siruppiddy

26/2/15

மீண்டும் கே.பியின் வழக்கு ஒத்தி வைப்பு!

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள கே.பியை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஜே வி பி தாக்கல் செய்திருந்த மனு இன்று சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது கே.பி தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு ஆறு மாத காலம் அவசியம் என்று சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.
அத்துடன் கே.பிக்கு எதிராக 193 குற்றங்கள் 
சுமத்தப்பட்டுள்ளதாகவும், 
இதனை விசாரணை செய்துவருவதாகவும் சட்ட அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி கூறினார்.இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதன்படி மீண்டும் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையில் பிற்போட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக