siruppiddy

5/2/15

துப்பாக்கிச்சூடு! கோத்தா படைப்பிரிவு மீது சந்தேகம்!!

 வவுனியாவினில் துப்பாக்கிச்சூடு! புதிய அரசிற்கு தலையிடி கொடுக்கும் வகையிலான கோத்தா படைப்பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் இலங்கை காவல்துறை மீது இன்று வியாழக்கிழமை
 அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தற்போது காயமடைந்த நிலையில் வவுனியா, பொது வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார.; வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை மீதே இனந்தெரியாதோர் இந்த தாக்குதலை
நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக காலில் காயமடைந்த காவல்துறை அதிகாரியை உடனடியாக வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதித்துள்ளனர். வடக்கு முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் விசுவாசப்படைகள் தயாராகிவருவதாக கூறப்படுகின்ற நிலையினில் 
இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக