siruppiddy

19/10/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் வெறும் நோட்டு.

கட்டுக்காட்டாய்
இவனருகில்
இத்தனை நோட்டுக்கள்.
இவன் பசி என்ன?
வயிற்றுப் பசியா?
அன்புப் பசியா!
ஆதரவுப் பசியா!

காலம் கைவிட்டதா!
காட்டுமிராண்டிகளுக்கு
கருக்கட்டியதா!
யாரோ கட்டிய
உயிர்க் கூடு இவன்
தரையின்றி
படரும் பயிரிவன்.;;!
ஏதுமறியா இவன்
கரங்களில் இருக்கும்
பணம் இவன்
உய்வதர்க்கு உரமிடுமா!?

உறவைத் தேடும்
அன்புப் பறவை
பாசத்தோடு பற்றிக்
கொள்வதற்கு
கொளுகொம்பாக
காலம் இவனுக்கு
வழிகாட்டுமா.
கருணைக் கண்கள்
இவனைக் தாங்குமா!
நாளாந்த வலிகளோடு
நலன் கெடும்
எங்கள் சமூகம்
நிமிர்வது எப்போ..!?
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக