siruppiddy

5/1/14

பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்:

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.

முல்லிவாய்க்கால் முற்றம் தொடர்பாக 4வது கட்ட நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் விரைவு ரயிலில் புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

மீனவர்கள் பிரச்சனை தீரவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் மீனவ மக்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மீனவர்கள் நலன் பாதுகாக்க மீனவர் பாதுகாப்பு படை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

உலகிலேயே 5வது இடத்தில் இருக்கும் மிகப்பெரிய இந்திய கடற்படை சிங்களர்களின் கொட்டத்தை அடக்கி தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிவிட்டது. அதோடு தொடர்ந்து தமிழர்களின் விரோதப்போக்க்கையே இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஈழத்தமிழர்கள் கொல்லபட்ட முழு விபரங்கள் தெரியாது இருந்த போதே கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் பலர் தோற்கடிக்கப்பட்டனர். வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் அதோடு கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகளையும் மக்கள் முற்றிலுமாக தோற்கடிப்பார்கள் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக