siruppiddy

8/1/15

தேர்தல்: வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து

இலங்கையில் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அது மிகத்தெளிவாக தெரிகிறது. நாளை முதல் எங்கள் கொள்கைகளை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவோம் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறீசேனாவிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு தேர்தல் வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதை கண்டிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கெர்ரி, தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக