siruppiddy

12/1/15

கற்பழிப்பு குற்றச்சாட்டு ராஜபக்சே மகன்கள் மீது!!

 இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார். 
 ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது அவருடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது.இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்திருப்பது தற்போது
 தெரிய வந்துள்ளது. 
குறிப்பாக, இவர்கள் மூவரும் ஏராளமான பெண்களை வலுக்கட்டாயமாக கற்பழித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது பற்றிய தகவலை ஜாதிக ஹெல உறுமய என்னும் புத்த மத அமைப்பின் 
தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்கே கொழும்பில் நிருபர்களிடம் தெரிவித்தார். 
இந்த நிலையில் ராஜபக்சேயின் தேர்தல் தோல்விக்கு பின்பு, அவருடைய சகோதரரும், முன்னாள் மந்திரியுமான பசில் ராஜபக்சே தனது மனைவியுடன்  அதிகாலை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக