siruppiddy

21/1/15

விரைவாக நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்! -

ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வு விரைவாக வழங்கப்பட வேண்டும்! - நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை. 
தமிழ் மக்­கள் பல தசாப்­தங்­க­ளாக எதிர்­கொண்டு வரும் பிரச்­சினைக்கு ஐக்­கி­ய­ இலங்கை எனும் கட்­ட­மைப்­புக்குள் நிரந்தர­மா­னதும் நீடித்து நிலைக்கக் கூடி­யதும் நியாயபூர்­வ­மா­னதும் அதே நேரம் பல­ன­ளிக்கக் கூடி­ய­து­மான தீர்­வொன்­றையே நாம் எதிர்­பார்க்­கின்றோம். இந்த இலக்­கினை அடைந்து கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முழு­மை­யான ஆத­ர­வினை வழங்கும் என்று கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றி­ருக்கும் மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கும் அவ­ரது புதிய அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.அதேபோல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு வாக்­க­ளித்த நாட்டின் அனைத்து தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கும் நன்­றி­யையும் தெரி­வித்துக் கொள்­கிறேன்.
ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­வி­த­மான நிபந்­த­னை­களும் இன்­றிய நிலை­யி­லேயே மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தது. அத்­துடன் நாம் ஆத­ரவு வழங்­கு­கிறோம் என்­ப­தற்­காக எந்­த­வொரு பத­வி­யையும் கோர­வில்லை.இன­வாதம் மற்றும் இன­வாத உணர்­வு­களைத் தூண்­டு­வதன் மூல­மான தேர்தல் இலாபம் அடைதல் உள்­ளிட்ட விட­யங்­க­ளையும் அவற்­றி­னூ­டான முயற்­சி­க­ளையும் நாம் அறிந்தே வைத்­தி­ருந்தோம்.
எப்­ப­டி­யி­ருப்­பினும் இவ்­வா­றான முறை­கேட்டுப் பிர­சா­ரங்­களில் இறங்­கு­ம­ள­வுக்கு நாம் யாருக்கும் சந்­தர்ப்­பங்­களை அமைத்துக் கொடுத்­தி­ருக்­க­வில்லை. எமது தேர்தல் நட­வ­டிக்­கைகள் முழு நாட்­டுக்கும் எடுத்துக் காட்­டாக இருந்­தது.முன்னாள் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக தேர்தல் பிர­சாரக் காலம் முழு­வதும் அரச வளங்கள் மிகவும் அதி­க­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இவ்­வா­றான அரச அதி­காரம் மற்றும் வளங்கள் துஷ்­பி­ர­யோகம் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யிலும் மைத்­தி­ரி­பால சிறி­சேன பர­வ­லான ஆத­ர­வினைப் பெற்று வெற்றி பெற்­றுள்ளார்.
வடக்­கிலும் கிழக்­கிலும் அதே போன்று முழு நாட்­டலும் தமிழ் மக்­களும் தமிழ் பேசும் மக்­களும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தீர்­மா­னத்­துக்கு ஒரு­மித்த பதிலைப் பெற்றுக் கொடுத்­தி­ருந்­தனர். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மனப்­பூர்­வ­மான ஆத­ர­வினைப் பெற்றுக் கொடுத்த அந்த மக்­க­ளுக்கு எமது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.தமிழ் மக்­களும் தமிழ் பேசும் மக்­களும் நாட்டின் அனைத்து மக்­க­ளுடன் இணைந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நூறு நாள் வேலைத் திட்­டத்­தினை உள்­வாங்கி ஆட்சி மாற்­றத்­துக்கும் வழி வகை செய்­துள்­ளனர்.
இந்­நி­லையில் பல தசாப்­தங்­க­ளாக தமிழ் மக்கள் எதிர்­கொண்டு வரு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு ஒன்று காணப்­ப­டுதல் வேண்டும். ஐக்­கி­ய­மா­னதும் அதே நேரம் பிள­வு­ப­டா­த­து­மான இலங்கை எனும் கூட்­ட­மைப்­புக்குள் நிரந்­த­ர­மா­னதும் நீடித்து நிலைக்­கக்­கூ­டி­யதும் அத்­துடன் பல­ன­ளிக்கக் கூடி­ய­தான தீர்­வையே எதிர்­பார்க்­கின்றோம். இதற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முழு ஆத­ர­வினை வழங்கி ஒத்­து­ழைக்கும்.
60 வரு­டங்­க­ளுக்கு மேலாக நிலைத்து வரும் இப்­பி­ரச்­சி­கைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைகளால் இந்நாட்டுக்கு பெரும் பாதிக்குக்களே ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே முழுநாட்டினதும் நலன் கருதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 அத்துடன் இது அவசரமான விடயமாகவும் கருதப்பட வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு நாம் பூரணமாக ஒத்துழைப்போம். ஏனைய மக்களும் இதற்கு ஒத்துழைப்பர் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக