ஒவ்வொரு ஊருக்கு
ஒவ்வொரு விழா
இனிக்கும் திரு விழா!
கேரளத்தில் ஓணம்
என்றும் பெரு விழா..!
சோர்வுகள் கலைத்து
ஒற்றுமை தளைத்து
ஒருங்கே இணத்து
வடிவம் பெறும்
வண்ணத் திருவிழா..!
கோலங்களின் எழுச்சியும்
கோதையரின் ஆற்றலும்
கைத்திறன் நேர்த்தியும்
வர்ண வர்ணக் கோலங்களாய்
வீதியெங்கனும் காட்சிகளாய்
மெருகு பெறும் திருவிழா..!
கலைநயங்களின்
ஆரவாரங்கள்
நாட்டிய நடனங்கள்
நர்த்தகிகளின்
வித்தகத் திறனால்
அபிநயங்களாய்
அரங்கேறும் திருவிழா.!
ஓணம் எனும் விழாவுக்கு
ஓடங்கள் செலுத்தும்
போட்டி நிகழ்வும்
தனிச் சிறப்பு
ஆடவர் ஆட்சிக்குள்
ஓடங்கள் அணிவகுத்து
நதிகளில் வீரியமாகப்
பாய்ந்தோடும் பேரழகு
இன்றைய நாளில் அழகிய
திரு விழா கேரளத்தில்.!
வாழ்த்துவோம் வாரீர்.
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக