ஒளிரும் நிலவே
வெண்ணிலவே
எத்தனை முகத்திற்கு
உவமையானாய்.
எத்தனை கவிஞர்க்கு
காதலியானாய்
புரிய முடியா மனிதர்க்கெலாம்
தூது சென்றாய்..
வளர்வதும் தேய்வதும்
வகுத்த விந்தையின் நியதியோ
நேசித்து கவி பாடும்
இயற்கையின் விந்தையோ
அபூர்வமாய் உன்
கன்னங்கள் சிவக்க
கலையை உணர்ந்து
கண்கள் விரிகிறதே..
நிலவே உனை நின்று ரசித்தால்
ஆன்மாவில் அடைபட்ட
துன்பம் எல்லாம்
எங்கோ இந்தப் பெருவெளியில்
தொலைகிறதே…
0 கருத்துகள்:
கருத்துரையிடுக