siruppiddy

11/11/20

ஊடகவியலாளர் மீது யாழில் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து தான் தாக்கப்பட்டதாக 
சுந்தரலிங்கம் முகுந்தன் எனும் குறித்த உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்
10-11-20.அன்று  நள்ளிரவு தொலைபேசியில் எச்சரித்தது மட்டுமின்றி  வீட்டிற்கு வந்த தமிழ் கொடி பணிப்பாளர் விமல் உள்ளிட்ட மூவர் அந்த இணைப்பை  அழிக்கச்சொல்லி தாக்கியதோடு மட்டுமில்லாமல் எனது தொலைபேசியையும் பறித்து சென்றுவிட்டார்கள் என அவர் 
தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட ஊடகவியலாளரான அவர் முன்னதாக வடக்கு ஆளுநரது ஊடக செயலாளராகவும்  பணியாற்றி வந்திருந்தார்.
இதனிடையே குறித்த இணைய தொலைக்காட்சியில் அவரது பாரியாரும் பணியாற்றி வருகின்றார்.
ஏற்கனவே சட்டவிரோத காணி பிடிப்பு தொடர்பில் குறித்த இணைய தொலைக்காட்சி குழுமம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் குற்றச்சாட்டு;ககளை முன்வைத்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக