siruppiddy

10/9/13

அரசு தருவதை தாராளமாக வாங்குங்கள் ஆனால் வாக்குகளை,,


அரசாங்கத் தரப்பு தங்களுடைய சொந்தப் பணத்தையோ பொருட்களையோ உங்களுக்குத் தரவில்லை. தேர்தல் காலத்தில் உங்களை ஏமாற்றி வாக்குகளைக் கொள்ளையிடுவதற்காக அரசாங்கம் தலைகீழாக நின்று உங்களுக்கு அள்ளி வழங்க முன்வருகின்றது. நீங்கள் எவரும் அரசாங்கம் தருவதைப் புறக்காணிக்காது அப்படியே அனைத்தையும் வாங்குங்கள்.

 ஆனால் உலகமே எதிர்பார்த்துக் காத்து நிற்கும் இந்தத் தேர்தலில் உங்கள் வாக்குக்களை எமக்கு அளித்து தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையை உலகுக்கு காட்டுங்கள் என வடமாகாண வாக்காளர்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்டபாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக