சுற்றிலும் சுவர்கள்
மேல் நோக்கி என் கண்கள்
வெறித்த பார்வை..!
மெல்லிதாக ஒரு மின்மினி வெளிச்சம்
எண்ணங்கள் பின்னோக்கின….
…….!!
மண்ணெண்ணெய் குப்பி விளக்கு நினைவுக்கு வந்தது
காற்றில் அதன் ஒளி அசைந்து
மங்கிய போதும்..
உற்றுப் படித்த நாட்கள்.
தெளிவான சிந்தனை
சுற்றிலும் உண்மைகள்
சோர்வில்ல கண்கள்
அரைவயிறாயினும் ஆனந்தம் கண்ட நாள்
அடுத்த நாளை பற்றிய சிந்தனை வந்ததில்லை
அன்பான உள்ளங்கள் அருகில் ….
இன்னும் எத்தனை எத்தனை ….:;
மீண்டும் மீண்டேன் சுயத்துக்கு
இன்று எல்லாம் உண்டு
நிம்மதி இல்லை
பொய்மைகள் ஏராளமான
உண்மைகள் இன்றி
அன்புக்குப் பற்றக்குறை
அதிலு ஏமாற்றம்
எதையும் நம்பமுடியா சூழல்…!!!
விரக்தியோடு எழுந்து
வழமையான கடமைக்குள்
உட்புகுந்தேன்.
ஆக்கம் ஜெசுதா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக