siruppiddy

27/2/14

பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நிபுணர்கள் குழு

இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை கண்டறிய பொருளாதார நிபுணர்களை கொண்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ விதாரண ஆகிய அமைச்சர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

பொருளாதார தடைகளை விதிக்க கூடிய அளவில் பாரதூரமான நிலை தற்போது ஏற்படவில்லை என்றாலும் நிலைமை மோசமாகி இறுதியில் அப்படியான நிலைமை உருவாகினால் அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றின் ஊடாக விடயங்களை ஆராய்வது முக்கியமானது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

25/2/14

இந்தியாவுடன் பேச வேண்டியுள்ளது – சுரேஸ் பிறேமச்சந்திரன்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் புதுடெல்லி செல்லும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திருட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தும்.
வரும் 3ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பரப்புரைக்கு மேலதிகமாக இது இடம்பெறும்.
தீர்மானம் தொடர்பாக, கூட்டமைப்பின் நாடாளுமன்றமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம்.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆரதரவு தரும் நாடுகளுடன் நாம் பேச வேண்டும்.
தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம், சிறிலங்காவிலும், ஜெனிவாவிலும் உள்ள ஆதரவு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பேசுவோம்.
ஜெனிவா செல்லும் குழு குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.  இந்தியாவுக்கும் ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.
நாம் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை உள்ளது. பெரும்பாலும் அங்கு செல்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜெனிவா தீர்மானம் மற்றும் இரணைமடு நீர் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த, நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூடமைப்பின் உயர்மட்டக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளது.

இரா.சம்பந்தன் தலையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

9/2/14

திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்

சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.
திருமலையில் ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், 5 மணிக்கு திருமலையில் உள்ள ஆந்திர மாநில கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையமான லேப்பாக்சிக்கு சென்று இந்திய கலாச்சார உடையான புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவர் கடைக்குள் இருக்கும் வரை வேறு வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிராந்தி இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். இவருடன் 33 பேர் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

6/2/14

குண்டுமீட்கப்பட்டது திருமலையில்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு  கடற்கரைக்குபின் புறமாக முப்பது கிலோநிறை கொண்ட குண்டு  ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.   இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு  முப்பது கிலோநிறை கொண்டது.  நான்கு அடி நீளம் கொண்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இலங்கையில் இவ்வாறன குண்டு இதுவரை காலமும் பாவிக்கப்படவில்லை என்று கடற்படையினரும், இராணுவத்தினரும் தெரிவிக்கின்றனர்.   அந்த குண்டை சலப்பையாறு கடற்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

31/1/14

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களுக்காக போராடினார்:

அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து வருவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை வட பகுதி மக்கள் விரும்பவில்லை.

அதேவேளை வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த சகலவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அவர் தமிழர்களுக்காக போராடிய ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் கூட நாட்டில் தமிழர்களின் போராட்டம் இடம்பெற்றுதான் வருகிறது.
நவசமசமாஜ கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஐக்கிய கூட்டமைப்பில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் வடக்கில் மட்டுமல்ல கொழும்பிலும் போராட வேண்டும் என விக்னேஸ்வரன் கூறினார்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டது என இராணுவப் பேச்சாளர் நாட்டுக்கு தெரிவிப்பதற்கு அப்பால் சென்று சர்வதேசத்திற்கும் அந்த செய்தியை வழங்க வேண்டும் என்றார்.

29/1/14

முரளிதரன், சந்திரகாந்தனிடம் விசாரணை நடத்த கோரிக்கை

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி நகரசபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய குறித்த இயக்கத்தின் உறுப்பினர் அஸ்ஸெய்க் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி, ’1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கல் மடத்தில் வைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் 2004ஆம் ஆண்டு பேத்தாளையில் வைத்து காங்கேயனோடையைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் விசாணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

காத்தான்குடி நகர சபையின் மாதாந்த கூட்டம் நகரசபை தலைவர் ஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நேற்று முன்தினம் (28) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்ட பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சபில் நழீமி, ‘இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகள்  காரணமாகவும், யுத்தம் காரணமாகவும் காணாமற் போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினை நாம் வரவேற்கின்றோம்’ என்றார்.

காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து காணாமற் போனவர்கள் தொடர்பிலான தகவல்களைச் சேகரித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், அந்த தகவல்களை மேற்படி ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை மேற்படி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இதற்கு காத்தான்குடிப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளான உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரேரணைக்கு ஆரதவு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்’ என்றார். குறித்த இயக்கத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளானவை,
 கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவைகளைத் தோண்டுதல்.
கடத்தப்பட்டு கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எலும்புக்கூடுகளை அடையாளங்கண்டு அவர்களுக்கான மரணச்சடங்குகளை உரிய சமய ஆசாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளல்.
   அவ்வாறு கடத்திக் கொல்லப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ;ட ஈடுகளை வழங்குதல்
.
   மேற்படி கடத்தல், கொள்ளைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவோரினை அடையாளங்கண்டு விசாரணைக்கு உட்படுத்தவும், உரிய தண்டனைகளை வழங்கவும் கோருதல்.

கடந்த 30 வருட கால இன முரண்பாடுகளால், யுத்தத்தினால் காணாமற் போனோர் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு இந்த பிரேரணையை பரிசீலித்து நிறைவேற்றுமாறு வேண்டிக்கொள்கின்றோம்’ என்றார்.

இதேவேளை, ‘பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டுமெனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்’ என தெரிவித்த சபில் நழீமி, இது தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சுயேட்சகை;குழு உறுப்பினர்களான ஏ.எல்.எம். சபீல், எம்.எச்.ஏ.நசீர் ஆகியோர் கையொப்பமிட்ட பிரேரணையையும் சபைக்கு சமர்ப்பித்தார்.

இந்த பிரேரணை தொடர்பில் ஆராய்ந்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், ஏற்கனவே காத்தான்குடியிலும் அதனை சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள்
தொடர்பாக சேகரிக்கப்பட்ட விபரங்களை காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கையளித்து அது தொடர்பாக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்துவருவதால் இவ்வுறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஏற்கனவே இந்த விவகாரம் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில் அரசியல் இலாபத்திற்காக இந்த பிரேரணை இவர்கள் சமர்பித்ததாகவும் இந்த வியடமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் நடவடிக்கை எடுத்து வருவதால் அவருக்கு இதற்கான ஒத்துழைப்பினை காத்தான்குடி நகர சபை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சுயேட்சைக்குழு காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதமும் கருத்துப் பறிமாறல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

12/1/14

வட்டுக்கோட்டைப் பகுதியில்படைமுகாமை அகற்றக்கோரி???

பிளாவத்தை படைமுகாமை அகற்றக்கோரி நேற்றிரவு பொதுமக்கள் போராட்டம்!  – பெண்களுடன் சேட்டை விட்டதால் மக்கள் கொதிப்பு.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பிளாவத்தை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை நேற்றிரவு மேற்கொண்டனர். குறித்த படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் அருகாகவுள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த பெண்கள்;

 மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்றிரவும் அருகாகவுள்ள வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக பெண்கள் வசித்து வரும் வீடுகள் மீதே படைமுகாமில் இருந்து கற்கள் வீசப்பட்டுள்ளன. இதையடுத்து திரண்ட பொதுமக்கள் படைமுகாமை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில்; குதித்தனர்.
   
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனிடையே சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் ஒன்று திரண்டு வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போதும் பொலிஸார் அம்முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். எனினும் முறுகல் நிலை

வலுவடைந்ததையடுத்து குறித்த முகாமைச் சேர்ந்த படையினர் அம்முகாமிலிருந்து வெளியேறி அருகாகவுள்ள பிரதான முகாமான வடலியடைப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அண்மையில் குறித்த முகாமினை சேர்ந்த சிப்பாய்கள் குளித்துக் கொண்டிருந்த கிராமப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதையடுத்து, அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தினால், அச்சிப்பாய்கள் முகாமிலிருந்து இடமாற்றப்பட்டதுடன் அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.