேன். அதனால் அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எம் வலிகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கடப்பு எமக்கு இருக்கிறது.
" சேர் அடுத்து வரும் நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? கவனமாக இருங்கள். நான் இப்போது பணி காரணமாக விடைபெறுகிறேன். தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம். நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.
இ,கவிமகன்.
08.12.2015
நீண்ட உரையாடல்களில் இருந்து முக்கியமானவற்றை எடுத்து பதிவாக்கியுள்ளேன்...... 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


மழைக்குள் இருந்து ஒரு குரல்-01

நாங்கள் இப்ப நல்லா இருக்கிறம். இப்ப கொஞ்சம் தண்ணி வடிஞ்சிட்டுது. இன்றுதான் கரண்ட் வந்திச்சு. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் மண்ணை கடந்து வந்திருக்கிறம். பாவப்பட்ட எங்கள் மீது தான் மீண்டும் மீண்டும் துன்பத்தை இந்த கடவுள் விதைக்கிறன். ஏற்கனவே ஏற்பட்டிருந்த வலி இன்னும் ஆறவில்லை அதற்குள் மீண்டும் தொடரும் அவலங்களால் எங்கள் வாழ்க்கை துயரம் நிறைஞ்சு போய் கிடக்குது. நியத்தில் கடவுள் உண்டா? இந்த கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது?
சரி நாங்கள் ஏதோ பாவத்தை செய்து பிறந்தோம் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? பச்சிளம் பருவத்திலே தந்தையை பறி கொடுத்தார்கள் கண்முன்னே பல உயிர்கள் மடிந்ததை கண்டு ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீள முன் இவ்வாறு துன்பத்தை இந்த கடவுள் ஏன் அவர்களுக்கு கொடுத்தான்...?
தம்பி கிட்டத்தட்ட ஒரு வாரங்கள் யாருமே அற்ற தனிமையில் வெளித் தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் என் இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உதவிக்காக காத்திருந்தேன். ஆனால் உதவி எனக்கு கிட்டவில்லை. நான் நினைக்கிறேன் நெஞ்சளவிற்கு அதிகமான தண்ணீர் 
பாச்சலிற்கு நடுவில் 
நடுக்கடலில் கைவிடப்பட்டவர்களாக நாங்கள் கிடந்தோம். இருந்த உணவுப்பொருட்களை பகிர்ந்து குழந்தைகளின் பசியாற்றிக் கொண்டு மழைநீரை கொதிக்க வைத்து பருகிக்கொண்டும் எங்களின் இறுதி மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டிருந்தோம்.
பிள்ளைகள் பயத்தில் உறைந்து போய் கிடந்தனர். வெளியில் என்ன நடக்குறது என்றது புரியவில்லை. இருட்டும் குளிரும் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த வெள்ளமும் அவர்களை நிலைகுலைய வைத்திருந்தது. எப்போதும் என்னை இறுக பற்றிக் கொண்டே இருந்தார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் வெடிகுண்டு மழைக்குள் எவ்வாறு தவித்தோமோ அதே போலவே நாங்கள் தவித்துப் போய் கிடந்தோம். இருட்டும், துயரமும், உயிர்பிழைத்தலுல் எமக்கு புதியவை அல்ல பல தடவைகள் எங்கள் மரணத்தை 
கண்முன்னே
 பார்த்தாலும், அருகில் உதவிக்கு உறவுகள் இருந்தது எமக்கு கொஞ்சம் பலத்தை தந்தது ஆனால் இங்கு தனிமையே எழுந்து எம்மை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் நாங்கள் மீண்டும் ஒருமுறை மீண்டு வந்துள்ளோம்.
இது நீண்ட முயற்சியின் பின் இன்று கிடைத்த ஒரு தொலைபேசித் தொடர்பில், இறுதி சண்டையில் தேசத்துக்கான விடுதலைப்போரில் தனது துணையை வித்தாக்கி தமிழகத்தில் உயிர்வாழ்தலுக்காக தஞ்சமடைந்த ஒரு சகோதரியின் குரல்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

2/12/15

இரகசிய முகாம்களில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்படவில்லை!

யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பா ட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெலிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை
குறிப்பிட்டார்.
யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு உள்ளநாட்டிலேயே நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ள தாக முன்னாள் ஜனாதிபதி 
சுட்டிக்காட்டினார்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளின் அபிவிருத்திக்கு தேவையான நிதி, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர்
 குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து பண்டிகைகளை நடத்துவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
 இந்த நிலையில்
 இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப் பிட்டார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் யாரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவி யலாளர்களினால் அரசியல் கைதிகளின் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதியிடம் சில கேள்விகள் வினவப்பட்டன.
இதன்படி தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கட்டங்களாக விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த நிலையில் குற்றங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களை
 உடனடியாக விடுதலை 
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றங்கள் இழைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சிறு குற்றங்களை இழைத்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
 குறிப்பிட்டார்.
எனினும் தமிbழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் காணப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும என அவர் கேட்டுக்கொண்டார்.நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக 
தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அதனை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் எனவும் 
கூறியுள்ளார். இந்த நிலையில் இராணுவ ரீதியில் யுத்தத்தினை வெற்றிக்கொண்டுள்ள போதிலும் இயல்பான சமாதானத்தை இன்றும் வெற்றிகொள்ள முடியவில்லை என அவர் 
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்ற ரீதியிலேயே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

30/11/15

உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், உயிருடன்???

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்……
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.
போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச்
 சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.
அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை 
கொண்டிருந்தார்கள். 
ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, 
தமிழர்களின் 
நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!
பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,
”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை 
பத்திரமாகக் 
கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் 
கடிதம் எழுதியதை 
வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.
பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.
புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.
எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. க
ருணா, சிங்கள 
அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த 
ஒருவரின் சடலத்தை 
ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, ‘ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.
புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் 
கண்டிருக்கிறது. 
இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் 
கேட்டு இந்திய அரசு, 
சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை 
ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் 
காடுகளுக்குள் ராணுவம்
 திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.
மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.
பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28/11/15

மிகவும் அமைதியாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு;பொலிஸ்சர்தெரிவிப்பு ?

வடக்கு- கிழக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டதாகவும், சட்டத்தை மீறியமைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் அதில் தலையிடவில்லை என்றும் அவர் 
விளக்கமளித்துள்ளார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை முன்னிலைப்படுத்தி எவ்வித
 ஆர்ப்பாட்டங்களோ, 
ஊர்வலங்களோ, நிகழ்ச்சிகளோ பிரசித்தமான முறையில் முன்னெடுக்கப்படாமையினால் பதற்றமான சூழ்நிலை காணப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>