siruppiddy

6/11/14

சிங்களமயமாகின்றது! கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி "லங்கா பட்டண" என பெயர் மாற்றம்!

இதிகாசங்களின்படி இராவணனால் உருவாக்கப்பட்ட கோணேசர் கோவிலுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்ட இவ்வெந்நீர் ஊற்று தற்போது பௌத்தம் சார்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அத்துடன் அண்மையில் இருந்த சிவன் கோவிலும் வில்கம் விகாரையாக மாற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்கள் வழிபட்டுவந்த ஒரு கட்டிடத்தின் மூலையில் இருந்த சிவன்-பார்வதியின் வழிபாடும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான புதிய வரலாறும் பிக்குவினால் சிங்களத்தில் ஒலிபெருக்கியில் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சிங்களமக்கள் எவருமே வாழாத தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசமான இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 2006ம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள பாரிய பவுத்த விகாரை இதுவாகும். காலப்போக்கில் இது சிங்களப் பிரதேசமாக "லங்கா பட்டண" என பெயர் மாற்றமடையலாம்.
தமிழர்களின் கலை, கலாச்சார அம்சங்களை எமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையல்லவா?

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக