siruppiddy

18/12/14

ஒப்புக்கொள்கிறது அரசாங்கம் தமிழ்மக்களை அரசியல் ரீதியாக வெல்ல முடியவில்லை! –

 
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை என வன வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தோம் அவர்களை வெற்றி கொண்டோம். ஆனாலும் எம்மால் தமிழ் மக்களின் அரசியலை வெற்றிகொள்ள முடியவில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அது சம்பந்தமாக எமக்கு எந்தவித பயமும் இல்லை. பிரச்சனையும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச ரீதியில் புலிகளின் நிதி கொடுக்கல் வாங்கலை நாங்கள் நிறுத்தினோம். கே.பி யை எமது பக்கம் எடுத்தோம். சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பான நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் செயற்பட்டு வந்தாலும் அதனை கெடுக்கும் வகையில் புலம்பெயர் விடுதலைப்புலிகள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக