siruppiddy

27/2/14

பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நிபுணர்கள் குழு

இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை கண்டறிய பொருளாதார நிபுணர்களை கொண்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ விதாரண ஆகிய அமைச்சர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

பொருளாதார தடைகளை விதிக்க கூடிய அளவில் பாரதூரமான நிலை தற்போது ஏற்படவில்லை என்றாலும் நிலைமை மோசமாகி இறுதியில் அப்படியான நிலைமை உருவாகினால் அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றின் ஊடாக விடயங்களை ஆராய்வது முக்கியமானது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக