நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழத்தை அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெற்றுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் 15.02.16 நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும்
கூறுகையில், வடக்கு மாகாணத்தின் தனி ஈழ கோரிக்கை தற்போது வலுபெற்று வருகின்றது. அதற்கு தகுந்தாற்போல நல்லாட்சி அரசாங்கத்தினால் காய் நகர்த்தல்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு மாகாண ஆளுநரின் புதிய நியமனமானது முற்றிலும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும்.
வடக்கு மாகாணத்தின் பொலிஸ் கட்டுப்பாட்டை குறைக்கவும் புலிகளின் நிலமாக மாற்றியமைக்கவும், நிலங்களை விடுவிக்கவும் முன்னாள் வடமாகாண ஆளுனர் பளிஹக்கார இருக்கும்போது
முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பாவ செயல்களுக்கு ஒத்துழைக்காமையினாலேயே அவரை நீக்கிவிட்டு புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆளுனர் முன்னாள் ஜனாதிபதியின் தீவிர விசுவாசியாவார். மேலும் பிரபாகரனின்
தனிநாட்டு கோரிக்கையை
நிலைநாட்டுவதற்கே தற்போதுள்ள மைத்திரி- ரணில் பிரதிநிதிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
குறித்த விடயம் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் நல்லாட்சியை சீர்குலைக்கும் மற்றும் , யுத்த காலப்பகுதியில் இரத்தம் சிந்தி காத்த எமது படைவீரர்களை காட்டிக்டிகாடுக்கும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது. நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி
தமிழீழத்தை
அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுனர் நியமனம் இடம்பெற்றுள்ளதுமை தெளிவாகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்னணியில் இருப்பது சர்வதேச மற்றும் உள்நாட்டு
அரச சார்பற்ற
நிறுவனங்களின் பிரதிநிதிகளாவார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை விடுத்து புலிகளின் ஆயுதகளமாக மாற்றவே சர்வதேச நாடுகள் முயற்சிகள் மேற்கொள்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளால் நாடு அழிவுப்பாதையில் பயணிப்பது உறுதி என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக