siruppiddy

29/9/13

தென்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டமைப்பு


தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை

தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை

வழங்கியுள்ளனர். அத்துடன் தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அங்குள்ள
தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என கூட்டமைப்பு எண்ணுகிறது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக