siruppiddy

29/7/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் தண்டவாளம்..!

பரந்த வெளி தனில்
எங்கள் பயணம்.
முட்டாமல் நீளுது.
அக்கம் பக்கம்
எட்டும் தூரமெனினும்
தொட்டு விட முடியாத
நீள் பயணம்..!

உனக்கும் எனக்கும்
இருக்கும் இடைவெளி
சுருங்கிட வழியில்லை.
நெருங்கிட நினைத்தால்
அடுத்தவன் வாழ்க்கை
நொருங்கிடுமாம்..!
..
நினைவுகள் நித்தம்
நெஞ்சோடு நீளுது.
கனவுகள் யாவும்
கைகூடாமல் கழியுது.
உள்ளத்து உணர்வுகள்
உறங்காமல் உலையுது.!

வாழ்க்கைப் பயணத்தில்
ஈரம் இல்லாமல்
இயங்குது நம் சுவாசம்..
சேராமல் போனாலும்
சோராமல் நகருது.
இரும்பான எங்களுக்குள்
கரும்பான காதலால்
இதயமும் கனக்குது..!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக