siruppiddy

23/11/15

சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!-

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்தின் முன் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி செயலாளர் அபேகோனும் கலந்து
 கொண்டனர்.
நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் நம்பிக்கையான முறையிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க முறையிலும், செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இதன்போது சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றங்களினால் நாட்டுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதோடு, இலங்கையின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அந்த நல்லிணக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு அவதானத்துடன் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகளின் போது பல்வேறு தரப்பினரதும் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அவை குறித்து மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி சமந்தா பவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்தல், வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியிடம் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரி்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக