siruppiddy

7/10/15

ஆக்கம் இணுவை சக்திதாசனின் கைம் பெண் !

என்ன பாவம் செய்தேனோ ?
எனக்கு தெரியாது 
நானறிய ஒரு பாவமும் செய்யவில்லை 
என்பது மட்டும் தெரியும்

கீரியும் பாம்பும்
சண்டை பிடித்தால் கூட
முன்னுக்கு சென்று விலக்கு பிடிக்க
பின்னுக்கு நின்றதில்லை என்றும்

ஏழையாய் இருந்ததினாலோ என்னமோ
ஏழைகளைக் கண்டால் மனம் அழும்

இடம் பெயர்ந்திருந்த போது
நானிருந்த முகாமில்
ஓடியோடி எல்லாமாய் இருந்த ஒருவர் மீது
புலம் பெயர்ந்தது மனம்

விழிகள் நோக்க
விடியாப் பொழுதொன்றில் – மஞ்சள்
கயிறும் இல்லாமலே …
இதயங்கள் இடம் மாறிக் கொண்டன
மாலை மாத்தாமலேயே …
மனங்கள் ஒன்றாகிக் கொண்டன

கூட அவர் இருந்ததினால்
கொள்ளை என்று ஏதுவும் இருக்கவில்லை
மாதம் ஒரு முகாமென்று
மாறி மாறி இடம் பெயர்ந்தாலும்
பாவற்காய் கூட தேனாய் இனித்தது
இனிப்புக்கு விருந்தாய் வயித்திலும் சனிச்சுது

அவசரமாய் கண்டிக்கு சென்று வாறனென்று
சென்றவர் தான் ….

ஆண்டுகள் பல மாண்டு விட்டன
ஆட்சிகள் பல மாறி விட்டன
கண்டு வந்ததாக சொன்னவர்கள்
முண்டு விழுங்குகின்றனர் வார்த்தைகளை

கூட பக்கத்தில்
அவர் நினைப்போடு …. நான்

ஏதேதோ …
பெயர் சொல்லி
அழைக்கின்றனர் என்னை

அவர் வரவுக்காய்
பூ சூடியபடி வாசலில் கோலமிட்டு காத்திருக்கிறேன் !

ஆக்கம்  இணுவையூர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக