* உன் பிறந்தநாள் இன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....
* அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும்,
அப்பாவின் தலைமுறை
விருதுக்கும் வளம் தந்த,
செல்ல மகன் நீ தானே...
* தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச அண்ணாவுக்கு
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...
* கொஞ்சிப் பேச ஒரு அக்காவும்,
சண்டை போட தங்கையும்
சமாதானம் பண்ண
குடும்பமுமாய்,
நாம் அடித்த கூத்துக்கள்
நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...
* நிலாச் சோறு ஊட்டிய
நாளும்,
உன் கைபிடித்து
உன்னை நான் பள்ளியனுப்பிய
நாளும்,
அப்பா உனக்கு வாங்கித்தந்த
பொம்மைக்காருக்காய்
உன்னிடம் சண்டை போட்ட
நாளும் என,
அழகான நம் மழலைக் காலம்
மனக்கண்ணில் ஓடுதடா....ஹேமா
* காலங்கள் உருண்டோட,
கனவுகளும் சேர்ந்தோட,
காலத்தின் கோலத்தில்
பொறுப்புகளும் சேர்ந்தாட,
நெருங்கியே இருந்த
நம் அன்பு,
இன்று...........
இதுவரை உன் அருகில் இருந்து
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...
* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
பொத்திப் பொத்தி
வளர்த்த நாட்கள்,
புழுதி நிறைந்த
புழுதி நிறைந்த மண்ணில் புதைத்திடத்தனோ......
* இங்கு பிடி சோறும்
நீ இன்றி
உள்ளிறங்க மறுக்கிறது
* இன்று உன் பிறந்த நாளில்,
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,
உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..
ஏழுப்பிறப்பென்பதில்,
எனக்கு நம்பிக்கை இல்லை...
அப்படி ஒன்று இருப்பின்,
என் ஏழுபிறவிக்கும்,
அன்னையாக, தந்தையாக
தம்பியாக, தங்கையாக
ஹேமா நீ வேண்டும்
என்று,
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....
* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....
இன்று உனக்காய் மலர்ந்த
இந்த மலர்கள் உன்னிடம்
சேர்க்கட்டும்........
வாழிய பல்லாண்டு......
இந்த இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக