siruppiddy

6/2/14

குண்டுமீட்கப்பட்டது திருமலையில்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு  கடற்கரைக்குபின் புறமாக முப்பது கிலோநிறை கொண்ட குண்டு  ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.   இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு  முப்பது கிலோநிறை கொண்டது.  நான்கு அடி நீளம் கொண்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இலங்கையில் இவ்வாறன குண்டு இதுவரை காலமும் பாவிக்கப்படவில்லை என்று கடற்படையினரும், இராணுவத்தினரும் தெரிவிக்கின்றனர்.   அந்த குண்டை சலப்பையாறு கடற்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக