siruppiddy

17/11/14

வலி.வடக்கை சுவீகரிக்க இராணுவம் சதி!

எடுபிடிகள் சகிதம் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையினில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமினில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் குடியமர்ந்த காணிகளை பகிர்ந்தளிக்க இலங்கை இராணுவம் முன்னெடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வலி.வடக்கினை நிரந்தரமாக ஆக்கிரமிக்க ஏதுவாக இடம்பெயர்நத நிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் தற்போது குடியமர்ந்துள்ள காணிகளை பகிர்ந்தளித்து அவர்களது வாய்களை மூடிவிட இலங்கை அரசு முற்பட்டுள்ளது.அவ்வகையில் இன்றைய தினம் அவ்வாறாக மக்கள் தங்கியிருக்கும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம் காணியினை அளவீடு செய்யவென தனியார் நில அளவையாளர்கள் சகிதம் 515 படைப்பிரிவை சேர்ந்த படையினருடன் சுதந்திரக்கட்சியின் உள்ளுர் முகவரொருவரும் களத்தில் குதித்துள்ளனர். இதற்கு முகாமிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோருக்கு தகவல் வழங்கியிருந்தனர். அதையடுத்து அங்கு வந்திருந்த அவர்களும் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. எனினும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரோ தமக்கும் அளவீட்டு பணிகளிற்கும் தொடர்புகள் இல்லையெனவும் பலாலியினிலிருந்து வருகை தந்த படையினரே அளவீடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான காணியையே இடம்பெயர்ந்த மக்களிற்கு பங்கிட்டு வழங்க முயற்சிகள் நடந்துள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக