siruppiddy

28/6/14

பொய்க் குற்றச்சாட்டுகளை தயார் செய்கிறது அரசாங்கம் !!

 விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தயார் செய்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். சில முஸ்லிம்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனித புதைக்குழியை தோண்ட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பில் முறைப்பாடுகள்...

24/6/14

மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நிகழ்வு

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது முன்பதாக பாடசாலையின் பிரதான வாயிலிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடியும், பாடசாலைக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டன. அடுத்து மகிந்தோதய தொழில்நுட்பப் பீடத்துக்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்ததுடன்...

22/6/14

முகாம்களை விஸ்தரிப்பதற்கு வட மாகாணசபை தடைகளை ஏற்படுத்தி வருகின்றது!-

 வடக்கில் இராணுவ முகாம்களை விஸ்தரிப்பதற்கு வட மாகாணசபை தடை ஏற்படுத்தி வருவதாக காணி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடக்கின் இராணுவ முகாம்களை விஸ்தரிக்க காணிகளை வழங்குவதற்கு காணி அமைச்சு இணங்கியுள்ளது. எனினும்,  இந்த நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. முகாம்களை அமைப்பதற்காக அரசாங்கம் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மக்களை ஆத்திரமூட்டி,...

20/6/14

அன்று இராணுவத்தை அதிர வைத்த பாரிய தாக்குதல்

விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. மண்டைதீவு படைத்தளம் போராளிகளின் இலக்காக பல முறை தேர்வாகியது. அவ்வண்ணம் எதிரியின் ஆதிக்கமும், மக்களை பெரும் துன்பவியல் வாழ்விற்குள் தள்ளும் சில ஆறாத ரணங்களை எம்மக்களுக்கு அந்தப் படைத்தளம் கொடுத்தது. எதிரிக்கு...

19/6/14

சீலன் வீரமரணமடைந்த மறுநாட்கள்....

எல்லோரும் வெஞ்சினத்துடன் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. மீசாலையில் சீலன் வீரமரணமடைந்த மறுநாட்கள் அவை.இயக்கத்தின் மிகப்பெரும் தூண் ஒன்று சாய்ந்ததன்  பின் வந்த மணித்தியாலங்கள் அவை. மிகவும் வெறுமையான பொழுதுகள்.சிங்களபடைகளின் மீதான கோபம் உச்சத்தில் தகித்துக் கொண்டிருந்த கணங்கள்.. அப்போது இருந்த முப்பதுக்கும் குறைவான போராளிகள் அனைவரும் பெரும் கோபத்துடன் இருந்த வேளை அது.உற்ற தோழனாக,எங்கள் எல்லோரின் மீதும் பாசமும் அன்பும் கொண்டிருந்த மிகப்பெரும்...

16/6/14

மோடிக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி இரகசிய அறிக்கை

இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இரகசியமான அறிக்கை ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் மற்றும் பொது வேட்பாளர்களாக போட்டியிடக் கூடியவர்கள் பற்றிய தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லி உள்ள உயர் மட்டத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நிச்சயமான...

6/6/14

படுகொலை என்பதா? ஜெயலலிதா மீது இலங்கை பாய்ச்சல்!

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜெயலலிதா கூறுவதற்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து,  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து இலங்கை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தகவல் தொடர்புதுறை அமைச்சர் கெகெலியா...