அப்புறம்!!!
நான் என்ன
கதையா
சொல்லிக்கிட்டிருக்கன்
லூசாடா நீ!!
அமிர்தம்
குழைத்த
அவஸ்த்தைக்காகவே
மறுபடியும்
கேட்டுக்கொண்டேன்..
அப்புறம்!!
இப்போதும்
யாரோ ஒருவர்
அதை பிரயோகிக்க
முயலுகையில்
என் பிரபஞ்சம்
உடையும்
ஓர் பிரமை…
எங்கிருக்கிறாய்
முடிந்தால்
மொழிந்து போ!
சமுத்திர
அலையின்
நுரையில்…
உன்
காலடித்தடங்களின்
இருப்பிடங்களை
கவர்ந்துகொண்டே
வந்துவிடுகிறேன்
கவிதை ஆக்கம்-அர்த்தனன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக