siruppiddy

27/11/13

பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து ( படம் )

   தமிழீழத் தேசியத் தலைவர் என்று சொல்லப்படும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். அவருக்கு     இன்று நவம்பர் 26 ம் நாள் பிறந்த நாள். இந்த நாளை தமிழகத்தில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய படங்களைக் கூட வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கோட்ட மாவட்டம் திருவரங்குளத்தில் சாலையோரத்தில் பிரபாகரனுக்கு பிறந்த நாள் மற்றும் மாவீரர் தினத்திற்கு பதாகை வைத்து அசத்தியுள்ளனர் சில இளைஞர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு    , மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, செலுவாவிடுதி, திருச்சிற்றம்பலம்   சுற்றி உள்ள ஊர்களில் பிரபாகரன் படம் இல்லாத திருமண அழைப்பிதழ்களோ காதணிவிழா அழைப்பிதழ்களோ மொய்விருந்து அழைப்பிதழ்களோ காண்பதரிதாகும். அனைத்து  விழாக்களிலும் அவரது படம் தாங்கிய பதாகைகளைக் காணலாம். அந்தளவுக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் பற்றோடு இருப்பதைக் காணலாம்.

ஆண்டுதோறும் அவரது போராட்டக் காலங்களிலேயே தமிழர்கள் பகுதியில் நவம்பர் 26-ஆம் தேதியை பிரபாகரனின் பிறந்த நாளாகவும் 27-ஆம் தேதியை மாவீரர்கள் தினமாகவும் கடைப்பிடித்து வந்தார்கள். அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விழாக்கள் நடத்தப் பட்டன. அவை கவியரங்கங்களாகவும் பொதுக் கூட்டங்களாகவும் நடத்தியிருக்கிறார்கள். அது குறித்து நெருக்கடிகள் வந்த காலங்களும் உண்டு. நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று வந்து உணர்வாளர்கள் நடத்தியும் இருக்கிறார்கள்.

இப்போது முள்ளி வாய்க்கால் இறுதிப் போருக்குப் பின் அது போன்ற விழாக்கள் எங்கும் அதிகம் நடந்ததில்லை என்ற போதிலும் இன்று பிரபாகரன் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து திரவரங்குளம் கடைவிதியில்  பிறந்த நாள் பதாகை வைக்கப்பட்டுள்ளது

 

23/11/13

4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த வழக்கு :


                                           ஜெயலலிதவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி, நவ.23 (டி.என்.எஸ்) 4 தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு செய்திருந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது ஜெயலலிதா மற்றும் தொடர்புடைய தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்குதல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று தி.மு.க. எம்.பி.யாக இருந்த குப்புசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இடையில் இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான குப்புசாமி கடந்த மார்ச் மாதம் காலமானார். மனுதாரரின் மரணத்தைக் காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் நாகப்பட்டினம் தொகுதி எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல்.தத்து மற்றும் மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா ஆஜராகி வாதாடினார். குப்புசாமி காலமான நிலையில் இந்த வழக்கில் ஏ.கே.எஸ்.விஜயன் எதன் அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2001-ம் ஆண்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து மறைந்த குப்புசாமியுடன் இணைந்து ஏ.கே.எஸ்.விஜயனும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு மனுதாரர் குப்புசாமி காலமாகி இருந்தாலும் இந்த

விஷயத்தில் மனுதாரர் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் புகார் தாக்கல் செய்திருப்பதால் இந்த வழக்கைத் தொடர அவரை அனுமதித்து இந்த மனுவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார்.

அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இந்த மனுவின் மீது மேலும் விசாரணை தொடரும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நோட்டீசு வழங்குமாறு உத்தரவிட்டனர். நான்கு வாரங்களுக்குப்பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

22/11/13

தமிழீழம் மாதிரி பொதுவாக்கெடுப்பு தமிழகத்தில் முன்னெடுக்க இருக்கும் மாணவர்கள்


 
தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்ற அடிப்படையில் தமிழக மாணவர்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளனர் . 
இது குறித்து மாணவர்களின் அறிக்கை வருமாறு : 
இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம்.
ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்கள் மற்றும் மாணவர்களாகிய நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.
ஐ.நா மன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த மாதிரி பொது வாக்கெடுப்பின் முடிவுகளை சமர்பிக்க இருக்கிறோம்.
கட்சிகள், அமைப்புகள்,இயக்கங்கள் ,தனி நபர்கள் அனைவரும் தமிழர்களாக இணைந்து இந்த மாதிரி பொதுவாகெடுப்பினை வெற்றி பெறச் செய்வோம் .
இந்த நகர்வின் மூலமாக :- 
1) தனி ஈழத்திற்கு ஆதரவாக இத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறவும்..
2) பொது வாக்கெடுப்பே நமது கோரிக்கை அதுவே தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்கும் என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும்.. 
3) நமது கோரிக்கைகளை வலுவற்றதாக்கும் இந்தியாவின் சதிகளை முறியடிக்கவும் ..
தமிழக மக்களிடம் மாதிரி பொது வாக்கெடுப்பை எடுக்க இருக்கிறோம்! 
எங்களது வாக்குபதிவு செய்யும் மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் நிறுவ உள்ளோம் .பொதுமக்கள் அங்குவந்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.
இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு பதிவு செய்வோம்.
பெரு நகரங்களில் மக்கள் கூடும் வணிக வளாகங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்போம் .

இணைய தளத்திலும் வாக்கு சேகரிப்பு நடைபெறும்.
இதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் நமக்கு ஆதரவாக அவரவர் நாடுகளில் மாதிரி பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளார்கள் .
ஜனவரி 1 முதல் 15 வரை மாதிரி பொதுவாக்கெடுப்பு நடக்கும் .
தமிழீழமே தீர்வு என்பதை அதன் முடிவு தீர்மானிக்கட்டும் !
இவ்வாறு மாணவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். 

மாவீரர்களின் நினைவு வாரம் ஆரம்பம்


தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போன மாவீரரகளுக்காக ஆண்டுதோறும் காரத்திகை மாதம் 20 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரையில் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி வரையில் ஈழத்திலும், புலத்திலும் மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டது. ஆனால் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் புலம் பெயர் தேசங்களில் மாத்திரமே மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

புலம் பெயர்த் தமிழரகள் வாழும், பிரிட்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ், கனடா ஆகிய நாடுகளில் பெரும் உணரவுபூர்வமான எழுச்சியுடன் இன்று மாவீரரநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன

20/11/13

எழுச்சியுடன்ரொறன்ரோவில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள்:


உலகெங்கும் உள்ள தமிழர்களால் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகவும் எழுச்சிபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கனடாவிலும் மாணவர்களால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் மாவீரர் வணக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதாலாவது நாள் நிகழ்வுகளாக ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின்

டவுன்ரவுண் வளாகத்திலும், ஹமில்டன், மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இவற்றில் மிகவும் உணர்வுபூர்வமாக மாணவர்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான தமது வணக்கத்தை செலுத்தினர். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய

இந்நிகழ்வுகளில் எழுச்சி நடனங்கள், உரைகள் போன்ற பல இடம்பெற்றன. எத்தகைய தடைகள் வரினும் தலைவர் காட்டிய வழியில் தொடர்ந்தும் தளராது பயணிப்போம் என மாவீரர்கள் மீது மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.






14/11/13

அஞ்சலி செலுத்திய கனேடியப் பிரதிநிதிகள்!


போரில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதிநிதிகள் நேற்று ஆனையிறவுப் பகுதியில் அஞ்சலி செலுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தந்த கனேடிய பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.ஆயர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

சந்திப்பின் பின்னர் ஏ – 9 வீதியின் வழியாக கிளிநொச்சி செல்லும் வழியில் ஆனையிறவில் போர்வெற்றி நினைவுத்திடல் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் உள்ளே சென்று, போரில் உயிரிழந்தவர்களுக்காக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி

 செலுத்திய பின்னர் கொண்டு வந்திருந்த மலர்வளையத்தினை தம்கூடவே எடுத்துச் சென்றனர்.
இது பாதுகாப்பு வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, கொமன்வெல்த் அமைப்பு

பழ.நெடுமாறன் சுண்டெலி மிரட்டுகிறது யானை பதுங்குகிறது! -



‘கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.

அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர் எந்த வரம்பிற்கு உட்பட்டுப் பேச வேண்டுமோ அந்த வரம்பைத் தாண்டி அவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் தலைநகரிலேயே இந்த மிரட்டலை விடும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு நாட்டின் தூதர் இது போன்று வரம்பு மீறினால் அவரை வெளியுறவுத்துறைச் செயலாளர் அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இவரின் மிரட்டலுக்கு இந்திய அரசின் சார்பில் யாருமே எத்தகைய கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சின்னஞ்சிறு நாடான இலங்கையின் தூதர், உலகில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவை பகிரங்கமாக மிரட்டுகிறார். யார் யாரோ கொஞ்சமும் மதியாமல் எடுத்தெறிந்துப் பேசுகிற நிலை இந்தியாவிற்கு வந்திருப்பது குறித்து அனைவருமே வெட்கப்பட வேண்டும். அதிலும் உலக நாடுகளுக்கு முன்பாக இனப்படுகொலைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இராஜபட்சவின் தூதுவர் துணிந்து அச்சுறுத்துகிறார் என்றால், இந்தத் துணிவு அவருக்கு எப்படி வந்தது?

இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களும் இன அழிப்பு நடவடிக்கைகளும் கடந்த நான்காண்டுகளைக் கடந்து இன்னமும் தொடர்கின்றன. டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும், ஐ.நா. மனித உரிமை ஆணையரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அறிவித்த பிறகு, உலக அரங்கில் தலை குனிந்து நிற்க வேண்டிய குற்றவாளி தலை நிமிர்ந்து நின்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடும் அளவிற்குத் துணிவு பெற்றிருப்பது எதனால்? யாரால்?

இலங்கையின் தமிழ்ப் பகுதியில் சொல்லொணாக் கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன. பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை, போரில் கணவரை இழந்த பெண்களை இராணுவத்தினரின் இச்சையைத் தீர்க்கும் பாலியல் தொழிலாளிகளாக ஆக்குவது, சிங்கள இராணுவத்தினருக்குத் தமிழ்ப் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது போன்ற இனத்தின் அடையாளத்தையே அழிக்கும் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.

2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில், வெற்றி விழா கூட்டத்தில் முழங்கிய இராஜபட்ச, ‘எதிர்காலத்தில் இலங்கையில் இரு இனங்கள்தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம். மற்றொன்று சிங்களக் கலப்பினம்’ என்று மார்தட்டிக் கூறியதை நடைமுறையில் செயல்படுத்தும் வேலையில் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது.

படிப்படியாக நடத்தப்பட்டு வருகிற இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா எதுவும் செய்யவில்லை. மாறாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் பிற சர்வதேச அரங்குகளிலும் உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தன்னை ஆதரித்துத் தீர வேண்டிய நிலையிலிருந்து இந்தியா ஒரு போதும் மாற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இராஜபட்ச தனது தூதுவரை வைத்து இந்தியாவை வெளிப்படையாக மிரட்டுகிறார். கரியவாசம் மட்டும் இவ்வாறு பேசியிருக்க முடியாது. அவருக்குப் பின்னணியில் இருந்து இராஜபட்சதான் இவ்வாறு பேச வைத்திருக்க வேண்டும்.

இதற்கு பதில் கூறத் துணிவில்லாமல், ‘கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துக் கொள்ளாவிட்டால் நம்முடைய பொருளாதார, வர்த்தக நலன்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்` என கற்றுக் குட்டி மத்திய அமைச்சர் ஒருவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இந்தியாவின் கடந்த கால வரலாறு சிறிதளவு கூடத் தெரியவில்லை.
தென்னாப்பிரிக்கா தனது நிறவெறிக் கொள்கையை கைவிட வேண்டும் அல்லது கொமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும் என்று

கொமன்வெல்த் மாநாட்டில் அன்றைய பிரதமர் நேரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவை கொமன்வெல்த்திலிருந்து வெளியேறவும் வைத்தார். அவரைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா செயல்பட்டார். 1976-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பு

மேற்கொள்ளவும் இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவும் வேண்டுமென ஐ.நா. பேரவையில் இந்தியாவும் மேலும் பல நாடுகளும் இணைந்து கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்களுக்கும், தமிழர்களுக்கும் விடிவு கிடைக்க இந்தியா வழி செய்தது. வெள்ளையர் ஆட்சி மறைந்து அந்நாட்டு மக்களின் உண்மையான ஆட்சி ஏற்பட்டது, வெஞ்சிறையில் 27 ஆண்டு காலம் வாடிய நெல்சன் மண்டேலா அந்நாட்டின் அதிபரானார். ஆனால் நிறவெறியை விட மோசமானதான இனவெறியைக் கடைப்பிடித்து தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இராஜபட்சக்கு துணை நின்று தோள் கொடுக்கும் கைங்கரியத்தை பிரதமர் மன்மோகன் சிங் செய்து வருகிறார்.இத்தகையச் செயல்களின் மூலம்

சீனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிற இராஜபட்சவை இந்தியாவின் பக்கம் ஈர்த்து விட முடியுமென நம்புவது, கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போன்றதாகும். இந்த உண்மையை இந்திய அரசு என்றைக்கு உணர்கிறதோ அன்றைக்குதான் கரியவாசம் போன்றவர்கள் இந்தியாவை அவமதிப்பது நிற்கும்.

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்பது நமது கோரிக்கையல்ல. இனவெறி இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அப்படி நடத்தப்பட்டால் அதன் மூலம் இரண்டாண்டு காலத்திற்கு கொமன்வெல்த் அமைப்பிற்கு இராஜபட்ச தலைமை தாங்கும் நிலை ஏற்படும். சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய ஒருவருக்கு அரசியல் ரீதியாக இது போன்ற உயர்ந்த தகுதி அளிக்கப்படுவது, அவர் மீது

உள்ள குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்கு உதவுவதாகும் என்பதுதான் நமது எதிர்ப்புக்குக் காரணம்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா செயல்பட்டிருக்குமானால் கொமன்வெல்த் அமைப்பில் உள்ள பல நாடுகளும் இந்த கோரிக்கையை ஆதரித்து அதன் விளைவாக மாநாடு வேறொரு நாட்டிற்கு

மாற்றப்பட்டிருக்கும். இராஜபட்சயும் அடங்கி ஒடுங்கியிருப்பார். செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய இந்தியா முன் வராததால் யார் யாரோ மிரட்டுகிற நிலைக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது.

சின்னஞ்சிறிய சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மாறாத தலை குனிவைத் தேடித் தந்து விட்டது. கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளப் போகிறதா அல்லது புறக்கணிக்கப் போகிறதா என்பதோ, பிரதமர் கலந்து கொள்கிறாரா இல்லை வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்கிறாரா என்பதோகூட அல்ல பிரச்சினை.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக இருக்கும் ஒருவர், 120 கோடி மக்கள் தொகை கொண்ட, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டை மிரட்டுகிறார், ஆலோசனை கூறுகிறார் என்றால், அதற்காகத் தலைகுனிய வேண்டியவர் பிரதமர் மட்டுமல்ல, அவரை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கும் இந்தியக் குடிமக்கள் அனைவருமேதான்!