siruppiddy

31/1/14

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களுக்காக போராடினார்:

அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து வருவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை வட பகுதி மக்கள் விரும்பவில்லை.

அதேவேளை வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த சகலவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அவர் தமிழர்களுக்காக போராடிய ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் கூட நாட்டில் தமிழர்களின் போராட்டம் இடம்பெற்றுதான் வருகிறது.
நவசமசமாஜ கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஐக்கிய கூட்டமைப்பில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் வடக்கில் மட்டுமல்ல கொழும்பிலும் போராட வேண்டும் என விக்னேஸ்வரன் கூறினார்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டது என இராணுவப் பேச்சாளர் நாட்டுக்கு தெரிவிப்பதற்கு அப்பால் சென்று சர்வதேசத்திற்கும் அந்த செய்தியை வழங்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக