தமிழ் இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையே வேண்டும். அதுவே எமது மக்களின் நிலைப்பாடு என யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களிடம் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்
வலியுறுத்தியுள்ளார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் ஐந்து பேர் கொண்ட குழு முதலமைச்சரை அவருடைய வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது. இதனையடுத்து
குறித்த சந்திப்புத் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பினர்.
உண்மையில் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய மட்ட ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் நீண்டகாலமாக காணப்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு எதுவித நன்மையும் தீர்வும் எட்டப்படவில்லை என்பதை குறிப்பிட்டிருந்தேன்.
குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிகளவான இராணுவ பிரசன்னம் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை என்பவற்றை குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் தொடர்ச்சியாக மத்திய அரசாங்கம் அதிகாரங்களை தன்னகத்தே வைத்துள்ளது. அதனை மாகாண சபைக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவில்லை என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன். மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில்
உள்ளக விசாரணை கொண்டுவரப்பட்டால் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என அவர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. அத்தகைய நிலைப்பாட்டிலே வடமாகாணசபையும்
உள்ளது.
இந்நிலையிலேயே வடமாகாண சபையில் சர்வ தேச விசாரணையை வலியுறுத்திய பிரேரணை கொண்டுவரப்பட்டது. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக சர்வதேசத்தடன்
இணைந்த உள்ளக விசாரணையே கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் எமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரி ழந்துள்ளமைக்கு உள்ளக விசாரணை மூலம் எத்தகைய நீதியும் கிடைக்காது.
அவற்றில் எமக்கு நம்பிக்கையில்லை என்ற நிலை யிலேயே சர்வதேச விசாரணை வேண்டும் என அவர் களுக்கு தெரிவித்ததுடன் இதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கவேண்டும் என அவர்களிடம் கேட் டுக்கொண்டேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக