siruppiddy

9/3/16

தமிழ் அரசியல் கைதிகள் குற்றவாளி கூண்டில் மயங்கி விழுந்தார் ?

வெலிக்கடை மகசீன் சிறையில் கடந்த 16 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 13 ஆண் கைதிகள் மற்றும் ஒரு பெண் கைதியும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
குற்றவாளி கூண்டில்  அவர்களில் இருவர் மயங்கி 
விழுந்துள்ளனர்.
மிகவும் தளர்ந்து போன நிலையில் காணப்படும் இந்த அரசியல் கைதிகள் சேலைன் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வழக்கு விசாரணைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆஜராகியிருந்த போதிலும் சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.
இரண்டு கைதிகள் குற்றவாளி கூண்டிலில் மயங்கி விழுந்ததை அடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு 
ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்து அடுத்த மூன்று தினங்களில் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக அறிவிக்கப்பட்டது என அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்ளும் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக