siruppiddy

28/5/16

நன்னெறிக் கோவைபொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகம்!

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே,
பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பதவி நிலை அதிகாரிகளுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைக்கு அது தொடர்பான வரைபு அச்சில் உள்ளது. எதிர்வரும் ஜுன் மாதமளவில் குறித்த நன்னெறிக்கோவை பொலிஸ் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்படும்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளவும், சிறப்பான முறையில் கடமைகளை மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நன்னெறிக்கோவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தத்தமது கடமைகளில் பொலிசாரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை வெளிக்காட்டும் வகையிலும் ஊக்குவிக்கப்படும் என்றும் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக