siruppiddy

23/12/14

நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் கடிதங்கள்!

 நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் 
”இனி எந்த குழந்தையும் மரிக்க கூடாது”-கொழும்பு: இலங்கையில் போரின்போது காணமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு 15,000 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைப் பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை சேகரித்து அனுப்பியுள்ளது.

நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற செயல்கள் தொடர்பான புலனாய்வு குழுவினர் தங்கள் கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள்என்று நம்புவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக