siruppiddy

8/1/15

தேர்தலை முன்னிட்டு தொடங்கியது தபால் மூல வாக்களிப்பு!

ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ அஞ்சல் மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்று ஆரம்பமாகியுள்ளது. இது நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதற்கமைய வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று யாழ்.மாவட்டத்திலுள்ள மாவட்ட செயலகம்,கல்வி வலயங்கள் ,கோட்டங்கள் ,மற்றும் பிரதேச செயலகங்களில் நண்பகல் வரை அஞ்சல் மூல வாக்களிப்புகள்இடம்பெற்று வருகின்றது.பலாலி உள்ளிட்ட படைமுகாம்களினிலும் வாக்களிப்பு படையினருக்கு நடந்துவருகின்றது.
இந்த முறை யாழ்.மாவட்டத்தினில் 5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் அலுவலகங்களுக்குள்ளோ அல்லது வெளியிலோ தேர்தல் சட்ட விதிமுறையை மீறிச் செயற்படுவோர்க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும் நாளையும் வாக்களிக்கத் தவறியவர்கள் 30 ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக